புதன், நவம்பர் 30, 2011

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “

thang,s by ***வாஞ்ஜுர்*** p by; thamiz nesan

மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……
எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.

அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?.




மனிதர்கள் மட்டுமா?


அல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ



55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)


Muslims pray in the streets of France.


Dr. Sheikh Muszaphar Shukor Praying in outer space (from "Muslim in Space" DVD)


If You Are Muslim Then Must Watch You'll Be Cry


Muslims pray in a Church, USA.


This is what happened to a Muslim to pray in America


World's most Beautiful View In Germany - Muslims Praying in Public


ஒன்றே குலம். ஒருவனே தேவன்

சகுனம் பற்றி இஸ்லாம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்


மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.

எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுனத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!

‘சகுனம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.

இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: -

அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.

இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:

பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.

இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!

சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுனம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!

சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால் பரக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பரகத் கொட்டும் என எண்ணுதல்!
பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல்.

பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!

வீட்டிலோ தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெரிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.

இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுன முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம்இ சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.

இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுனம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.

ஆக சகுனம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுனம் இணைவைப்புக்கான வாயிலாகும்.

இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: -

‘சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.

சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.

சகுனமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)
(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).

மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.

சகுனம் பற்றிய சட்டம்: -

சகுனத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)

சகுனத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெரிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுழைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். ‘அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.

சகுனம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்: -

சகுனம் பார்ப்பதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.

எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது
தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது
ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது

சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது
மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது
வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது

அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று
நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு

நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்
அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!

சகுனம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்… போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல்

பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெரியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!

இது சகுனம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுனத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!



ஜசஹ்கல்லாஹ் கைர் : மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) & சுவனத்தென்றல்

துறவறம் பற்றி இஸ்லாம் ?????

ஏகஇறைவனின் திருப்பெயரால்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்கள்: -

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள்.

நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.

(அதற்கு) நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவிராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை விட்டு விடுவீராக!

ஏனெனில், உம்முடைய உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;

உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;

உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;

உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு.

உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப் படாமல் போகலாம். (எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்’ என்று கூறினார்கள்.

ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் ‘(இறைத்தூதர் அவர்களே!) இதற்கு மேலும் என்னால் முடியும்’ என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக் கொள்க’ என்றார்கள்.

நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன். அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. ‘இதற்கு மேலும் என்னால் முடியும் (இறைத்தூதர் அவர்களே!)’ என்றேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் இறைத்தூதர் தாவூத் அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக் கொள்வீராக’ என்றார்கள்.

‘இறைத் தூதர் தாவூத் அவர்களின் நோன்பு எது?’ என்று கேட்டேன்.

‘(ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோற்பதால்) ஆண்டில் பாதி நாள்கள் நோற்பதாகும்’ என்று பதிலளித்தார்கள். ஆதாரம் : புகாரி.

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்கள்: -

சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களையும் அபுத்தர்தா (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான் (ரலி) அவர்கள் அபுதர்தா (ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா (ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.

அதற்கு உம்முத் தர்தா (ரலி), ‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்’ என்றார்.

பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து சல்மான் (ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள்.

பிறகு ‘சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்’ என்றார்கள்.

அபுத்தர்தா அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ‘நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்’ என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள்.

எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள்.

அப்போதும் சல்மான் (ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள்.

இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான் (ரலி) அவர்கள் ‘இப்போது எழுங்கள்’ என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம்,

‘உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன.

மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன.

உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன.

எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்’ என்று கூறினார்கள்.

பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை கூறினார்கள். அதற்கு) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘சல்மான் உண்மையே சொன்னார்’ என்றார்கள். ஆதாரம் : புகாரி.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் : -

1) முஃமினான ஒருவர் தம் இல்லறத்தை துறந்து நான் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்கப் போகிறேன் என்று செல்ல இயலாது

2) ஒரு முஃமின் தன்னுடைய உடலுறுப்புகளுக்கு பொறுப்புதாரியாவார். அவற்றிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய அவர் கடமை பட்டுள்ளார்.

3) முஃமினான ஒருவர் தம் மனைவியர், குடும்பத்தார்களுக்கு மற்றும் விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி துறவறம் பூண அனுமதியில்லை.

4) ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு

5) மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.எனவே, இது வருடம் முழுவதும் நோன்பு நோற்றதாக அமையும்.


by////Cuddalore MuslimFriends

கேலி, கிண்டலால் உருவாகும் கலாட்டாக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் சகோதரத்துவம் என்றால் அது எப்படிப்பட்டது என்பதை நடைமுறையில் செய்துகாட்டி உலகுக்கு உணர்த்தியவர்கள் அன்சாரிகள் என்பதையும் அப்படிப்பட்ட அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை சீர்குலைப்பதற்காக எந்த அதிகாரத்திலும் தங்களுடைய உறவினர்களை முன்னிலைப்படுத்தாமல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய மாமி மகனை இதில் புகுத்தி இருவருக்கும் மத்தியில் ஷைத்தான் கோபத்தை மூட்டி விட்டதையும் அதை அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிதானமாக கையாண்டு முறியடித்த விதத்தையும் இதற்காகவே அல்லாஹ்விடமிருந்து திருவசனம் இறங்கியதையும் பார்த்தோம்.

இதேப்போன்று அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் இன்னுமொரு தடவை கோபத்தின் மூலமாக கலகத்தை வெடிக்கச்செய்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளிய சம்பவமும் உண்டு.

கேலி, கிண்டல்.
கோபம் பல வழிகளில் மனிதனை ஆக்ரமிக்கும் அதில் மிகவும் இலகுவான ஒரு வழி கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுகின்ற வழியாகும்.

எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரியான மூடில் இருக்க மாட்டார்கள் சில நேரத்தில் மூட்அவுட்டில் இருப்பார்கள் மூட்அவுட்டில் இருப்பவர்கள் அவ்வளவாக முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் காரணம் மூட்அவுட்டுக்கான சம்பவங்களில் சிலவற்றை வெளியில் சொல்ல முடியாததாக இருக்கும் அதனால் முகத்தில் பாவனை செய்து கொண்டிருப்பார்கள் உள்ளத்தில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இது ஷைத்தானுக்குத் தெரிவதால் இந்த நேரத்தில் கலகத்தை உண்டுப் பண்ணி விடுவதற்கு ஆர்வம் கொள்வான்.

எப்பொழுதும் விலாப்பகுதியில் ஒரு கிள்ளு கிள்ளுபவர் அன்றும் எதார்த்தமாக கிள்ளி விடுவார் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு நெளிபவர் அன்று ஓங்கி ஒரு அறை விட்டு விடுவார். இது அவர்கள் இருவருக்கு மத்தியில் கை கலப்பில் தொடங்கி அவர்கள் இருவருடன் இது நின்று விடாமல் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டையாக மாறி விடுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் இதை அனைவரும் அதிகபட்சம் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.பெரும் பாவங்களில் அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் விழவைக்க முடியாத ஷைத்தான், அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உடைக்க முடியாத ஷைத்தான் இதுபோன்ற வழிகளிலும் அவர்களைப் பிரித்து விடுவதற்கான வேலைகளை பல தடவை செய்தே வந்தான்.


அறியாமை காலத்து அறைகூவல்
ஒரு நாள் பனூமுஸ்தலக் யுத்தத்திற்கு செல்லும் வழியில் முகாமிட்டிருந்த பொழுது முஹாஜிர் ஒருவர் அன்சாரி ஒருவருடைய புட்டத்தில் விளையாட்டுக்காக தட்டி விடுகிறார் அன்சாரிக்கு சடேரென கோபம் வந்து விடுகிறது அதனால் இருவருக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அன்சாரிகளும், முஹாஜிர்களும் இரு அணியாக நின்று மோதும் அளவுக்கு நிலமை தீவிரமடைந்து விடுகிறது.

