சனி, டிசம்பர் 31, 2011

புத்தாண்டு கொண்டாடலாமா ?

Shafras Ubaid
கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
... ...
ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்
By: Shafras Ubaid

அவசியம் கற்றுகொள்ள வேன்டிய துஆக்கள்

தூங்குவதற்கு முன்

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி (மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)

யா அல்லாஹ்! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! யா அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும் விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இன்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அவை உன் கையில்தான் உள்ளது. யா அல்லாஹ் நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்கு பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். எதுவும் உனக்குமேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். எதுவும் உனக்கு கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களை செல்வந்தர்களாக்குவாயாக! நூல்: புகாரி

யா அல்லாஹ்! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். உன் பெயரால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்: புகாரி

யா அல்லாஹ்! நீயே தூயவன். உன்னால்தான் எனது உடலை சாய்க்கிறேன். உன்னால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்ல அடியார்களை பாதுகாப்பதுபோல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்:முஸ்லிம்

தூங்குவதற்குமுன் ஆயத்துல் குர்ஸீயை ஓதிக்கொண்டால் விடியும்வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். அல்குர்ஆன் 2:255

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்கு செல்லும்போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து அல்குர்ஆன் 112,113,114 அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். நூல்: புகாரி

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌاللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْوَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِوَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ

பகரா அத்தியாத்தின் கடைசி இரு வசஙனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّه ِِ وَالْمُؤْمِنُونَ كُلّ ٌ آمَنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِه ِِ وَكُتُبِه ِِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَد ٍ مِنْ رُسُلِه ِِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِير

இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். அல்குர்ஆன் 2:285



لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسا ً إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ً كَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" அல்குர்ஆன் 2:286

யா அல்லாஹ்! என் முகத்தைச் உனக்கு கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உனது (அருளில்) நபிக்கை வைத்து விட்டேன்.உனது (உனது தண்டணைக்கு)அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. யா அல்லாஹ்! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். நூல்: புகாரி




தூங்கி விழித்தபின்

நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்

All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection

என் உடலில் ஆரோக்கியத்தை தந்து, என் உயிரையும் எனக்கு திருப்பி தந்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியும் வழங்கியவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நூல்: திர்மிதீ 5/473

All praise is for Allah who restored to me my health and returned my soul and has allowed me to remember Him.




வீட்டிலிருந்து புறப்படும்போது

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah

اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .

யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா

‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally

வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .

அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.




உளுச் செய்யும்முன்
بِسْمِ الله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு - In the name of Allah.

உளுச் செய்தபின்
أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’

اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.

அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ

O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.

سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .

யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.



உண்ணும்முன், பருகும்முன்

بِسْمِ اللَّهِ

அல்லாஹ்வின் பெயரால் - In the Name of Allah

اللَّهُمَّ بَارِكْ لَنا فِيهِ وَ اَطْعَمْنَا خَيْرًا مِنْه

அல்லாஹ்! அதில் எங்களுக்கு நீ அபிவிருத்தி செய்வாயாக! அதைவிடச் சிறந்ததை எங்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக! நூல்: திர்மிதி 5/506

O Allah! Bless us in it and provide us with better than it

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

بِسْمِ اللَّهِ فِي اَوَّلِهِ وََآخِرهِ

அல்லாஹ்வின் பெயர் கொண்டு அதன் தொடக்கம் அதன் முடிவு நூல்கள்: அபூதாவூத் 3/347 திர்மிதி 4/288

In the Name of Allah, in the beginning and in the end




உணவு உண்டபின்

الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ

என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless

உணவளித்தவருக்காக

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم

யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615

O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them

اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي

அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126

O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink




வீட்டிலிருந்து புறப்படும்போது

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah

اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .

யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா

‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally

வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .

அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.




பள்ளிவாசலுக்குள் நுழையும்போது

யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!

Oh Allah! Open for me the gates of Your mercy

பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது

யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்

O Allah! I am asking You to give me from Your Bounty



சபையை முடிக்கும்முன்
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: திர்மிதீ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: நஸயீ





துக்கம் கவலையின்போது

அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158

சங்கடம் நீங்க

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092

யா அல்லாஹ்! உன் அருளையே ஆதரவு வைக்கிறேன். ஆகவே கண் இமை மூடும் அளவிற்குக்கூட என்னை என் மனதின்பால் ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடைய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்கு நீ சீராக்ககி வைப்பாயாக! வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு) இல்லை. நூல்கள்: அபூதாவூத் 4/324 அஹ்மத் 5/42

உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். அல்குர்ஆன் 21:87

அல்லாஹ், அல்லாஹ்வே என் இரட்சகன், அவனுக்கு எப்பொருளையும் நான் இணையாக்கமாட்டேன். நூல்கள்: அபூதாவூத்2/87 இப்னுமாஜ்ஜா 2/335



தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு

அவன் யா அல்லாஹ்! நிச்சயமாக நாம் அவர்களுடைய தொண்டைக் குழிகளில் உன்னை ஆக்குகிறோம். அவர்களுடைய தீமைகளிலிருந்தும் உன்னைக்கொண்டு நாங்கள் காவல் தேடுகிறோம். நூல்:அபுதாவூத் 2/89

அவன்அல்லாஹ் நமக்கு போதுமானவன், இன்னும் (அவன்) மிக நல்ல பொருப்பாளன். நூல்: புகாரி 5/172

வேதத்தை இறக்கி வைத்தவன், துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிரிகளை தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களை தோற்கடிப்பாயாக! இன்னும் அவர்களை உலுக்கி விடுவாயாக! னூல்: முஸ்லிம் 3/162

ஒரு கூட்டத்தாரை கண்டு பயந்தவருக்கு

யா அல்லாஹ்! நீ நாடியதைக்கொண்டு அவர்களுக்கெதிராக எனக்குப் போதுமானவனாக இருப்பாயாக! நூல்: முஸ்லிம் 4/2300




கடன் நிறைவேற

யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச் கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தெவையற்றவனாக ஆக்குவாயாக! நூல்கள்: திர்மிதி5/560 ஸஹீஹ் திர்மிதி 3/180

யா அல்லாஹ்! தூக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல் ஆடவர்கள் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்: புகாரி 7/158

காரியம் சிரமமானால்

யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்




காற்று வீசுகின்றபோது

யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228

இடி இடிக்கின்றபோது

அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992

மழை வேண்டி கேட்பது

யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!

யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! நூல்கள்: புகாரி 1/224 முஸ்லிம் 2/613

யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்கள் மற்றும் உன்னுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டுவாயாக! உன்னுடைய அருளை பெருகச் செய்வாயாக! அழிந்துவிட்ட உன்னுடைய ஊரை உயிர்பிக்கவும் செய்வாயாக! நூல்: அபூதாவூத் 1/305





மழை பெய்கின்ற போது

பயன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!) நூல்: பத்ஹுடன் புகாரி 2/518

மழை பெய்த பிறகு

அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனின் அருளால் நாங்கள் மழை பெய்விக்கப்பட்டோம். நூல்கள்: புகாரி 1/205 முஸ்லிம் 1/83

தலைப்பிறையை காணும்போது

அல்லாஹ் மிகப்பெரியவன், யா அல்லாஹ்! அமைதி, ஈமான் சாந்தி இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டு மற்றும் எங்கள் இரட்சகா! நீ விரும்பி மற்றும் பொருந்தி கொண்டவற்றுக்கு நல்லுதவி செய்வது கொண்டு அதை எங்கள் மீது உதிக்கச் செய்வாயாக! (பிறையே!) எங்களுடைய இரட்சகன் மற்றும் உன்னுடைய இரட்சகள் அல்லாஹ் ஆவான். நூல்: திர்மிதி 5/504




நோயாளியை நலம் விசாரிக்கும்போது

எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் பாவம்) பரிசுத்தமாகும். நூல்: பத்ஹுடன் புகாரி 10/118

மிகப்பெரிய சிம்மாசனத்தை உடையவனாகிய மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன். நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்

யா அல்லாஹ்! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குப்வனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத்தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! நூல்: புகாரி 5742

கவலை வேண்டாம் அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். நூல்: புகாரி 3616



மரணத்திற்கு நிகராண துன்பத்தின்போது

யா அல்லாஹ்! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! நூல்: புகாரி 5671,6351