அன்சாரிகளே ஓடி வாருங்கள் என்று கடும் கோபத்திலிருந்த அன்சாரி குரலெழுப்ப முஹாஜிர்களே ஓடி வாருங்கள் என்று முஹாஜிர் குரலெழுப்ப கூடாரத்திற்குள் இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்த கூச்சல் காதில் விழ கூடாரத்தை விட்டு வெளியே வந்து இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து நிலமையைக் கட்டுப்படுத்தினார்கள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மட்டும் அங்கிருந்திருக்க வில்லை என்றால் கலகம் பெரிதாக வெடித்திருக்கும் காரணம் அன்சாரிகளுடன் இஸ்லாத்தில் இணைந்து முனாஃபிக் வேடமிட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு உபை கூடவே இருந்து பிரச்சனையை அணைய விடாமல் ஊதிப் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். .

இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் சமாதானப்படுத்தி விட்டு நகர்ந்ததும் அன்சாரிகளின் வேகம் தனிவதற்குள் அவர்களிடம் சென்று மதீனாவிற்கு திரும்பியதும் இவர்களை ஒரு கைப் பார்த்து வெளியேற்றி விடுவோம் என்றுக் கூற இதைக்கேட்ட மாவீரர் உமர்(ரலி) அவர்கள் அவனுடைய தலையை வெட்டாமல் விடக்கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூற அதற்கு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் வேண்டாம் என்று அவர்களையும் சமாதானப்படுத்தி விடுகிறார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூமுஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம் நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!'' என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!'' என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டு விட்டு, 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது'' என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், 'நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்'' என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), 'இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!'' என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்'' என்று பேசுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.

சிந்தியுங்கள் சகோதரர்களே

நடந்த சம்பவம் என்ன ?
இது நடந்ததற்கு மூல காரணம் என்ன ?
இன்றும் இது போல் நடக்கிறதா ? இல்லையா ?


ஒரே ரூமில் தங்கிப் படிப்பவர்கள், ஒரே ரூமில் தங்கி வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு மத்தியில் இது அதிகமாக நடந்துவருகிறது, எதிரெதிர் கட்டிலில் படுத்துறங்குபவர்கள் பொழுது விடிந்ததும் ஒருவர் முகத்தில் ஒருவர் முழித்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்ள முடியாத அளவுக்கு இந்த கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுவதன் மூலமாக கோபத்தை ஷைத்தான் விதைத்து பிரச்சனையை உண்டுப் பண்ணி விடுகிறான்.

கேட்டால் என் மீது என்ன தவறு இருக்கிறது எப்பொழுதும் தட்டுவது போல் சும்மா தமாஷூக்காத் தட்டினேன் எப்பொழுதும் ஜோக் அடிப்பது போல் தமாஷூக்கா ஜோக் அடித்தேன் என்றுக் கூறி தங்களுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்வர் ஆனால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு நெளிந்து கொண்டு இருப்பவர் அன்று என்ன மூடில் இருந்தார் என்பது இவருக்குத் தெரியாது. அதனால் இந்தப் பரிகாச விளையாட்டை அறவேத தவிர்த்துக் கொள்ள் வேண்டும்.

இதுப் போன்று எந்த நேரமும் ஜோக் அடிப்பவரை, உடலில் சில பாகங்களில் தட்டி நெளிய விட்டு ரசிப்பவர்களை அறவே அனுமதிக்கக் கூடாது ஆரம்பத்திலேயே தடுத்து விடவேண்டும்.

இல்லை என்றால் எல்லா நேரமும் அவருடைய இந்த விளையாட்டுக்கு நெளிந்து வளைந்து ஆடிவிட்டு ஒரு நாள் சீறிப் பாய்ந்தால் பதிலுக்கு அவரும் பாய்வார் கிண்டல் கலாட்டாவில் முடிந்து விடும்.

பெண்கள் மத்தியிலும் இந்த கேலி, கிண்டல், நையாண்டி செய்வது ஜோக் அடிப்பது, கிச்சு கிச்சு மூட்டுவது அதிகமாக இருந்து வருகிறது.

இஸ்லாம் நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம் என்பதற்கு இதெல்லாம் சிறந்த அளவுகோலாகும் இஸ்லாமிய மார்க்கத்தை இறைவன் உலகுக்கு ஒருப் புத்தகமாக வாணிலிருந்து இறக்கி வைக்காமல் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய வாழ்விலும் அவர்கள் வாழும் காலம்வரை அவர்களுடன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த மக்களுடைய வாழ்விலும் நடந்தப் பல சம்பவங்களில் இன்னது ஏற்புடையது, இன்னது ஏற்புடையதல்ல என்று அவ்வப்பொழுது இறைச் செய்தியை அறிவித்து இறக்கிய திருக்குர்ஆனை மார்க்கமாக இறைவன் மனித குலம் அனைத்திற்கும் வழங்கினான்.

அதனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலும், அவர்கள் வாழும் காலம்வரை அவர்களுடன் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் நமக்குப் படிப்பினை தருவதாக அமைந்திருக்கிறது.

மேற்காணும் சம்பவத்தை மக்கள் படித்திருந்தால் இதுபோன்ற கோபத்தை மூட்டக் கூடிய ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுகின்ற விளையாட்டுகளை தவிர்த்துக்கொள்வார்கள்.

தேவையற்ற விளையாட்டுக்களை தவிர்த்துக்கொண்டு அவசியமான விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவினால் உறுதுணையாக இருந்தால் வாழ்வில் இன்றி அமையாத கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்பவர்களாக ஆவதுடன் அறிஞர்களாகவும், மேதைகளாகவும் மாறுவதற்கும் சகோதரத்துவம் உடையாமல் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதற்கும் பயனளிக்கும்.

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறரிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 5:02

அன்று பக்குவப்பட்ட மக்களையே கோபம் (ஷைத்தான்) விட்டு வைக்க வில்லை என்றால் இன்று பக்குவப்படாத நம்மை கோபம் (ஷைத்தான்) விட்டு விடுவானா ? என்பதை கருத்தில் கொள்வதற்காகவே மேற்காணும் சில சம்பவங்களுடன் எழுதப்படுகிறது.

அன்று பக்குவப்பட்ட அந்த மக்களிடம் ஷைத்தான் கோபத்தை மூட்டியதன் மூலம் தோல்வியையேத் தழுவினான் ஆனால் இன்று பக்குவப்படாத நம்மிடம் கோபத்தை மூட்டுவதன் மூலம் ஷைத்தான் வெற்றியை அடைந்து வருகிறான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

கலீஃபாவின் கொலைக்குக் காரணமான கோபம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த மக்களிடம் கோபத்தின் மூலம் ஷைத்தான் எதையும் சாதிக்க முடியவில்லை இறைவனுடைய வேதம் வந்து கொண்டிருந்தக் காரணத்தால் இறைவன் தூதுச்செய்தி மூலம் ஷைத்தானின் பல முயற்சிகளை முறியடித்தான், அறிவின் பொக்கிஷமாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயல்பிலேயே சாந்த குணமுடையவர்கள் என்பதால் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானப்போக்கை கையாண்டு ஷைத்தானின் பல முயற்சிகளை முறியடித்து வந்தார்கள்.

அவர்களின் மறைவிற்குப்பிறகு சமுதாயம் இருக் கூறாக பிளவுபடுவதற்கு ஒரு சாராருடைய உச்சந்தலையின் முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் உலுக்கியக் காரணத்தால் கோபத்தின் உச்சிக்கு சென்றவர்கள் சமுதாயத்தை சாய்த்துப்போட்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம்.

உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சியை அகற்றிவிட்டு வேறொரு ஆட்சி அமைப்பதற்காக உஸ்மான்(ரலி) அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளுடன் எகிப்திலிருந்து மதீனாவை நோக்கி புறப்பட்டு வந்த புரட்சியாளர்களிடம் சமாதானம் செய்து வைக்க அலி(ரலி) அவர்களை ஆட்சித் தலைவராகிய உஸ்மான் (ரலி) அவர்கள் நியமித்தார்கள்.

அலி(ரலி) அவர்கள் புரட்சியாளர்களை சந்தித்து அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டப்பின் அதன் மூலம் திருப்தி அடைந்தவர்கள் திரும்பி சென்று கொண்டிருக்கையில் அவர்களைத் தாண்டிக் கடந்து சென்ற சந்தேகத்திற்கிடமான நபரை வழிமறித்து சோதித்தபொழுது அவருடைய கையில் கிடைத்த கடிதத்தில் புரட்சியாளர்கள் அனைவரும் எகிப்தை அடைந்ததும் கொன்று விட வேண்டும் இப்படிக்கு ஜனாதிபதி உஸ்மான் பின் அஃபான் என்று எழுதி உஸ்மான்(ரலி) அவர்களின் கையெழுத்துக்கான முத்திரையும் இருந்ததைப் படித்ததும் கோபம் அவர்களுடைய உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து விட்டது.

திரும்பியது படை மதீனாவை நோக்கி
ஈவிறக்கமின்றி கொலை செய்யப்பட்டார்கள் உஸ்மான்(ரலி) அவர்கள்,
அலி (ரலி) அவர்கள் ஜனாதிபதி ஆனார்கள்
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு அலி (ரலி) அவர்களிடம் நியாயம் கேட்டு உருவாணது அணி
பிளவுபட்டது சமுதாயம்.


இதற்கெல்லாம் காரணம் கோபம் தான் நம்மை கொலை செய்ய உத்தரவிட்டவரை நாம் கொலை செய்து விட வேண்டும் என்ற முடிவை கோபம் மேற்கொள்ள வைத்தது.

கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிதானமாக சிந்தித்திருந்தால் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒருக் கடிதத்தை அவர்கள் எழுதியே இருக்க மாட்டார்கள் என்ற நல்லெண்ணம் மேலோங்கி இருக்கும்.

உஸ்மான்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு முன்னறிவிப்பு செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவர் இவர் இப்படி அன்டர்கிரவுன்டு வேலை செய்வாரா ? என்றெல்லாம் அவர்களின் உச்சி முடியைப் பிடித்து உலுக்கிய கோபம் சிந்திக்க விடவில்லை.

இறுதியில் அந்தக் கடிதத்தை உஸ்மான்(ரலி) அவர்கள் எழுதவே இல்லை மாறாக அவர்களிடம் பணியாளராக இருந்த மர்வான் பின் ஹக்கம் என்பவர் தங்களுடைய கோத்திரத்தார்கள் அரசப் பதவியை விட்டு விலகி விடக் கூடாது என்பதற்காக எழுதப்பட்டது.

இதன் முழு சரித்திரத்தையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சரித்திரம் இது.

Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ

கோபம் இருந்தால் தான் வீரத்திற்கு அழகு என்பது போல் இன்று மாற்றப்பட்டு விட்டதால் கோபம் வரவில்லை என்றாலும் முகத்தை டென்ஷனாக வைத்துக்கோண்டு ஷைத்தானை கூவி அழைத்து அருகில் வைத்துக்கொள்ளும் நிலையை இன்றுப் பலரிடம் பார்த்து வருகிறோம்.

கோபம் ஷைத்தானின் மூலமாகத் தான் மனிதனுக்குள் நுழைகிறான் என்பதை அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முழு சரித்திரத்தையும் அறிந்து கொள்ள கீழ்காணும் லிங்கை சொடுக்கி காணவும்.

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/antha_72_koottathinar_yar_video/
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், நவம்பர் 29, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?1

நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

திங்கள், நவம்பர் 28, 2011

50 ரூபாய் காமெடி (சிந்திக்கவும்தான்)

Read it.. You Will Say me "Thanks" For Sharing This Story :-)


A little Indian Boy wanted Rs50, so he prayed 4 weeks, but nothing happened.
Finally he decided 2 write a letter 2 God requesting Rs50.

When post office staff received a letter addressed 2 God, they forwarded it 2 the President.

... ... President was so amused, she instructed her secretary 2 send the little boy Rs 20.
As she thought Rs50 would be a lot of
money for him.

The little boy was delighted with Rs20 & decided 2 write a thank u note 2 God.


'Dear God, Thank u very much 4 sending d money. However,
I noticed dat u ev sent it through 'Rashtrapati Bhavan' (Through Government Building) & those corrupt donkeys ate my 30 rupees! :D'

Hope U Will Like/Share It Too And thus Give Your Friends Some Good Laugh :P —
By: Neeya naana Gopinath

ஞாயிறு, நவம்பர் 27, 2011

அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை

அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

அந்த நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் யாரை மன்னிக்க விரும்பவில்லையோ அவர்களின் நிலை அந்நாளில் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மீஸான்

மனிதர்களின் நன்மைகளும் தீமைகளும் அந்நாளில் எடைபோடப்படும். அதற்காக ஒரு தராசு நிறுவப்படும் என்பதை திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

நன்மைகளையும் தீமைகளையும் எவ்வாறு எடைபோடப்படும்? அவை தராசில் நிறுத்துப் பார்க்கப்படும் பொருட்களல்லவே என்று மறுமையை நம்பாதோர் கேலி பேசலாம். நவீன காலத்துக்கு முன் வாழ்ந்தவர்கள் இவ்வாறு கேட்டால் அதில் ஓரளவாவது நியாயமிருக்கும். நவீன காலத்தில் வாழ்வோர் இவ்வாறு கேட்க முடியாது.
வெப்பம், குளிர் ஆகியவை இன்று எடை போடப்படுகின்றன. அவற்றை எடைபோட்டுப் பார்க்கத்தக்க கருவிகளை மனிதன் உருவாக்கியுள்ளான். காற்று எடை போடப்படுகின்றது. காற்றின் வேகம் எடை போடப்படுகின்றது. நிலநடுக்கம் எடை போடப்படுகின்றது. திரவப் பொருட்களின் அடர்த்தி எடை போடப்படுகின்றது. இன்னும் எடை போட இயலாது என்று முன்னோர்கள் நம்பிய அனேக விஷயங்கள் இன்று எடை போடப்படுகின்றன. சாதாரண மனிதனுக்கே இத்தகைய கருவிகளை உருவாக்கி இவற்றை எடைபோட இயலும் என்றால் சர்வ சக்தி படைத்த இறைவன் நன்மைகளையும் தீமைகளையும் எடை போடக்கூடிய கருவியை உருவாக்குவான் என்பதில் ஐயம் கொள்ள முடியாது.

எல்லாம் அறிந்த இறைவன் நன்மை தீமைகளை எடை போட்டுத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அவசியமில்லையே என்று விதண்டாவாதம் பேசுவோரும் நம்மில் உள்ளனர்.