மரணத்தை அறிந்த நோயாளிக்கு

யா அல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய நன்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக! நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம் 4/1891

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்கு பல சங்கடங்கள் உண்டு. நூல்: பத்ஹுடன் புகாரி

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப்பெரியவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை. திர்மிதீ, இப்னுமாஜா




கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே. நூல்: முஸ்லிம் 367

இறந்தவருக்காக செய்யும் துஆ

யா அல்லாஹ்!......... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! நூல்: முஸ்லிம் 1528





பிரயாணத்தின்போது




அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 2392

பிரயாணத்திலிருந்து திரும்பும்போது

அல்லாஹ்! இதில் நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 1496

வெளியூரில் தங்கும்போது

முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்து தீங்கின் விட்டும் அவனிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம்4881, 4882

மேட்டில் ஏறும்போது

அல்லாஹ் மிகப்பெரியவன்

மேட்டிலிருந்து இறங்கும்போது

அல்லாஹ் பரிசுத்தமானவன்





மணமக்களை வாழ்த்த

அல்லது

அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக! உம்மீதும் பரகத் செய்வானாக! நலவானவற்றில் உங்களிருவருக்கிடையே அவன் இணைத்தும் வைப்பானாக! நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

மனைவியிடம் செல்வதற்கு முன்பு

அல்லாஹ்வின் பெயரால், யா அல்லாஹ்! ஷைத்தானை எங்களை விட்டும் தவிர்ப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதிலும் ஷைத்தானை தவிர்ப்பாயாக! நூல்கள்: புகாரி 6/141 முஸ்லிம் 2/1028





வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் துஆ

யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டு. நீ யாருக்கு இடர்களை களைந்தாயோ அவர்களுடன் எனது இடர்களையும் களைவாயாக! நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்கு வழங்கியதில் பரகத் செய்வாயாக! நீ செய்த முடிவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக! நீ தான் முடிவு எடுப்பவன். உன் விஷயத்தில் யாரும் முடிவு எடுக்க முடியாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயோ அவர் இழிவடைவதில்லை. எங்கள் இறைவா! நீ உயர்ந்தவன், பாக்கியமிக்கவன். நூல்: திர்மிதி





இருப்பில் ஓதும் கடைசி துஆ

இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்:புகாரி 833

இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய். நூல்:புகாரி 833,6326,7388

நான் முந்திச் செய்ததையும் பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாக் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிட

( புத்தாண்டு 2012 ) பிற மத கலாச்சாரம் பற்றிய குர் ஆன், ஹதீஸ் எச்சரிக்கை 30-12-2011 (அஸ்வர் மதனி)





வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities31/12/2011

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!.. திருக்குர்ஆன். 5:2



இதன் இறுதியில் வரும் Message clipped] View entire message ஐ அழுத்தி முழு தகவலையும் தெரிந்து கொண்டு நீங்களும் பயன் பெறுங்கள் பிறரையும் பயனடையச் செய்யுங்கள் உங்களால் முடிந்தளவுக்கு உதவுங்கள். உங்கள் ஐடிகளுக்கும் ஃபார்வார்டு செய்யுங்கள்.

பெங்களூரு / சென்னை / கோயம்புத்தூர்

openining for SOFTWARE TESTER @STC Third eye

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 10:43 AM

Role: Software Test Engineer
எக்ஸ்பீரியன்ஸ்: 0 Years
ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / கோயம்புத்தூர்
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: MCA
கீ ஸ்கில்ஸ்: Basic Computer Konwlegde
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: STC TECHNOLOGIES PVT LTD
வெப்சைட்: Www.stcthirdeye.com
காண்டாக்ட் பெர்சன்: MR. RAJESH

Landline: +91-422-437 0284

சென்னை

BFA Flash artist wanted for Game designing company

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 10:25 AM

Role: Graphic Designer / Animator
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 4 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: BFA, Flash
வீனே: MSK IT Solutions, Shanmugam nagar, Madamabakkam
main road, Guduvancheri-603202
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
நிறுவனத்தின் பெயர்: MSK IT Solutions
காண்டாக்ட் பெர்சன்: SaravananManickam

Mobile: +91 - 97911 73375

Verified

BFA artist wanted for gaming company. For do background art for games. MSK IT Solutions is Multi game company since 2008. Freshers/exp. For freshers basic 8000k PM. Ph: 9791173375

சென்னை

Dotnet Trainees Needed For Vicaprilabs

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 09:36 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: C#, ASP.NET & SQL SERVER.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
நிறுவனத்தின் பெயர்: Vicaprilabs
வெப்சைட்: Www.vicaprilabs.com
காண்டாக்ட் பெர்சன்: Ashwin

Landline: +91-44-4213 2748

DOTNET TRAINEES NEEDED FOR VICAPRILABS
Experience: 0 Years
SALARY IS NOT A CONSTRAINT FOR A RIGHT CANDIDATES
Education: UG - Any Graduate - Any Specialization PG - Any PG Course - Any Specialization
Industry Type: IT-Software/ Software Services
Desired Candidate Profile: Immediate openings for DOTNET freshers!!!
Skill: Basics in C#, ASP.NET & SQL SERVER.
Exp: 0-1yr
Location: Bangalore, Chennai, Pune, Hyderabad
Vicapri Labs
Vicapri Services India Pvt. Ltd.
No. 11, First Floor, RNJ Enclave,
Mahalingapuram Main Road,
Nungambakkam,
Chennai - 600 034.
Tel : +91-44-4213 2747/48
Email: contactus@vicaprilabs.com/careers@viaprilabs.com

www.vicaprilabs.com

சென்னை

Software Developers – Freshers

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 09:27 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Java, Struts, J2ee, Servlet, JSP, JDBC, Spring
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
நிறுவனத்தின் பெயர்: VICAPRILABS
வெப்சைட்: Www.vicaprilabs.com
காண்டாக்ட் பெர்சன்: ASHWIN

Landline: +91-44-4213 2748

Software Developers – Freshers
Software Developer
Experience: 0-1 Years
Location: Chennai
Education: UG - Any Graduate - Any Specialization PG - Any PG Course - Any Specialization
Industry Type: IT-Software/ Software Services
Role: Software Developer
Functional Area: E-Commerce, Internet Technologies
Desired Candidate Profile: Expertise in Java, Struts, J2ee, Servlet, JSP, JDBC, Spring, Hibernate, Oracle, My-SQL, JBoss, Weblogic, Tomcat server and front-end development experience .Experience in Retail/E-Commerce would be an added advantage.
Job Description: Great opportunity for JAVA developers to work for our International clients
Experience : 0 – 1 year of exp – good Salary
Location: Chennai, Bangalore, Hyderabad
Vicapri Labs
Vicapri Services India Pvt. Ltd.
No. 11, First Floor, RNJ Enclave,
Mahalingapuram Main Road,
Nungambakkam,
Chennai - 600 034.
Tel : +91-44-4213 2747/48
Email: contactus@vicaprilabs.com/careers@vicaprilabs.com

www.vicaprilabs.com

சென்னை

Walkin for BPO NonVoice/SemiVoice/Voice Process on 2nd Jan12

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 11:16 AM

Role: Customer Service Executive (Voice)
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Good Communication Skill
வாக்கின் டேட்: Mon 02 Jan, 2012
வீனே: Firmus Technologies Pvt Ltd. # 755, 4th Block,
Mogappair West,Near JJ Nagar west Bus
depot, Behind TVS showroom and Indian Oil petrol
Bunk,Chennai - 600 037. Ph. No:
9940533983/7358734978
அனுப்பியவர்: ப்லேஸ்மென்ட் கந்ஸல்டென்ட்
நிறுவனத்தின் பெயர்: Firmus Technologies Pvt Ltd
வெப்சைட்: Www.firmus.in
காண்டாக்ட் பெர்சன்: Jahnavi Sri

Landline: +91-44-900325 3353

Walkin for BPO Non Voice / Semi - Voice / Voice Process on 2nd Jan 2012
Requirements:
Any Graduates / Diploma holders interested to work with BPO Can Walkin.
12th Completed candidates can walkin for Voice/Semi-Voice Process.
Walkin with your 10th or 12th Original Marksheet.
Walkin Date : 2nd Jan 2012.
Pls Note: No Processing fee taken from Candidates
Contact Person: Jahnavi Sri
Walkin Venue: Firmus Technologies Pvt Ltd.
# 755, 4th Block, Mogappair West,Near JJ Nagar west Bus depot,
Behind TVS showroom and Indian Oil petrol Bunk,Chennai - 600 037.
Ph. No: 9940533983/7358734978

யு.ஏ.இ

Certificate Attestation from External Ministry and Embassies

வெளியிட்ட நாள்: Thu, 29 Dec 2011, 09:33 AM

பீல்டு: எலெக்ட்ரிகல் / எலெக்ட்ராநிக்ஸ் / மெக்யாநிகல்
எஜுகேஷன்: B.E/B.Tech / M.E/M.Tech/MS
கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: இஞ்ஜிநியரிங்க்
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 10+ Years
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Apex International
வெப்சைட்: Www.documentattestation.in
காண்டாக்ட் பெர்சன்: Jai

Mobile: +91 - 98730 76428

Verified

We provide professional assistance for document legalization services like, Document Authentication / Document Attestation / Certificate Authentication / Certificate Attestation, Apostille certification Through HRD, MEA (Ministry of External affairs) and Embassies like Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia (KSA), and United Arab Emirates (UAE) and all other country Embassies.

These documents can either be educational or non-educational certificates like Marriages certificates, Degrees, Birth Certificates, PCC, Medical reports, exports related documents Etc. Your physical presence is not required. Beside this we also provide visa services like visa stamping, spouse visa, dependent visa, Haj Umrah, Vakala services etc.

We assure you to offer fast, reliable, efficient, and secure services.

Safety and reliability is always our top priority and concern.

For more information pls visit our website http://documentattestation.in


Feel free to call us or drop a mail to legalcertification@gmail.com / info@documentattestation.in

(Jai – 09873076428)

"WE ACCEPT CERTIFICATES FROM ANY WHERE IN THE WORLD"

---- Educational Certificates -----
Transfer Certificate attestation
Degree Certificate attestation
PG Degree Certificate attestation
Pre Degree Certificate attestation
BE Certificate attestation
Diploma Certificate attestation
Nursing Certificate attestation
Mark sheet attestation
SSC Certificate attestation
HSC Certificate attestation
Inter Certificate attestation
MBBS Certificate attestation
Dentists Certificate attestation
Engineering Certificate attestation
Transcript Certificate attestation
Nursing Degree Certificate attestation
Nursing Registration Certificate attestation
Pharmacy Certificate attestation
BEd Certificate attestation
MS Certificate attestation
MD Certificate attestation
B Tech. Certificate attestation
-----Non-Educational Certificates-----
Marriage Certificate attestation
Birth Certificate attestation
Leaving Certificate attestation
Police Clearance Certificate attestation
Registration Certificate attestation
Power of Attorney Certificate attestation
Marriage Affidavit Certificate attestation
Medical Certificate attestation
Bona-fide Certificate attestation

சிங்கப்பூர்

urgent openings in singapore( hotel industry jobs)

வெளியிட்ட நாள்: Wed, 28 Dec 2011, 05:57 PM

கன்ட்ரி: Singapore
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 10+ Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Skill/unskill
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மென்ட் கந்ஸல்டென்ட்
நிறுவனத்தின் பெயர்: Primeconsultancy
காண்டாக்ட் பெர்சன்: Shiva

Mobile: +91 - 98865 84899

Verified

We need for E-pass and S-pass
South Indian Cooks - 1200 SGD With Food and Accommodation
Parotta Cooks - 1000 SGD with Food and Accommodation
Parotta Cooks With Malaysia Expericence - 1200 SGD With Food and Accommodation
North Indian cooks- 1200 SGD With Food and Accommodation ,
Managers - 1200 SGD With Food and Accommodation,
Waiters- 1200 SGD With Food and Accommodation,
Accountants 1200 SGD With Accommodation,
Andhra cooks - 1200 SGD With Food and Accommodation ,
Beautician - 1200 SGD With Accommodation,
Administrative - 1000 withAccommodation,
Mechanical Engineers, Electrical Engineers, Electrical Supervisors- Negotiable
Parata Master - 1200 SGD With Food and Accommodation
Drivers-1100 with Accommodation
Depends upon the experience salary vary ,30days process time
service charge Rs220000/
mail your documents to : primehrmys@yahoo.com

சிங்கப்பூர்

Jovee Infotech, Waiter Job Opening in Singapore

வெளியிட்ட நாள்: Wed, 28 Dec 2011, 06:30 PM

கன்ட்ரி: Singapore
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Good Personality, Customer Service
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மென்ட் கந்ஸல்டென்ட்
நிறுவனத்தின் பெயர்: Jovee Infotech
வெப்சைட்: Www.jovee.in
காண்டாக்ட் பெர்சன்: Lidiya

Mobile: +91 - 77083 84747

Verified

Landline: +91-452-319 9910

Waiter Job in 3 Star hotels at Singapore:
1. Position - Waiter
2. Place of work - Singapore
3. Salary - SGD1300
4. Qualification - Any Degree
5. Passed Out - On or before 2008
6. No.of.Vacancies – 40
7. Period of contract – 2 Years
For apply for this job, mail your resume with scan copies of passport, Experience Certificates, Qualification certificates and Photo to job@jovee.in ; web: www.jovee.in, Ph.No : 7708384747

Required Security Guards for UAE, Dubai

வெளியிட்ட நாள்: Wed, 28 Dec 2011, 01:09 PM

கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 3 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Security Guards
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மென்ட் கந்ஸல்டென்ட்
நிறுவனத்தின் பெயர்: Gulf Recruitment
காண்டாக்ட் பெர்சன்: S. PRASAD

Mobile: +91 - 90307 65108

Verified

Required Security Guards for UAE, Dubai . No any educational qualification required. But applicant should speak basic English . Salary will be 1350 Dirham’s (equal to 20,000 Irs ) . And free food , accommodation, Air ticket will be provided . If interested send us simple Bio data or resume at the earliest . No Advance

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
2 Attached files| 276KB

வெள்ளி, டிசம்பர் 30, 2011

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…


தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். “என் டாடி சூப்பர்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

“டாடி பிளீஸ்… டாடி… வாங்கிக் கொடுங்க டாடி” என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்… எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா “ என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். “நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்” எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர “அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது” என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

“எங்க காலம் தான் பொற்காலம்… இப்போ எல்லாம் டெக்னாலஜி சாத்தான் ஆட்டம் போடுது” என பழமை பேசாதீர்கள். அது உங்கள் டீன் ஏஜ் மகளை உங்களிடமிருந்து ரொம்பவே விலக்கி வைத்து விடும். காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மகள் ஏ.ஆர் ரஹ்மான் பிரியை என்றால் ஒரு ஐ-பாட் வாங்கி நிறைய ஏ.ஆர் ரஹ்மான் பாட்டை நிரப்பிக் கொடுங்கள். அவள் ரசிக்கட்டும். அப்போது தான் நீங்களும் உங்களை இளமையாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், “என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..” என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும் ! அதை விட்டு விட்டு, “என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா….” என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி ! மதிக்கிறீர்கள். சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், காதல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். “எதுவானாலும் கவலையில்லை … அப்பா இருக்கிறார்” எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.

எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். “அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது” எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, காதல் எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். “அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.

இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள் ? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். சின்னச் சின்ன மன வருத்தங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது கூட இந்த வயதில் சகஜம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான இளம் பெண்கள் புகை, போதை என பரிசோதித்துப் பார்ப்பது இந்தப் பதின் வயதில் தான். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது “அப்பா தான் உலகம்” எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். “என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்” எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

கடைசியாக ஒன்று. “ என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்” என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக ஜெயித்து விட்டீர்கள் என்று பொருள் ! ஜெயிக்க வாழ்த்துக்கள் !

பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…

ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க் கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஹாஸ்டல்கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளை மீறி அத்து மீறல் சமாச்சாரங்களைச் செய்து திரியும் வசீகரத் திமிர் கல்விக் கால இளமையின் சொத்து.