ஒரு பொருளின் எடை ஒரு கிலோ என்று ஒரு வியாபாரி அறிந்திருக்கிறான். அதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்பொருளை விற்கும் போது மீண்டும் ஒருமுறை வாங்குபவன் முன்னிலையில் எடை போடுகிறான். இவ்வாறு மீண்டும் எடை போடுவது அப்பொருளின் எடையை அறிந்து கொள்வதற்காக அன்று. வாங்குபவன் முழுதிருப்தியுடன் இதைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

ஒவ்வொருவரின் நன்மை தீமைகளின் எடை எவ்வளவு என்பது வல்ல இறைவனுக்கு எடை போடப்படும் முன்பே நன்றாகத் தெரியும். தனக்கு கடுகளவுகூட அநீதி இழைக்கப்பட வில்லை என்று மனிதன் நம்ப வேண்டுமானால் அவன் அறிந்து வைத்திருக்கும் முறையில் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். தான் வழங்கும் நீதியில் நியாயத்தீர்ப்பில் கடுகளவு கூட மனிதனுக்குச் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு எடை போடுகிறான் என்பதை விதண்டாவாதம் புரிவோர் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மை தீமைகள் எடை போடப்படும் போது மூன்று விதமான நிலையை மனிதர்கள் அடைவார்கள். சிலரது தீமையை ஒரு தட்டிலும் நன்மையை மறுதட்டிலும் வைக்கப்படும் போது நன்மையின் தட்டு ஓரளவு கீழிறங்கும். மற்றும் சிலரது தீமையை ஒரு தட்டிலும் நன்மையை மற்றொரு தட்டிலும் வைக்கும் போது தீமையின் தட்டு ஓரளவு கீழிறங்கும். இன்னும் சிலரது தீமைகள் ஒரு தட்டிலும் நன்மைகள் மறுதட்டிலும் வைக்கப்பட்டால் தீமையின் தட்டு கடுகளவும் உயராது, நன்மையின் தட்டு கடுகளவும் தாழாது. அந்த விபரங்களைத் திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

'அன்றைய தினம் எடை போடுதல் உறுதியான ஒன்று. அந்நாளில் எவர்களுடைய எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்' (அல்குர்ஆன் 7:8)

'மேலும் நாம் கியாமத் நாளில் மிகவும் துல்லியமான தராசுகளை நிறுவுவோம். எனவே எந்த ஒர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. மேலும் கடுகளவு எடையிருப்பினும் அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். (அவ்வாறு கணக்கெடுக்க) நாமே போதும். (எவர் துணையும் தேவையில்லை)' (அல்குர்ஆன் 21:47)

23:102, 101:6, 101:8 ஆகிய வசனங்களிலும் அந்த விபரம் கூறப்பட்டுள்ளது. ஓரளவு நன்மையும் பெருமளவு தீமையும், பெருமளவு நன்மையும் சிறிதளவு தீமையும் செய்த இரண்டு சாரார்களின் நிலை இவை.

இரண்டு வகையான குற்றங்கள் செய்தவர்கள் எவ்வளவு தான் நன்மைகளைச் செய்திருந்தாலும் அவர்களுடைய அக்குற்றங்களின் கனத்தால் அவர்களின் நன்மைகளுக்கு எந்த எடையுமில்லாமல் போகும் நூலளவு கூட அவர்களின் நன்மைகளுக்கு எடையிராது.

அகில உலகையும் படைத்துப் பரிபாலித்துக் காத்து வரும் இரட்சகனாம் அல்லாஹ்வின் வல்லமையை உணராமல் அல்லாஹ்வின் வல்லமைகளை அவனது பண்புகளை அவற்றில் ஏதேனும் ஒன்றை மனிதர்களுக்கோ, மற்றவர்களுக்கோ வழங்குவது முதல் குற்றம்.

அல்லாஹ் என்று யாரும் கிடையாது, மறுமை என்று ஏதுமில்லை என்று நாத்திகம் பேசுவது இரண்டாவது குற்றம்.

பெரியார்கள் மகான்கள் அவ்லியாக்கள் அன்பியாக்கள் ஆகியோரை வழிப்பட்டவர்களும், கல்லை, மண்ணை, மரத்தை, காற்றை, கதிரவனை, நெருப்பை இன்னபிற பொருட்களை வணங்கியோரும், கடவுளையே மறுத்தோரும் எவ்வளவு தான் நன்மைகள் செய்தாலும் அதற்கு எந்த எடையும் மறுமையில் இராது. இதையும் திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறியலாம்.

இந்த நிராகரிப்பாளர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இத்தகைய காபிர்களுக்காக நரகத்தையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். தம் செயல்களில் மிகப்;பெரும் நட்டமடைந்தோர் யாரென உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தனர். எனவே அவர்களின் செயல்கள் அழிந்துவிடும். கியாமத் நாளில் அவர்களுக்காக எந்த ஒரு எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன் 18:102-105)

5:5, 6:88, 2:217, 3:32, 5:53, 7:147, 9:17, 9:69, 39:65, 33:19, 47:9, 47:28, 47:32 ஆகிய வசனங்களில் இணை வைப்போர் மற்றும் நாத்திகர்களின் நல்லறங்கள் பாழாகிவிடும் என்று இறைவன் கூறுகிறான். இத்தகையோரின் செயல்கள் இவ்வுலகிலேயே அழிந்து விடுவதால் தான் மறுமையில் அதற்கு எந்த எடையும் இருப்பதில்லை.

கடுகளவு நன்மைக்கான எடைகூட கிடைக்கப் பெறாமல் நிரந்தர நரகில் அத்தகையோர் வீழ்வார்கள்.

முஸ்லிம்கள் எனத் தம்மைக் கூறிக்கொண்டு தர்காக்களுக்குச் சென்று பிரார்த்திப்பவர்கள், அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஸஜ்தாச் செய்தவர்கள், அவர்களுக்காக நேர்ச்சை செய்தவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தகையோர் தொழுகை, நோன்பு, இன்னபிற வணக்கங்களை நிறைவாகச் செய்தால் கூட இவர்களின் உள்ளத்தில் உள்ள இணைவைத்தல் அந்த வணக்கங்களை எடையற்றதாக ஆக்கி விடும்.

தங்களின் எந்த வணக்கத்திற்கும் எந்தப் பயனுமில்லாது போவதை விட துர்பாக்கியம் என்ன இருக்க முடியும்?

மறுமையை நம்பும் மக்கள் தமது அமல்கள் வீணாகக் கூடாது என்று எதிர்பார்க்கும் மக்கள் உடனடியாக தர்கா வழிபாட்டிலிருந்து விலகித் திருந்த வேண்டும்.

நன்மை தீமைகள் எடை போட்டது மட்டுமின்றி அதற்கான ரசீதுகளும் உரியவர்களுக்கு வழங்கப்படும். அந்த நேரத்திலும் இத்தகையோர் பரிதாபமான நிலையைத் தான் அடைவார்க
By...Labbai Karaikal(facebook)

அரபு வருடம் 1433 முதல் நமது செயல்பாடு எப்படி இருக்கவேன்டும்? (அஸ்வர் மதனி 25/11/2011)part 2


அரபு வருடம் 1433 முதல் நமது செயல்பாடு எப்படி இருக்கவேன்டும்? (அஸ்வர் மதனி 25/11/2011)part 1


வியாழன், நவம்பர் 24, 2011

Why I dont eat at kfc anymore

New job opportunities 25/11/2011

Urgent For (Qatar)


REQUIRED FOR A WELL REPUTED CO. IN DOHA,QATAR. ( Electro Mechanical engineering)
Interviews are Held in Delhi Last weak of November
Please mentions post for which you are aply
Interested candidate send their CV at alphabeta.kumar@gmail.com
Forward this mail to your friends also.

Sl. No Designation Gross Salary Range in QAR Qualification & Experience No.1 Project Director/ Sr. Project Manager (MEP) 20000-30000BE (Elect) or B E (Mech) with Minimum 15 Experience in building MEP services, handling major projects. 22 Project Manager (Mech) 14000-20000 B E (Mech) with minimum 10 years experience or Diploma in Mechanical Engineering with 15 Years Experience in building Mechanical services. 33 Project Manager (Elect) 14000-20000 B E (Elect) with minimum 10 years experience or Diploma in Mechanical Engineering with 15 Years Experience in building Electrical services . 34 QA/QC Manager. 12000- 15000 BE (Elect) or B E (Mech) with 8 to 10 Years Experience in TQMS and QA/QC of MEP services. 25 QC Engineer/ inspector 6000- 10000 BE (Elect) or B E (Mech) with 3 to 6 Years or Diploma in Elect/ Mech with 8 to 10 Years Experience in relevant field. 46 HSE Manager/ officer 8000-12000 Retired defense official with relevant experience or Graduate or Diploma in Engineering with minimum one year Diploma in Safety and 8-10 years experience in handling HSE in projects. Candidates holding OSHA/NSP Certificates Preferred 17 HSE Inspector 4500 - 6500 Retired defense personal with relevant experience or Graduate in any discipline or Diploma in Engineering with minimum one year Diploma in Safety and 3 -4 years experience in the field. 28 Project Engineer (HVAC) 8000-12000 B E (Mech) with 5 to 10 Years or Diploma in Electrical or Mechanical Engineering with 10 to 15 Years Experience in HVAC works. 39 Project Engineer (Elect) 8000-12000 B E (Elect) with 5 to 10 Years or Diploma in Electrical Engineering with 10 to 15 Years Experience in building electrical works. 310 Project Engineer (Plumbing) 8000-12000 B E (Mech) with 5 to 10 Years or Diploma in Mechanical Engineering with 10 to 15 Years Experience in Plumbing, Drainage & Fire Fighting. 311 Quantity Surveyor 10000-15000 BE (Elect) or B E (Mech) with 5 to 10 Years Experience or Diploma in Electrical or Mechanical Engineering with 10 to 15 years in quantity surveying and MEP contract administration. Qualification on formal Quantity surveying is desirable. 212 Draftsman (Elect) 5000-8000 Diploma in Electrical Engineering or Draftsman course with proficiency in AutoCAD and minimum 3 years experience in electrical and ELV drawings 313 Draftsman (HVAC) 5000-8000 Diploma in Mechanical Engineering or Draftsman course with proficiency in AutoCAD and minimum 3 years experience in HVAC drawings 214 Draftsman (Pipe Fitting &Fire Fighting ) 5000-8000 Diploma in Mechanical Engineering or Draftsman course with proficiency in AutoCAD and minimum 3 years experience in Plumbing, Drainage & Fire Fighting drawings 2

OTHER TERMS & CONDITIONS:

1. Place of Employment : Qatar
2. Period of Employment : Two years
3. Working Hours : 08 hrs per day, 06 days in week
3. Probationary period : 3 Month as per Qatar Law.
4. Accommodation : Provided by Company.
6. All other terms & condition shall be in& nbsp;accordance with the Qatar Labor Law.

Interested candidate send there cv at alphabeta.kumar@gmail.com

Urgent! Have you Updated your resume recently? Only recently updated resumes get Interview calls. Update your resume now and bag that perfect job.

Disclaimer: The sender alpha_beta_pla of this email is registered with TimesJobs.com as Alpha Beta Placement ( bitu.ajay@gmail.com, 2127-28, Basement 58, Naiwala, Karol Bagh, Delhi - 110005 ) and has accessed your resume on TimesJobs.com. It is the sole responsibility of the candidate to verify the content of the mails sent by the employers/recruiters. Further, you are advised to make appropriate/thorough enquiries before acting upon any unsolicited mail that you may receive from any individual/firm/company, asking for advance payment for any service that they may claim to be offering. Timesjobs.com does not vouch/guarantee for any such offers made by the above said parties. If you consider the content of this email inappropriate or spam, you may report abuse by forwarding this email to: corporatecare@timesgroup.com. Please note thattimesjobs.com does NOT endorse any requests for money payments, or sharing of bank account details. You can block this recruiter from searching your resume and contacting you.This Website/ E-mail are vulnerable to data corruption, interception, tampering, viruses as well as delivery errors and we do not accept liability for any consequence that may arise therefrom
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு.
Sharing with TNTJ SW which I got from net:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (U.P.S.C.), இந்திய ரயில்வேயில், மெக்கானிக்கல் துறையில் பல்வேறு பணிகளில் சேர்வதற்கு, எழுத்து தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளை, அடுத்த ஆண்டு ஜனவரி 29 ல் தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல் பாடங்களோடு முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் சிறந்த உடற்திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது:
17-21 வயதுக்கு உட்பட்டவர்கள்விண்ணப்பிக்கலாம். வகுப்புகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பாடத்திட்டம், தேர்வு மையங்கள் மற்றும் விண்ணப்படிவத்தை நிரப்புதல் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21
மேலும் விவரங்களுக்கு http://www.upscexam.comஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.


Civil Foreman - Al Hamra Kuwait Co


This role is responsible for the supervision and coordination of site personnel and subcontractors, the reporting of all relevant site activities and managing the quality of work performed. This role requires a minimum of at least ten years experience working in the earthmoving and civil construction industry with three of those years in a senior/supervisory role is essential to the position. A strong people/supervision skill together with an ability to communicate effectively with others at all levels is important, as are sound planning and organization skills. A strong understanding and working knowledge of OHS&R, Environmental Management and Quality Systems is required. The Site Foreman will also be required to use their own initiative and apply a deductive approach when maintaining productivity and cost effectiveness.

DUTIES & RESPONSIBILITIES:
• Ensure the daily programming of all site works is performed in accordance with the Company construction program.
• In conjunction with the Project Manager, Site Engineer andConstruction Manager• Plan and review overall status of project(s) on an ongoing basis.
• Ensure all site resource (labor, machinery, materials, sub-contractors etc) are effectively utilized and monitored in order to achieve timely completion of projects.
• Ensure the Purchasing Officer is provided with sufficient notice when plant and equipment are free to go to another site.
• Upon completion of task, ensure all appropriate hired in plant and equipment is promptly off hired.
• Ensure the Project Manager is promptly provided with any relevant documentation received from either the client or authorities.
• Identify and record any possible variations to the contract, ensuring the Project Manager / Construction Manager are promptly notified.
• personnel are provided to the office.
• Ensure that all statutory requirements (eg. Local Council, EPA etc) are adhered to on site at all times.
• Ensure site diary is completed at the completion of each day, accurately recoding the day’s events.

QUALIFICATIONS:
• Bachelor Degree / Technician in Civil engineering.
• 8 years minimum experience in building & Industrial experience
• Ability to analyze complex problems and assess possible solutions
• The ability to explain design ideas clearly
• Strong decision-making skills
• Excellent communication skills
• Ability to priorities and plan effectively
• Good budgetary skills
• Excellent team working and people skills
• A comprehensive understanding of civil health and safety regulations.
• Bilingual speaking Arabic/English

Bachelor Degree / Technician in Civil engineering.

Apply Online

http://www.hamrakt.com/apply_online.php


Cable Jointers Shall have valid training certificate from Raychem / equivalent agency to carry out HT cable joints for 33KV /11KV XLPE cables and minimum five years of related experience. Gulf expeirnece and MEW Approval preferred.

Foremen Diploma (Electrical) 5 years experience in erection / testing of equipments in 132 / 11 KV substation (indoor) with 132KV GIS, 132KV Transformer etc.