அந்தக் காலகட்டத்தையெல்லாம் தாண்டி சமூகத்துக்கு வரும்போது இன்னொரு வகையான ஹாஸ்டல்கள் உதவிக்கு வருகின்றன. வீட்டை விட்டு வெளியூர்களில் தனியே வேலை செய்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இத்தகைய ஹாஸ்டல்கள் தான் ஆபத்பாந்தவன்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் மேன்ஷன்கள் கை கொடுக்கின்றன. பெண்களுக்கு ஹாஸ்டல்கள் தான். லேடீஸ் ஹாஸ்டல், விமன் ஹாஸ்டல், வர்க்கிங் விமன் ஹாஸ்டல் என பல பெயர்களில் பல வகைகளில் ஹாஸ்டல்கள் முகம் காட்டுகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில், சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே கழைக்கூத்தாடியின் கயிற்று நடை போன்றது. அதிலும் ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் அவ்வளவு தான். கிடைக்கும் சம்பளமே போதாது ! தனியே பர்சனல் லோன் தான் வாங்கி வாடகையே கட்டவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட திகிலூட்டும் விலைவாசிக்கு கொஞ்சம் ஆறுதல் நிழலாய் வந்து நிற்பது இந்த ஹாஸ்டல்கள் தான்.

செலவு கம்மி. நிறைய பெண்கள் சேர்ந்திருப்பார்கள் என்பதால் கொஞ்சம் பாதுகாப்பு உணர்வு. பொழுதும் போகும். உணவுக்காக வெளியே அலைய வேண்டிய அவசியம் இல்லை இப்படி ஏகப்பட்ட வசதிகள் ஹாஸ்டல்களில் உண்டு. அதேபோல ஹாஸ்டல் வாழ்க்கை நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும். குறிப்பாக நண்பர்களோடு சேர்ந்து வாழ்வது. பகிர்ந்து வாழ்வது, இருக்கும் வசதிகளைக் கொண்டு “அட்ஜஸ்ட்” பண்ணி வாழ்வது, சில விஷயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது என ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இங்கே உண்டு. ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் இடங்களில் ஒன்று இந்த ஹாஸ்டல் எனலாம்.

அதே நேரம் தற்கொலைகள், ராகிங்கள், ரகசிய தவறுகள் என ஏகப்பட்ட சிக்கல்களும் விடுதி வாழ்க்கையில் புதைந்து கிடக்கின்றன. இதனால் ஹாஸ்டலில் தங்குபவர்கள் பல விஷயங்களில் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஒரு ஹாஸ்டலில் போகும்முன் அதன் வரலாறைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அதை நடத்துபவர்கள் யார் ? நம்பகத் தன்மை உடையவர்கள் தானா ? ஏதேனும் மதம் சார்ந்த பின்னணியா ? என்பதையெல்லாம் அலசுங்கள். இணையத்தில் அந்த ஹாஸ்டலின் பெயர் அடிபடுகிறதா ? மக்கள் அதைப்பற்றி என்னென்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்தால் விடுதி பற்றி பல விஷயங்கள் சடுதியில் உங்களுக்குக் கிடைக்கும். அந்தத் தகவல்கள் எல்லாம் இருந்தால் ஒரு நல்ல ஹாஸ்டலைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிது !

ஹாஸ்டல் அமைந்திருக்கும் ஏரியாவையும் கவனியுங்கள். ரொம்பத் தனிமையான இடமா ? ஆறுமணிக்கு மேல மருந்துக்குக் கூட ஆள் நடமாட்டம் இருக்காத இடமா ? அமானுஷ்யமான ஒரு சூழலா ? பக்கத்துலேயே டாஸ்மாக் டான்ஸ் தெரு இருக்கிறதா ? இப்படிப்பட்ட இடங்களை ஒதுக்கிட்டு வேற இடம் தேடறது உங்களுக்கு நல்லது. பாதுகாப்பான, வெளிச்சமான, அதிக ஆள் நடமாட்டமுடைய, டீசண்டான இடத்திலிருக்கும் ஹாஸ்டல்கள் உங்களுடைய முதல் தேர்வாய் இருக்கட்டும்.

ஹாஸ்டலில் சேர்ந்தாச்சா ! முதல் வேலை உங்கள் ரூமில் இருக்கும் நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வது. ரூமுக்குள்ள போனதும் போகாததுமா உங்களுடைய புராணங்களை அவிழ்த்து விட ஆரம்பிக்காதீர்கள். ரூமில் இருக்கும் நபர் எப்படிப்பட்டவர் ? பூர்வீகம் எங்கே ? எங்கே வேலை செய்கிறார் ? அவருடைய குணாதிசயம் எப்படி என எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாகவே உங்களுடைய ஹாஸ்டல் நாட்கள் ஓடட்டும். “பத்து நிமிஷம் பேசினேன் அதுக்குள்ள ஒண்ணுக்குள்ளே ஒண்ணாயிட்டோம்” டைப் நட்புகள் பலவும் பாதியிலேயே கரையும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

நீங்க போகும் ஹாஸ்டலில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். இருந்தால் ரொம்ப நல்லது. அல்லது உங்கள் ஊர்க்காரர், பக்கத்து ஊர்க்காரர் போன்ற நபர்கள் கிடைத்தால் நல்லது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்புக்கும், பொழுதுபோக்குக்கும் அது உத்தரவாதம் தரும்.

ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “மன்னார் அண்ட் மன்னார்” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும் அத்தகைய பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப் பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிட்டுத் திரிய வேண்டாம். நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை மனசுக்குள் எழுதி வைத்திருங்கள்.

ஹாஸ்டல்களுக்கு வரும்போது வீட்ல இருக்கிற நகை நட்டையெல்லாம் எடுத்துப் பையில போட்டுட்டு வராதீங்க. அவையெல்லாம் வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ பத்திரமாக இருக்கட்டும். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில் வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. அப்படியே வைத்திருந்தால் கூட அதை வார்டனோட பாதுகாப்பில் வைத்திருக்க முடிந்தால் ரொம்ப நல்லது !

நீங்க நீங்களாகவே இருங்க. உங்க ரூம்மேட் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். கிழிந்த பேண்ட் போடலாம், அல்லது முழுக்க போர்த்தி நடக்கலாம், பர்தா போடலாம் அல்லது பாவாடை போடலாம். அது அவரவர் விருப்பம். யாரையும் கிண்டலடிப்பதோ, அவர்களைக் காப்பியடிப்பதோ வேண்டாம். நீங்க தாவணி போட்ட தீபாவளியாய் இருக்க விரும்புவது உங்கள் விருப்பம். அடுத்தவங்களைக் காப்பியடிப்பது சில வேளைகளில் அவர்களுக்கே பிடிக்காமல் போய்விடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். குறிப்பாக சிலருடைய நடை உடை பாவனைகள் அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கையாய் இருக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் நீங்களாக இருந்தால், தேவையில்லாமல் பிறருடைய மனதை நீங்கள் புண்படுத்தும் வாய்ப்பையும் தவிர்க்கலாம்!

ஹாஸ்டலில் சட்டதிட்டங்கள் இருக்கும். “சட்டம் இருப்பதே அதை மீறுவதுக்குத் தானே” ன்னு சினிமா டயலாக் பேசி நடக்காதீங்க. சட்டங்களை மதியுங்கள். அப்போதான் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் கூட ஹாஸ்டல் நிர்வாகம் உங்கள் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் “அவ எப்பவுமே அப்படித் தான். எந்த சட்டதிட்டத்தையும் மதிக்கிறதில்லை” என கை கழுவி வேடிக்கை பார்க்க வாய்ப்பு உண்டு. அதே போல சட்ட திட்டங்களை எல்லாரும் மதிக்கிறது தான் ஹாஸ்டலோட நல்ல பெயருக்கும், பாதுகாப்புக்கும் கூட உத்தரவாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை !

அதே நேரத்தில் பல ஹாஸ்டல்கள் அட்வான்ஸ் விஷயத்தில் சில்லறைத் தனமாக நடந்து கொள்வதும் உண்டு. எனவே அட்வான்ஸ் எவ்வளவு ? ஹாஸ்டலைக் காலி செய்யும் விதி முறைகள் என்ன ? எந்தெந்த சூழலில் அட்வான்ஸ் பணம் பிடிக்கப்படும் போன்ற விஷயங்களை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து விட்டு ஹாஸ்டலில் சேருங்கள்.
ஹாஸ்டல்ல இருக்கும்போது பொருட்கள் வாங்கறது, கடைக்குப் போறது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஹாஸ்டல் நிர்வாகத்திடம் ஐடியா கேட்பது ரொம்ப நல்லது. கூட இருப்பவர்களைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளும் வரை அவர்களை கண் மூடித் தனமாக நம்பாமல் இருப்பதே நல்லது !