Assistant Manager

BE / B Tech ( Electrical) 10 years experience in handling ERP Project. for Sub-station up to 132KV, . Power Distribution / Modification works. To lead a scan of Engineers . Gulf Experience ( Oil & Gas) preferable
Planning Engineer
BE / B Tech ( Electrical) 10 years experience in Project Planning Engineer. Shall be well versatile with latest versions of PRIMAVERA PROJECT PLANNER and MICROSOFT PROJECT

Interested candidates with suitable qulaification and experience may please send your resume to:

Fax No. (00965) 24723019
Email: const@ahleiasg.com

Urgent Opening for Finance Head in Pondicherry

Sent: Thursday, November 17, 2011 11:29 AM
Subject: Urgent Opening for Finance Head in Pondicherry
The sender of this email is registered with Naukri.com as Saraswathy Consultancy (I) Pvt. Ltd.,
Experience required for the Job: 5 - 12 years
Annual Salary of the Job: 0.0 - 12.0 Lacs
Job Location: Pondicherry

Dear Candidate,

Urgent Opening for a Head - Finance, MIS & Costingfor our reputed client In Pondicherry

This position reports to Vice President - Finance and will be responsible for budgeting, costing, material control, cost control and Project Financing.
* As this position will eventually take over as Vice President in 3 - 4 years time frame, the candidate must be a certified Chartered Accountant
* ACS & ICWAI as additional qualifications will be an advantage.

The person will be 35 years of age with at least 5 to 10 years experience as Head of Finance and Costing in a medium sized Engineering Company.

Job Description or Role

* Zero based budgeting, monitoring and control of budgeted expenses, cash flow and fund flow.
* Job costing, standard costing and marginal costing.
* Activity based costing
* MIS
* Fixed cost variance analysis and control
* Variable cost analysis and control
* Participate in Make or buy decisions
* Overhead allocation feedback to Marketing each month
Supporting Vice President - Finance

if you are interested kindly forward your updated profile with the following details as soon as possible.
1. current CTC:
2. Expected CTC:
3. Notice period:
4. Total years of Experience:
5. Current Location:

email id:
brinda.g@saraswathyconsultancy.com or
brinda.g@scljobs.com

thanks and regards,
Brinda. G
Saraswathy Consultancy Pvt Ltd,
Pondicherry.

Is this job relevant to you? Yes No
Your feedback would help us in sending you the most relevant job opportunities
Disclaimer:
The sender of this email is registered with naukri.com as Saraswathy Consultancy (I) Pvt. Ltd., (guna@scljobs.com, No: 4, DPR Complex, Whirlpool Road,, Thiruvandarkoil,, PONDICHERRY, Pondicherry - 605001) using Naukri.com services. The responsibility of checking the authenticity of offers/correspondence lies with you. If you consider the content of this email inappropriate or spam, you may:

Report abuse by forwarding this email to: compliance@naukri.com
You can also Block this Company from searching your resume in the database.

Advisory: Please do not pay any money to anyone who promises to find you a job. This could be in the form of a registration fee, or document processing fee or visa charges or any other pretext. The money could be asked for upfront or it could be asked after trust has been built after some correspondence has been exchanged. Also please note that in case you get a job offer or a letter of intent without having been through an interview process it is probably a scam and you should contact compliance@naukri.com for advise.


To be on the top of Employer's Resume Search
Update Your Resume Now

Your Resume has only 30 seconds to impress a Recruiter. Get your resume written by Experts.
Call 1800-102-5557 now! (Toll-Free)


KUWAIT: OPEN POSITIONS

GEOLOGIST
PETROLEUM ENGINEER
PETROPHYSICIST
STRATIGRAPHER
SEDIMENTOLOGIST.

Must have 10+ years of relevant experience. Send your CV to jobs@ramtesa.com

Ramtesa Staffing Solutions is a division of Ramtesa Global Consulting specialized in supplying highly skilled professional personnel for the Oil & Gas, chemicals, power and renewable industries. Our client portfolio includes a wide range of international firms that require specialized professionals in very challenging locations such as the Middle East, Africa and the Americas. We provide staffing services at all levels from head hunting, recruiting, interviewing, mobilization and pay roll for different project’s needs such as Project Management, Engineering, Procurement, Construction Management/Supervision, Commissioning, Operations and Maintenance.

Currently we are looking for engineers for the following positions for an assignment in Kuwait:

- Geologist
- Petroleum engineer
- Petrophysicist
- Stratigrapher
- Sedimentologist

All candidates must have:

- 10+ years of relevant experience in their respective area of the Oil and Gas sector.
- Must be able to communicate in English.

Candidates interested kindly send your resumes tojobs@ramtesa.com
Expiring in 13 days

Excellent opportunity in FMCG sectorr...
----- Forwarded Message -----
From: "dhileepan@genieworld.in"

Sent: Thursday, November 17, 2011 11:45 AM
Subject: Excellent opportunity in FMCG sectorr.....!!!!!
Hi,
Genie Consultants is a premier recruitment and placement organisation servicing their clients in various sectors like IT/ITES, BFSI, Telecom, FMCG etc. Our leading clients include HDFC bank, Franklin Templeton, Aircel, Cococola,Wipro, HCL Technologies etc...

Excellent Opportunity in FMCG Sector
Job Title : Accounts Executive
Job Location : Chennai
Experience : 5+ yrs in Accounts
Profile& amp; amp; nbsp; : Generate Daily/Weekly Monthly Invoices, prepare journal entries and related supporting documentation
Prepare General Ledger and Bank Accounts/Debtor reconciliation
Perform Cash and P&L reports utilized in the month
Prepare schedules to assist in the Monthly VAT financial statement audit
Coordinate with various departments to obtain support required for various analyses & ensure Invoices are timely generated as per ERP
Liaise with Customer contacts to obtain monthly Collections & closely coordinate with Credit Control Department at Corporate
Create various ad hoc reports as needed, including variance and business performance analyses

If you are interested, Pl forward your resume immediately to
dhileepan@genieworld.in

Note: If the above opening doesn't suit your profile, kindly ignore.
Can refer your friends too.

Thanks and Regards,
Dhileepan
044-49059981

Urgent! Have you Updated your resume recently? Only recently updated resumes get Interview calls. Update your resume now and bag that perfect job.

Disclaimer: The sender suryagenie of this email is registered withTimesJobs.com as Genie Consultants ( sekharsrinivasan@genieworld.in, balaji Building, Pinjala Subramaniyam St,T.Nagar , Ch-17 ) and has accessed your resume on TimesJobs.com. It is the sole responsibility of the candidate to verify the content of the mails sent by the employers/recruiters. Further, you are advised to make appropriate/thorough enquiries before acting upon any unsolicited mail that you may receive from any individual/firm/company, asking for advance payment for any service that they may claim to be offering. Timesjobs.com does not vouch/guarantee for any such offers made by the above said parties. If you consider the content of this email inappropriate or spam, you may report abuse by forwarding this email to:corporatecare@timesgroup.com. Please note that timesjobs.com does NOT endorse any requests for money payments, or sharing of bank account details. You can block this recruiter from searching your resume and contacting you.This Website/ E-mail are vulnerable to data corruption, interception, tampering, viruses as well as delivery errors and we do not accept liability for any consequence that may arise therefrom.

Walk-in Interviews on 26 Nov for airport Operations with Emirates
From: Mohamed Gazzali
Subject: Walk-in Interviews on 26 Nov for airport Operations with Emirates
To:
Date: Monday, November 21, 2011, 11:17 PM
:As I received:
Dear Brothers & Sisters in Islam: Please read and circulate
There are Walk-in interviews on 26 Nov with Emirates. This is an opportunity for all our Brothers and sisters in Islam to apply. Please inform all of them to be in good attire, if possible in formal suit.
They must read Gulf News of 20 Nov. bring all the certificates, Original, Passport, certificate copies etc and come prepared for the interview.
I wish them all the best and pray God to place more and more our Brothers in Emirates & DNATA.