ஹாஸ்டல்கள் ஒருவகையில் ஹோட்டல்களைப் போல எனும் நினைப்பும் இருப்பது நல்லது. ரகசிய கேமராக்கள் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஹாஸ்டல்களில் நிகழ்வதுண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது பயனளிக்கும்.

பெற்றோரை விட்டுத் தனியே தூரமாய் அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை “தப்பு செய்தா என்ன ?” எனும் அசட்டுத் துணிச்சலின் கதவைத் திறக்கும். உடனே தடாலடியா உள்ளே நுழைஞ்சுடாதீங்க. மெதுவா அந்தக் கதவை அடைத்துவிட்டு உங்க வேலையைப் பார்க்கக் கிளம்பிடுங்க. புகை பிடிக்கும் பழக்கம், தண்ணியடிக்கும் பழக்கம் என ஆரம்பித்து எல்லா வகையான தப்புகளுக்கும் ஹாஸ்டல் நட்பு காரணமாகிவிடக் கூடும். மற்றவங்க கிண்டலடிச்சாலும் பரவாயில்லை. தப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பேன் எனும் மன உறுதி தான் முக்கியம்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை மனசுக்குள் எழுதிக் கொண்டால், ஹாஸ்டல் வாழ்க்கை உங்களுக்கு ஹேப்பி வாழ்க்கையாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.enayamthahir.com

வியாழன், டிசம்பர் 29, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?பொறுப்பைச் சுமக்க வேண்டும்.

திருமணம் விபச்சாரம் போன்றது அல்ல. 'ஒருத்தியை மணந்து கொண்டால் காலமெல்லாம் அவளுக்குரிய உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்; அவள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் சம்பாதிக்க வேண்டும்' என்பதை உணரும் போது ஒரு சதவிகிதம் பேர் கூட அதற்கு முன் வர மாட்டார்கள்.

பலதார மணம் தடை செய்யப்பட்டு விபச்சாரம் தடுக்கப்படாத போது பிற பெண்களை நாடுவோர் மிக அதிக அளவில் இருப்பார்கள்.

விபச்சாரத்தைத் தடுத்து பலதார மணத்தை அனுமதித்தால் அதை விட மிக மிகக் குறைந்த அளவு ஆண்கள் தாம் பிற பெண்களை நாடுவார்கள்.


காரணம் சில ரூபாய்களை வீசி எறிந்து விட்டால் போதும்! வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது எனும் போது பிற பெண்களை சர்வ சாதாரணமாக நாடுவார்கள்.

செய்யும் செயலுக்காக காலமெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் போது பலமுறை யோசித்துத் தான் செய்வார்கள். எனவே பிற பெண்களை நாடுவோரின் எண்ணிக்கை பலதார மணத்தினால் பல மடங்கு குறையும். திருமணம் என்ற முறையில் இல்லாமல் எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் உறவு கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பார்க்கட்டும்! அப்போது புரிந்து கொள்வார்கள்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுபவள் தன் பரிபூரண சம்மதத்துடன் தான் முன் வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாததெனவும் அறிவிக்கிறது.

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்.
எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கமா?
சமீப காலமாக, சிலர் எடுத்து வைக்கும் வினோதமான வாதத்தையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பலதார மணத்தினால் முஸ்லிம்கள் அதிகமாகி நாம் சிறுபான்மையாவோம்; அதனால் பலதார மணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 1961-ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்கள் 36.6 கோடிப் பேர் இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991 ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்களின் எண்ணிக்கை 67.2 கோடியாகும்.

இந்தக் கணக்கின் படி முப்பது வருடங்களில் 100 இந்துக்கள் 183 இந்துக்களாக வளர்ந்துள்ளனர்.

இந்த வளர்ச்சியுடன் மதமாற்றத்தினால் இந்துக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பது ஆண்டுகளில் இலட்சம் இலட்சமாக தலித் மக்கள் புத்த மதங்களைத் தழுவியுள்ளனர்.

முப்பது ஆண்டுகளில் சில மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக மாறும் அளவுக்கு கிறித்தவ மதத்தை பல கோடிப்பேர் தழுவியுள்ளனர்.

நாடு முழுவதும் தினந்தோறும் பல நூறு பேர் இஸ்லாத்தையும் ஏற்றுள்ளனர். கிராமம் கிராமமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

பகுத்தறிவு இயக்கங்களின் எழுச்சியின் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று குறிப்பிடக் கூடிய இந்துக்களும் பெருகியுள்ளனர்.

இவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் இந்துக்களாகப் பிறந்தவர்கள் தான். இந்துக்களாகப் பிறந்து விட்டு வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் தான்.

மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மதம் மாறுவதாக இந்துத்துவ இயக்கங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றனர்.

மாதம் ஒரு லட்சம் இந்துக்கள் பௌத்தவர்களாகவும், கிறித்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும், மதம் சாராதவர்களாகவும் மாறுகிறார்கள் என்றால் வருடத்திற்கு 12 லட்சம் பேர் மதம் மாறுகின்றனர். 1961 முதல் 1991 வரை உள்ள முப்பது வருடங்களில் பல்வேறு மதங்களுக்கு மாறிய இந்துக்கள் 3.6 கோடியாவர்.

1961-ல் அதவாது 36.6 கோடியாக இருந்த இந்துக்கள் 67.2 + 3.6 = 70.8 என்ற கணக்கில் பெருகியுள்ளனர். அதாவது நூறு இந்துக்கள் முப்பது ஆண்டுகளில் 193 இந்துக்களாகப் பிறப்பின் அடிப்படையில் பெருகியுள்ளனர்.

இதைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தைக் காண்போம்.
1961-ல் இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி முஸ்லிம்கள் 4.6 கோடியாக இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.5 கோடி.

நூறு இந்துக்கள் 193 இந்துக்களாகப் பிறப்பால் பெருகுகின்றனர் என்ற கணக்குப் படி முஸ்லிம்களின் பிறப்பு விகிதமும் இருந்தால் 4.6 கோடியாக இருந்த முஸ்லிம்கள் 8.87 கோடியாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கை விட 63 லட்சம் முஸ்லிம்கள் தான் அதிமாக உள்ளனர்.

அதாவது முப்பது ஆண்டுகளில் இந்துக்களின் வளர்ச்சி விகிதத்தை விட 63 லட்சம் பேர் அதிகம் என்றால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ஆகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணம் பிற மதங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவுவோர் தான். ஆண்டுக்கு இரண்டு லட்சத்தை விட அதிகமாகவே முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் கணக்கு ஜீரோவிலிருந்து தான் துவங்குகிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் காரணத்தினாலேயே முஸ்லிம்கள் இங்கே உருவானார்கள். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடக்கின்றது. எனவே முஸ்லிம்களாக மதம் மாறியவர்களைத் கழித்துப் பார்த்தால் இந்துக்கள் தமது மனைவியர் மூலம் எந்த அளவு மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களோ அதே கணக்குப் படி தான் முஸ்லிம்களும் மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள். நான்கு மனைவியரைத் திருமணம் செய்வதால் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகம் வளர்ச்சியடைந்து விட்டார்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

மேலும் நடைமுறையில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக சதவிகிதத்தில் பலதார மணம் புரிந்துள்ளனர். இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்.

அதிக மனைவியரை மணந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் முஸ்லிம்களை விட அதிக அளவு பலதார மணம் செய்துள்ள இந்துக்களுக்குத் தான் இந்தக் குற்றச்சாட்டு பொருந்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலதார மணத்துக்கு நாம் எடுத்து வைத்த நியாயமான காரணங்களை அவர்கள் சிந்தித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கம் இல்லை என்பதை உணர்வார்கள்.

சட்டப்படி யாருக்கு தடை உள்ளதோ அவர்கள் அதிக அளவு பலதார மணம் செய்வதிலிருந்து தடைச் சட்டத்தால் பயன் ஏதும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

பலதார மணம் செய்வதுடன் சின்ன வீடு வைத்துக் கொண்டவர்களையும் கணக்கிட்டால் இந்தச் சதவிகிதம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!



பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
erainesan

துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது.


சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எதிரெதிர்த் திசைகளில் அதிவேகத்தில் மோதவிட்டு அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர். அந்த ஆய்வின் இடைக்கால முடிவில் கடவுளின் அணுத்துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) http://www.guardian.co.uk/science/2011/dec/13/higgs-boson-lhc-explained/print என்ற துணை-அணுத்துகள்கள் (Sub-Atomic Particle)இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர்ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அது என்ன ஹிக்ஸ் போஸன்?

அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத்துகள்களால் ஆனது என்பதே விஞ்ஞானத்தின் நம்பிக்கையாக ஆரம்ப கட்டத்தில் இருந்தது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்தத் துணை அணுத்துகள்களின் கூட்டுநிறையாக இருக்கவேண்டும். ஆனால் ஆச்சரியகரமான வகையில், ஒரு புரோட்டானின் நிறையானது இந்தத் துணை அணுத்துகள்களின் மொத்த நிறையைவிட மிகமிக அதிகமாகவே உள்ளது. இதனால், புரோட்டானில் மேற்குறிப்பிட்ட மூன்று துணை அணுத்துகள்களைவிட கூடுதலாக வேறு ஏதோ ஒரு "சக்தி" மறைந்துள்ளது என்பது விஞ்ஞானிகளின் யூகம். என்னவென்று அறியப்படாத இந்த மறைசக்திக்கு விஞ்ஞானிகள் போட்டப் பெயர்தான் "ஹிக்ஸ் போஸன்" - "கடவுளின் அணுத்துகள்". அணுவை இயக்கும் தன்மை ஹிக்ஸ் போஸனுக்கு உண்டு என்பதாலேயே விஞ்ஞானிகள் அதற்கு இத்தகைய பெயரிட்டுள்ளனர். அவ்வாறு ஒரு மறைவான சக்தி புரோட்டானுக்குள் ஒளிந்திருப்பதை உறுதிபடுத்தி, அதனைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியே 'ஹிக்ஸ் போஸன்' ஆய்வு.

Dim lights Embed

பெளதிகத்தில் Higgs Boson என்பதற்கு, "a particle predicted to exist in the Standard Model but as yet undetected; it is a massive scalar particle responsible for giving mass to other elementary particles" - "நிரூபணமில்லாத/புலப்படாத மறைந்துள்ள ஒரு துகள்; அது அணுக்களின் துணைத் துகள்களுக்கு நிறையை (MASS) வழங்குகிறது" என்று பொருள்கொள்ளப்படுகிறது!

சரி, இந்த ஹிக்ஸ்போஸனைக் கண்டறிய அப்படி என்னதான் அபாயகரமான ஆய்வினை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்?

பலகோடிக் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்துத் சிதறடித்தால், புரோட்டானின் துணை அணுக்களான குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றுடன் மின் காந்தக் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவையும் வெளிப்படும். அவ்வாறு புரோட்டான் சிதறும் போது இவற்றுடன், நிரூபிக்கப்படாத அந்த மறைதுகள் 'ஹிக்ஸ் போஸனும்' வெளியேறும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.


இவ்வாறான ஒரு சோதனையைச் சாதாரணமாக மேற்கொண்டுவிட முடியாது. பலகோடிக்கணக்கான புரோட்டான்களை ஒளிவேகத்தில் மோதவிடுவதால் வெளிப்படும் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவைகள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கலாம். ஆகவே இதற்காக பூமிக்குக் கீழே சுமார் 300 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளத்துக்கு வட்ட வடிவில் சுரங்க ஆய்வகம் ஒன்றை விஞ்ஞானிகள் அமைத்தனர். இந்த 27 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட நீள பைப் ஒன்றை அமைத்து, அதனுள் சோதனைக்குரிய கோடிக்கணக்கான புரோட்டான்களை மோதவிட்டனர். இந்த பைப்பிற்கான பெயரே, Large Hadron Collider சுருக்கமாக LHC.

இந்த வட்டவடிவ சுரங்கத்தினை அமைக்க சுமார் 5.8 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. 5000 விஞ்ஞானிகள் இணைந்த இந்தக் கூட்டுமுயற்சியில், சுரங்கத்தின் இரு பகுதிகளில் தனித்தனியாக விஞ்ஞானிகள் தலைமையிலான இரு குழுக்கள் இச்சோதனையில் ஈடுபட்டது. கடந்த 2008 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்கட்டமாக ஒரு பக்கத்திலிருந்து புரோட்டான்கள் அதிவேகத்தில் பாய்ச்சப்பட்டன. அது பயணப்படும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கண்டக்டிவ் காந்தங்கள், புரோட்டான்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க வைக்கும். இவ்வாறு அதிகரிக்கும் புரோட்டான், ஒரு வினாடியில் அந்த 27 கிலோமீட்டர் நீளத்தை சுமார் 11,245 முறை சுற்றி வரும். இந்த வேகத்தில் புரோட்டான்கள் சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர் திசையிலிருந்து மற்றொரு கொத்து புரோட்டான்கள் அதிவேகத்தில் அவற்றின்மீது பாய்ச்சப்படும். இவ்வேளையில் அவை சிதறடிக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலே குறிப்பிட்டவாறு அதன் துணை துகள்களோடு, கதிர்வீச்சு, வெப்பம் போன்றவற்றோடு ஹிக்ஸ் போஸனும் வெளிப்படும்.

இந்தச் சோதனையின் 'இடைக்கால முடிவில்'தான் 'ஹிக்ஸ் போஸன்' இருப்பது உண்மைதாம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வில் நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம்! இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு 'ஹிக்ஸ் போஸன்' தான் காரணம் என்பதற்கான முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எனினும், தங்களின் நம்பிக்கையை உறுதியான-இறுதியான ஆதாரங்களுடன் நிருபிப்பதற்கு இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலுள்ள எண்ணற்ற நம்பிக்கைகளுள் அதிகம் சர்ச்சைக்குள்ளான நம்பிக்கையாக இருப்பது கடவுள் நம்பிக்கை. கடவுளைப் போதிக்கும் எல்லா மதங்களிலும் கடவுளுக்கு வெவ்வேறு இலக்கணங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் கடவுளும் மனிதர்களைப் போன்றே பெற்றோர்-மனைவி-குழந்தை-குட்டி என்று கூட்டுக்குடித்தனமாக வாழ்வதாக நம்புகிறார்கள். வேறுசிலர், கடவுளுக்கு மனித கற்பனைக்கு எட்டாத உருவங்களைக் கொடுத்து (அவற்றில் சில விகாரமாகவும் உள்ளன) அவற்றை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இவ்விரு சாரார்களின் கூற்றுக்களிலிருந்தும் இஸ்லாம் வேறுபடுகிறது.

இந்த இருவகை நம்பிக்கையாளர்களிலிருந்து மாறுபட்டுள்ள இன்னொரு நம்பிக்கையாளர்களும் உள்ளனர்! கடவுள் இல்லை என்று நம்புபவர்கள்! இவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை யாதெனில், கண்களால் காணமுடியாதது கடவுளாக இருக்க முடியாது என்பதாகும். ஏனெனில், கடவுளை யாரும் கண்டதில்லை; இனியும் காணமுடியாது என்பதே - அதாவது கடவுள் என்பது ஆய்வுகள் மூலம் நிருபிக்க முடியாத ஒரு பொருள் அல்லது சக்தி என்பது இவர்களின் நம்பிக்கை. கடவுளை மனித வடிவில் உருவகிக்கும் நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இவர்களின் கேள்விகள் உள்ளன. கடவுள் குறித்த இவர்களின் கேள்விகளுக்குப் பதிலாக இஸ்லாத்தின் கடவுள் கோட்பாடு உள்ளது.

Dim lights Embed

"கடவுள் ஒருவனே(பெறப்படவுமில்லை-பெற்றவனுமில்லை); அவனுக்கு மனிதர்கள் விளங்கிக்கொள்ளும்படியான உருவமில்லை. படைப்புகளின் அதிபதி, பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்; அவன் ஒப்பாரும் மிக்காரும் அற்றவன்" என்றெல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கடவுளின் தன்மையையும் இருப்பையும் இஸ்லாம் வரையறை செய்கிறது. கடவுளைப்பற்றிய வரையறைகளைக் கடவுளே சொல்வதுதான் அறிவுப்பூர்வமானது. அவ்வகையில் கடவுள்பற்றிய குறிப்புகள் அடங்கிய வழிகாட்டல்களின் தொகுப்பே குர்ஆன்.

கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தங்களை, "பகுத்தறிவாளர்கள்" என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் கடவுள் பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் பகுத்து அறியாதவர்களே! பகுத்து-அறிவது என்றால் இம்மூன்று கோட்பாடுகளிலும் ஏதேனும் ஒன்றைப் பகுத்தறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை ஆகிய இரண்டும் இவர்களின் பகுத்தறியும் திறனுக்கு எட்டவில்லை என்பது மட்டுமே காரணமாக உள்ளது.