Thanks & regards,
Mohamed Gazzali,
பேக்கரி துறையில் டிப்ளமோ கோர்ஸ்!
Diploma in Bakery
Diploma in Bakery
உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறை, கேட்டரிங் துறையும் வளர்ந்துள்ளது. கேட்டரிங் துறையில் ஒரு பகுதி யாக பேக்கரியும் பிரதானமாக விளங்குகிறது.
பேக்கரி தொழிலிலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்களும் புதிய ரக பாஸ்ட்புட் உணவு வகைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டிப்ளமோ படிப்பு :
பேக்கரி துறையில் வேலை பார்ப்பது என்பது வெறும் கேக் தயாரிப் பது மட்டுமல்ல. அது ஒரு கலை என்கின்றனர் இத்துறையில் இருப்பவர்கள். இந்த கலையை டிப்ளமோ மூலம் சில கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.
இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு பேக்கரிகள்,உணவுப்பண்டம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள்காத்திருக்கின்றன. நல்ல ஊதியமும் கிடைக்கும்.

பேக்கரி தொழில் தொடர் பான டிப்ளமோ படிப்பை வழங் கும் கல்வி நிறுவனங்கள்:
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (www.mihmct.com).
எம்ஜிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி.
தந்தை ஹன்ஸ்ரோவர் கல்லூரி (www.thrcollege.ac.in)
இதுதவிர கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இந்த படிப்பை நடத்துகிறது.
படிப்பு தொடர்பான விவரங்களை www.annaàniv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முதுநிலை டிப்ளமோ :
கடினமான வேதியியல் முறை களை கொண்டு, பேக்கரி தயா ரிக்கும் அறிவை பேக்கரி அறிவியல் நிர்வாகம் வளர்க்கிறது.
பல ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் தயாரிக்கும் முறை யையும் விவரிப்பதுடன், உணவு பொருட்கள், தயாரிக்கும் முறை கள் பற்றிய அரசு கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் மாணவர்களின் நிர்வாகத்திறமையையும், ஆராய்ச்சி, தயாரிப்புத் திறனையும் வளர்க்கிறது.
மருத்துவம் படிக்க வேண்டுமா? அதுவும் மிக குறைந்த கட்டணத்தில்!!
Posted by kalviadmin on November 20, 2011 in அணைத்து பதிவுகள், என்ன படிப்பது? எங்கு படிப்பது? | | 85 views
Doctor
Doctor

இந்தியாவில் மேல்நிலைக்கல்வி படிக்கும் 90 சதவீத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது முதல் இலக்காக இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளில் போதிய இடங்கள் இல்லை.

டாக்டர்களின் தேவை இருந்தாலும் மாணவர் சேர்க்கை கெடுபிடிகள் அதிகம். இந்திய அளவில் 1700 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலைமை இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண் டுக்கு 6 லட்சம் டாக்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 31 ஆயிரத்து 172 எம்பிபிஎஸ் சீட்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன.
இதனால் எம்பிபிஎஸ் படிப்புக்கு அதிக கிராக்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண், ரேங்க் எண் வழங்கப்பட்டு கவுன்சலிங் நடத்தப்படுகிறது.
உச்சபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் சீட்களை தட்டிச் சென்று விடுகின்றனர். சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற கனவை வளர்த்தவர்கள் மதிப்பெண் குறைவு காரணமாக வேறு வழியின்றி மாற்று படிப்புகளை தேர்வு செய்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும் என்ற வழிமுறைகள் பலருக்கு தெரிவதில்லை.http://www.kalvikalanjiam.com
ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், பல்கேரியா, செக்குடியரசு, ருமேனியா, அர்மேனியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ படிப்புக்கு இந்திய மாணவர்களை வரவேற்கின்றன. அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடிக்க ரூ.1.25 கோடி வரை செலவாகிறது. ஆஸ்திரேலியா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் மொழி, விசா பிரச்னை, அதிக கட்டணம் போன்றவற்றால் இங்கு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. பொதுவாக பிரிட்டிஷ், அமெரிக்க பாடத்திட்டம் என இரு பாடத்திட்டங்கள் மூலமாகவே உலகம் முழுவதும் மருத்துவ கல்வி போதிக்கப்படுகிறது.

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு எம்டி படிக்க வேண்டும் என்ற நிலையில்,வெளிநாடுகளில் ஆரம்பத்திலேயே எம்டி படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இப்படிப்புகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் குறிப்பிட்ட துறைகளில் விசேஷ பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் ஹவுஸ் சர்ஜனாக ஒரு ஆண்டு பணிபுரிய வேண்டும் என்றால்,வெளிநாடுகளில் மூன்றரை ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்கில புலமை, சீதோஷ்ண நிலை, இன மோதல் உள்ளிட்ட எவ்வித பிரச்னையும் இல்லாமல் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதால் இந்திய மாணவ, மாணவிகளின் பார்வை அந்நாட்டின் மீது திரும்பி வருகிறது.
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தாலும் இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் மட் டுமே இங்கு டாக்டர்களாக பணி யாற்ற முடியும். இத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பரில் நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்ற 8 ஆயிரம் நபர்களில் 1200 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பிலிப்பைன்ஸில் படித்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் மருத்துவ படிப்புகளில் சேர்பவர்களுக்கு முதல் ஆண்டு படிப்பு மட்டும் புனேயில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நெல்லை, கோவை, மதுரை, திருச்சி பகுதி மாணவ,மாணவிகள் அதிகளவில் அங்கு மருத்துவம் படிக்க விண்ணப்பித்து வருகின்றனர். பொதுவாக அனைத்து வசதிகளை கணக்கிட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இணையதளங்களில் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலா

From>>> Athirai Farook

பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?

நமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்' என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்து கொண்டு அந்த நாட்டை இஸ்லாமிய தீவிரவாத நாடாக காட்டுவதில் இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள்.

அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை 'இந்து வியாபாரி வெட்டிக்கொலை' 'இந்து மருத்துவர் கொலை' என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும் எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலம் சான்றாக உள்ளது. அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு தன் மதம், தன் இனம், அடுத்த மதம் அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள்.
இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயம் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம்.

''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை.
அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.

ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் பாடம் படிக்கட்டும். நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.(5 ;8)
-முகவை அப்பாஸ்.

புதன், நவம்பர் 23, 2011

இல்லத்தரசிகளின் கடமைகள் - பெற்றோர்

இல்லத்தரசிகளின் கடமைகள் - குழந்தை

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட டாக்டர் மதுமிதா மிஷ்ரா

ஏகஇறைவனின் திருப்பெயரால்

எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு.... சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப் பட்டது. இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் "அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்" என்றார். ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் "இஸ்லாம் & முஸ்லிம்" என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான "என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?" என்பதை முன் வைத்தார். இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார். மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா. "மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது. குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா). குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன. மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் 'ஜம்மியத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை). நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், "தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக"ப் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது. பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர். மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார். "வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்" என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப். ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், "முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்" என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா). ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் Cர்PC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர். "முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா). இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா. கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். "மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்றார் டாக்டர் ஜைனப். - அபூ ஸாலிஹா

செவ்வாய், நவம்பர் 22, 2011

New job opportunities 22/11/2011

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!.. திருக்குர்ஆன். 5:2
இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை அலுவலகத்தில் பல்வேறு பணிகள்