இவர்களன்றி இன்னொரு வகையினரும் உள்ளனர். விஞ்ஞானிகள்! அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபணம் செய்து நம்புபவர்கள். விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும் சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அல்லது அதுகுறித்த சிந்தனையோ /ஆர்வமோ இல்லாதவர்களாகவுமே உள்ளனர். அறிவியலின் பலகூறுகளிலும் ஆய்வுகளைச் செய்து, அதன் பின்னணியில் 'ஏதோவொரு அமானுட சக்தி' இருப்பதாக நம்பி, கடவுள் கோட்பாடு குறித்த கொள்கைகளை ஆராய்ந்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களும் பலர் உள்ளனர். இன்னும் சிலர் இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை கொள்வர்!

கடவுளைக் கண்டுபிடிக்கும் ஆய்வின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, நிச்சயமாக இவர்களது புறக்கண்களால் கடவுளையோ அல்லது கடவுளின் துகளையோ காணமுடியாது. உண்மையில் விஞ்ஞானிகள் தற்போது பெயரிட்டு அழைக்கும் "கடவுளின் துகள்" என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை. ஓர் உருவத்தை மனிதனால் தீர்மானிக்க முடிந்தால், அது கடவுளேயில்லை என்பதுதான் இஸ்லாத்தின் தீர்வு! ஆகவே, "கடவுளைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படும்" இந்த விஞ்ஞானிகள் செலவு செய்யும் கோடிக்கணக்கான பொருளாதாரத்தை மனித முன்னேற்றத்துக்குச் செலவிட்டால் பிரயோசமாக இருக்கும்.

இதுவரையிலும் இவர்கள் கண்டுபிடித்திருப்பது (?!) என்னவெனில் புரோட்டானின் உபரி நிறைக்கு 'ஏதோ ஒன்று' மறைமுகக் காரணமாக இருக்கிறது. முடிவற்ற இவர்களின் முடிவு சொல்வது என்னவெனில் அந்த ஏதோ 'ஒன்றை'த் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்களாம்!

"கடவுளின் துகளை!?" மேலும் பலகோடி டாலர் செலவழித்து நுணுக்கமாகக் கண்டுபிடித்தாலும்கூட, ப்ரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களைக் கண்டுபிடித்தப்போது விஞ்ஞானம் ஒருபடி முன்னேறியதுபோல் அதுவும் ஓர் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இருக்குமேயன்றி, மரணத்துக்கு முன்னதாக கடவுளின் இருப்பை மனிதர்களால் காணமுடியாது என்பதே எதார்த்தம்! இதைப்புரிந்து கொள்வதற்கு "விஞ்ஞான அறிவாளி"களாக இருக்கவேண்டிய அவசியமில்லை; இஸ்லாத்தைப் புரிந்துகொண்ட சாதாரண முஸ்லிமாக இருந்தாலே போதும்!

- ஜமாலுத்தீன்


Read more about சத்தியமார்க்கம்.காம் > துகளுக்குரிய கடவுள் பெயரால்..! Courtesy: www.satyamargam.com

புதன், டிசம்பர் 28, 2011

அல் குர்ஆன் ( 102 ) சூரா அத் தக்காதுர் விளக்கம் (7) 23-12-2011 (அஸ்வர் மதனி)part 3

வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities28/12/2011

சென்னையில்

Openings for Java Developers with minimum 6 month experience

வெளியிட்ட நாள்: Tue, 27 Dec 2011, 10:09 AM

Role: Software Engineer / Programmer
எக்ஸ்பீரியன்ஸ்: 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: M.Sc / MCA
கீ ஸ்கில்ஸ்: Core Java, J2EE, J2ME, My Sql, Struts, Swing, JSP, Java Scri
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
அனுப்பியவர்: கஂபநீ
நிறுவனத்தின் பெயர்: Mirror Technologies
வெப்சைட்: Www.mirrortech.in
காண்டாக்ட் பெர்சன்: Manoj

Openings for Java Developers with minimum 6 month experience
JOB CODE: JA05
No of posts: 2
Educational Qualification:
BE-CSE / BTECH-IT, MCA, Msc-CS, Msc-IT
Skills Requirement:
Core java, J2EE, J2ME, My sql, Struts, swing, JSP, Java script, Spring framework and Hibernate.
Candidates should have individual working capability.
Apply* only if you are interested.
Forward your resume to mirrorjobs@gmail.com

Office Address:
Mirror Technologies
# 73, 1st floor,
South Sivan koil Street,
Vadapalani
Chennai-26
Land mark: Opp to K.M.G kalyanamandapam,
Near Vadapalani Signal.
Ph: 9381958575, 7667848474, 044-42048874

Note: Mention the following details in the subject:
Name, Qualification, Experience and Job code
*Only Tamil nadu candidates are preferred.

சென்னையில்

Wanted Heavy Vehicle Service Maintenance

வெளியிட்ட நாள்: Tue, 27 Dec 2011, 11:03 AM

Role: Maintenance
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 3 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Diploma
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: "Servicing & Maintenance"
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: Shri Harish Consultancy.in
வெப்சைட்: Www.shriharishconsultancy.in
காண்டாக்ட் பெர்சன்: V.Paramasivam

Landline: +91-44-2223 1911

ITI - Motor Mechanic, Diesel Mechanic with/ without Government apprenticeship with above 1 year Experience in Heavy Vehicle service oriented units.
Diploma in Mechanical/Diploma in Automobile with above 1 year Experience in the Heavy vehicle service oriented units.
Adequate knowledge and Experience to find out the Heavy vehicle problems & solving techniques is required.
To Cordial relationship with Public & give the right direction and advice to clients.
Salary will be based on the Experience, area of knowledge and problem solving techniques + Canteen Facilities + Statutory Benefits etc.,
For Further details may please contact:
V.Paramasivam
Senior Head operation
9884305006,9003237912
9176773006,044-22231911
E
- Mail Id: paramasivam_hrd@yahoo.co.in

paramasivam@shriharishconsultnc
y.in
Website: www.shriharishconsultancy.in
Note: **We are not charging any single pie from the Candidates. Totally Free of cost**

சென்னை, பெங்களுரில்

indiapropertystores.com, property search, buy property, pr

வெளியிட்ட நாள்: Tue, 27 Dec 2011, 01:11 AM

Role: Database Administrator (DBA)
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 5 Years
ஜாப் லொகேஷன்: சென்னை / மும்பை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: C,c++
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
அனுப்பியவர்: கஂபநீ
நிறுவனத்தின் பெயர்: Megatech Company
காண்டாக்ட் பெர்சன்: Ram

View similar ads

Description

indiapropertystores.com no.1 website where you can sell property buy property rent property in all over India for more details visit our website.
Thank you. Regards, indiapropertystores.com

Relationship Manager / Senior Relationship manager

வெளியிட்ட நாள்: Tue, 27 Dec 2011, 11:03 AM

Role: Direct Marketing - Executive
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 5 Years
ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / ஹைதராபாத் & செக்கந்தராபாத்
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: MBA/PGDM
கீ ஸ்கில்ஸ்: Sales, Marketing, Business Development
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: A Reputed Client Of VASP Inc
காண்டாக்ட் பெர்சன்: Manoj

Landline: +91-80-4206 3341

Will be involved into Relationship Building & Management with the customer for Sales & Services of Financial Products. [Online Trading Account, Life Insurance, Mutual Funds, Investment Advisory, Wealth Management, Genaral Insurance]
To manage customers in the branch or through client visits & provide Financial / Investment Advisory, Develop new relations through referencing & other sources.
To generate leads and act as a productive resource by meeting targets thereby ensuring the fulfillment of budgetary expectations of the organization.