இந்திய மாநிலங்களவை அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Rs.8/1/2011/Rectt.
பணியின் பெயர்: Junior Parliamentary interpreter
சம்பளம்: ரூ.15,600-39,100
கல்வித்தகுதி: ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். DOEACC-கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது தெலுங்கை ஒரு பாடமாக கொண்டு ஏதாவதொரு பட்டப்படிப்பை படித்து ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பட்டத்தாரிகள் கேட்டகிரி-I-ன் கீழும், தெலுங்கு பட்டதாரிகள் கேட்டகிரி-II-ன் கீழும் விண்ணப்பிக்கவும்.
2. பணியின் பெயர்: Junior Parlimentary Reporter (Hindi) (கேட்டகிரி-III)
சம்பளம்: ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஹிந்தி மொழி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். DOEACC- சான்றிதழ் பெற்று கம்ப்யூட்டர் படிப்பு முடித்திருப்பது விரும்பத்தக்கது.
3. பணியன் பெயர்: Junior Parlimentary Reporter (English) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் DOEACC- சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
4. பணியன் பெயர்: Assistant (Executive/Legislative/Comittee/Protocol) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் படிப்பில் DOEACC- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Security Assistant Gr-II (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் NCC- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு படையினருக்குரிய உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Junior Clerk (English) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Junior Clerk (Urdu) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் உருது மொழியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Translator (கேட்டகிரி-V)
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக பயின்று முதுகலை பட்டம் பெறஅறிருக்க வேண்டும். ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
9. பணியின் பெயர்: Junior prof Reader (கேட்டகிரி-V)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Printing Technology பாடத்தில் டிப்ளமோ படிப்பு அல்லது Book Publishing துறையில் PG டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர்: Staff Car Driver (Ordinary Grade) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஒட்டுநர் உரிமம், கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Junior Parliamentary interpreter, Translator பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Junior prof Reader பணிக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதர பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உச்சவயது வரம்பானது20.12.2011 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., பிரிவினருக்கு அரசு விதிமுறைகளையின்படி சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகதேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. இதனை ''DDO. Rajya Saba''என்ற பெயரில் SBI வங்கி கணக்கு எண்: 31096407809-ல் சேரும்படி செலுத்தவும். பணம் செலுத்துவதற்குரிய செல்லான் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். SC/ST பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.rajyasabha.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அனுப்பவும்
பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Recruitment Cell,
Rajya Sabha Secretariat,
Room No: 629,
Parliament House Annexe,
New Delhi -110001
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 20.12.2011


Dear All,
Please find attached following Team member JD for Chennai, as discussed kindly close 35 numbers before this Sunday ( 20thNovember 2011), looking your support







JOB DETAILS
Position : Team Member

At KFC Restaurants we are looking for young & dynamic fresher, with the minimum qualification as 10th pass and between18-28 yrs of age for the team member position at the restaurant. The training cum probation period is 6 month, where in the trainee under goes on-the job training program in all the section of the restaurant like Kitchen, Supply Base, Cash, Back Sink and lobby. We provide world class training & a fun, supportive work culture.

Job responsibilities for TM are:
· Back of the house is the Kitchen: to prepare Chicken and other items on our menu.
· Middle of the house is the Supply base: to assemble the order e.g burgers, wraps
· Front of the house is the selling counter: to serve the customers and responsible for cash transaction.
· Ensure operational adherence to KFC standards and Values.
· Maintaining High Levels of Hospitality, Cleanliness, upkeep of the restaurant and Speed in all areas of Operations

Compensation & Benefits (For FT Team Members)
1. Earn Rs. 6838/pm with take home Salary of Rs.5300/-
2. Full Time – 180 positions available
3. Free Employee Meal worth Rs.100/- per shift.
4. Performance based Quarterly Incentives.
5. Retrial Benefits: Provident Fund, Gratuity
6. ESI coverage
7. 2 sets of Uniform provided by the restaurant
8. Quarterly Statutory Bonus payouts
9. Star certification (salary increase by Rs 300/- for each of 3 certifications).
10. Annual performance based increase.

Please contact Mr.Vinayagam
Mobile Number: 8056236390
Thanks
Sincere Regards
TNTJ- JOB team

Dear All,
JOB VACANCIES
Dubai based group company in Kuwait looking for a General building cleaners to its organizations. Those interested candidate can apply in below given mail ID and can call the undersigned.

Visa Provided ( Transferable visa)

Thanks & Regards

A.Rasbudeen
Operations Manager



POWER CLEANING & SECURITY SERVICES
P.O. Box 28503 Safat 13146,Kuwait. Tel: 04-Tel: Tel: +965-22490726 / 22490736| Fax: +965- 22490739
Mob: +965-97748371
Website: http://www.powergroupintl.com
Email: rasbudeen@powergroupintl.com





Assalamu Alikum

Site accountant wanted.

Qualification : BBA/ B.Com

For More details: Please contact . Mr.Ashik @ 8754487025

Sincere Regards

Shameem.S
Quality Assurance



Kindly go through the following...

http://www.taqa.ae/en/vacancies.html


By>> Athirai Farook

இல்லத்தரசிகளின் கடமைகள் - கணவன்

வட்டி பற்றிய குர்ஆனிய எச்சரிக்கை!

திங்கள், நவம்பர் 21, 2011

பாபர் மஸ்ஜித் உன்மை வரலாறு

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது. நன்றி;தமிமுன் அன்சாரி
post by.erainesan
; :

Trial Room எச்சரிக்கை!!!

; :உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்யவும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செய்து பார்க்கவும். உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்சயமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவு...ம்.

வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங் களால் கால் செய்ய முடியாது.

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room

இருவழி கண்ணாடி என் பது நம்மால் கண்ணா டிக்கு பின்புறம் இருப்ப வரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம் மை பார்க்க முடி யும்.

நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ கண்ணாடி இருப்பதை கண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் கண்களால் வித்தியாசத்தை உணர முடியாது.



உங்கள் விரல் நகத்தைக் கொ ண்டு கண்ணாடியைத் தொடவும். உங்கள் நகத்திற்கும் கண்ணாடியில் தெரியும் உருவத்திற் குமிடையில் இடைவெளி இரு க்குமெனில் அது சாதாரண ஒரு வழி கண்ணாடி. ஏனெனில் சாதாரண கண்ணாடியின் பின்பக்கம் சில்வர் பொருத்தப்பட்டிருக்கும்



இருவழி கண்ணாடியில் சில்வர் பின்புறமிருக்காது. ஆகவே இடை வெளி இல்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள் உங்களை கண்ணாடியின் பின்புறமிருந்து யாரேனும் பார்க்கவும் செய்யலாம்

தண்ணீர் குடிங்க,தண்ணி'யை மறந்துடுங்க

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.


கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.


எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.


தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!


p b; erainesan

மேலப்பாளையத்தில் ரத யாத்திரை

மேலப்பாளையத்தில் தடையை மீறி ரத யாத்திரை செல்ல முயன்ற இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் 181 பேரை போலீசார் கைது செய்தனர். பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த நிலத்தை மீட்டு முஸ்லிம் மக்களிடம்...,

ஒப்படைக்க வலியுறுத்தியும் இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பில் மேலப்பாளையத்தில் இருந்து ரத யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ரத யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து மேலப்பாளையம் பஜார் திடலில் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பஜார் திடலில் தவ்ஹித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டனர். தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.


அப்போது தேசிய தலைவர் பாக்கர் பேசுகையில், "கரசேவை என்ற பெயரில் அத்வானி நடத்தும் ரத யாத்திரைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாங்கள் கரசேவை நடத்தவில்லை. அனைத்து சமுதாய மக்களின் ஆதரவுடன் நாங்கள் நடத்தும் சமூக நல்லிணக்க யாத்திரைக்கு அரசு தடை விதிக்கிறது.


எத்தனை தடை வந்தாலும் எங்களது உணர்வுக்கு தடை விதிக்க முடியாது. பாபர் மசூதியை கட்டியேத் தீருவோம் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலளார் முகம்மது முனிர், துணை தலைவர் முகம்மது சித்திக், துணை செயலாளர் முகம்மது இக்பால், மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் கபூர், மாநில செயலாளர் அப்துல் அமீது,


மாவட்ட தலைவர் முகம்மது அலி, துணை செயலாளர் முகம்மது ஆரிஸ், மனித உரிமை அமைப்பாளர் மணி, சீனிவாசன், பாபு, மீனவர் சங்கத் தலைவர் மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தடையை மீறி ரத யாத்திரை செல்ல முயன்ற 181க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...