லண்டனில்

Commis Chef - Knightsbridge - London

வெளியிட்ட நாள்: Tue, 27 Dec 2011, 10:25 AM

கன்ட்ரி: UK
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 6 Years
Basic/UG qualification: BHM
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: CHEF
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS
வெப்சைட்: Www.pegasusstaffing.com
காண்டாக்ட் பெர்சன்: JUDITH WILSON

Landline: +91-44-4204 6607

Commis Chef – Knightsbridge - London
The ideal candidate will have previous experience managing a team within a similar environment and will be passionate about amazing food and exceptional service.
We are looking for individuals who are used to working in this kind of environment to continue to take our events kitchen from strength to strength
Key Accountabilities of a Commis Chef
•Ensure that dishes are prepared and cooked according to the specific restaurant standards.
•Ensure that stock is rotated and controlled within the specific section of the kitchen.
•Ensure the cleaning schedule is adhered to and that cleaning tasks are completed.
•Maintain a detailed Knowledge of the full menu and be able to explain dish descriptions.
•Ensure compliance with legal requirements under the H&S act 1974 and Food Hygiene.
•Ensure all policies, procedures, standards, specifications, guidelines and training programmes are carefully adhered to.
The successful candidate will:
•Have previous experience in a Commis Chef role within a similar environment
•Fully understand how the role contributes to the success of the restaurant.
•Ensure procedures are carefully followed at all times.
•Maintain a good level of understanding of the restaurant and hospitality industry.
•Builds effective and constructive relationships.
•Communicate clearly, professionally and concisely.
•Work collaboratively with others in pursuit of team goals.
Preferably a recognised catering qualification gained
As above must have excellent cooking skills within the remit of Indian Cuisine with knowledge from all regions ie south and north Indian cuisine
Exp – around 2 – 4 years
Age not more than 35 years
You must be eligible to live and work in the UK
It is unlawful to work in the UK without a valid permit, Kindly note that the employer will not sponsor for the candidate and the expenses would be borne by the candidate. Only such candidate need respond.
Validity of work permit 24 months
Auto responders from portals would not be considered.
Interested candidates may respond direct to Judith@pegasusstaffing.com
Our contact details:
Pegasus Staffing Solutions
93 Arcot Road
Lakshmi Towers
IV Floor
Kodambakkam
Chennai 600024
India
Phones: 91 44 42046607/08
Web: www.pegasusstaffing.com

லண்டனில்

Sous Chef - Airport Restaurants - London

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 03:54 PM

கன்ட்ரி: UK
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 5 Years
Basic/UG qualification: BHM
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: CHEF
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS
வெப்சைட்: Www.pegasusstaffing.com
காண்டாக்ட் பெர்சன்: JUDITH WILSON

Landline: +91-44-4204 6607

Sous Chef - Airport Restaurant - London
•Working with the head chef in overseeing and manage the Inflight chef brigade and kitchen porters to ensure smooth operation

•To lead the brigade in a proactive and motivational manner in the head chefs absence

•To ensure that the food sent to every client is of the highest possible standard

•Delegate daily work load and responsibilities in the Head Chefs absence

•To ensure that all food is prepared, produced and packed on time

•Lead by example in “being hands on” with food preparation and production

•Monitor and manage systems and process to aid the Inflight production processes

•To assist in standardising menus and food items

•Encourage employee interaction between all departments

•Work with the Inflight Manager to set and achieve targets and goals

•Assist in recruitment, training, development and assessment of kitchen brigade

•Carry out all food procurement, stock inwards, stock management and minimalise wastage
•To train the kitchen brigade to deliver consistent quality and portion control every time.

•To assist the head chef in ensuring that all legislative and Government guidelines are adhered to including The Food Safety Act, Health & Safety at Work Act, COSHH and Fire Regulations

•To ensure that all production and associated areas are tidy, clean and hygienic at all times, installing a “clean as you go” practise.

•To assist in managing and monitor daily and weekly cleaning duties

•To consider and assist where necessary other company departments

•Any other reasonable duties as requested by management from time to time
Preferably a recognised catering qualification gained
As above must have excellent cooking skills within the remit of Indian Cuisine with knowledge from all regions ie south and north Indian cuisine
Exp – around 2 – 4 years
Age not more than 35 years
You must be eligible to live and work in the UK
It is unlawful to work in the UK without a valid permit, Kindly note that the employer will not sponsor for the candidate and the expenses would be borne by the candidate. Only such candidate need respond.
Validity of work permit 24 months
Auto responders from portals would not be considered.
Interested candidates may respond direct to Judith@pegasusstaffing.com
Our contact details:
Pegasus Staffing Solutions
93 Arcot Road
Lakshmi Towers
IV Floor
Kodambakkam
Chennai 600024
India
Phones: 91 44 42046607/08
Web: www.pegasusstaffing.com

சவுதியில்

Urgently Required DoctorFor Ministry Of Health Saudi Arabia

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 12:02 PM

கன்ட்ரி: Saudi Arabia
ஜாப் கேட்டகரி: மெடிகல் & ஹெல்த் கேர்
Role: Doctor
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 3 Years
Basic/UG qualification: MBBS
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Doctors & Staff Nurses
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: Al Zain Consultants Pvt. Ltd.,
காண்டாக்ட் பெர்சன்: Mr. Nasir

View similar ads

Description

VACANCIES IN CARDIAC SPECIALIST CENTERS IN MINISTRY OF HEALTH, SAUDI ARABIA.
Required Category Qualification & Experience
Consultant Doctors Cardiology (Adult) Doctorate or its equivalent Degree in Specialization. Experience not less than 3 Years
Pediatric Cardiology
Pediatric Cardiac Surgery
Pediatric Cardiology Critic Care
Cardio Vascular Surgery
Cardiac ICU
Pediatric Cardiac Cath. Lab
Internal Medicine (Cardiology)
Critical Care
Nuclear Medicine
Anesthesia-Cardiac Surgery
Echo Cardiology
Radiology Spiral C.T (Axial Tomography)
Required Category Qualification & Experience
Specialist Doctors Cardiology (Adult) Masters or its equivalent Degree in Specialization. Experience not less than 2 Years
Pediatric Cardiology
Anesthesia-Cardiac Surgery
Pediatric Cardiology Critic Care
Cardio Vascular Surgery
Cardiac Cath. Lab
Anesthesia
Critical Care (Adult)
Required Category Qualification & Experience
Resident Doctors Cardiology (Adult) MBBS + Experience not less than 2 Years
Cardiology (Pediatric)
Cardiac Critic Care
Cardio Vascular Surgery
Anesthesia
Required Category Qualification & Experience
Staff Nurses All Specialities and departments of nursing suitable to work in specialist cardiac centers B.Sc. Nursing + experience not less than two years in a speciality she is applying
Expected date of interview is 7th January, 2011 and proposed interview location is Delhi, Mumbai, Hyderabad, Bangalore and Kashmir. If interested Pls. send Cvs, or Call: 09738204719, if not please forward to your friends who are interested to work Abroad.

துபாயில்

Wanted For Dubai Cv Selction

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 12:01 PM

கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 4 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Any
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: Ns Placement
வெப்சைட்: Nill
காண்டாக்ட் பெர்சன்: Hr Manger

Landline: +91-4368-22 3615

1,assistants(services&maintenance)
2,security guards
3,house keeping attendants
4,electrical assistants
5,marble&glass polishers
Cont 8148504090 nizamkkl@yahoo.com

மலேசியாவில்

12th pass required for malaysia

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 11:55 AM

கன்ட்ரி: Malaysia
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 2 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Hardworker
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: Confendicial
காண்டாக்ட் பெர்சன்: Mrs.Tunu

urgently required machine operator for malaysia. Should be hardworking. Training will be given. Salary 1200 RM per month + 150RM food allowance. Free accomodation. Duty 10 hours.OT available. One year work visa. Very urgent.Flight within a week. Service charge 50000 after calling approval. Mail your resume to visiontech18@gmail.com



துபாயில்

We are looking to hire gulf return drivers for house in UAE

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 11:19 AM

கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 5 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Driving
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: கஂபநீ
நிறுவனத்தின் பெயர்: Guide Manpower
காண்டாக்ட் பெர்சன்: HR

We are looking to hire gulf return drivers for house in UAE. Interested candidates please send your complete details to this email address DUB441957@HOTMAIL.COM

மலேசியாவில்

Cooks, Captains, Waiters, Asst Cooks Wanted For Malaysia

வெளியிட்ட நாள்: Mon, 26 Dec 2011, 11:05 AM

கன்ட்ரி: Malaysia
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 5 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: COOKS WANTED
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: JOBSVICTORY
காண்டாக்ட் பெர்சன்: BHUVANA

Landline: +91-44-4351 0008

A REPUTED STAR HOTEL IN MALAYSIA REQUIRED IN COMPANY PERMIT FOLLOWING PERSONS IMMEDIATELY.

1. COOKS - INDIAN, TANDOORI,CONTI, SOUTH INDIAN - 1000-1800
2. KITCHEN ASST/HELPERS - 800 TO 1200
3. CAPTAINS - 1000 TO 1500
4. WAITERS - 1000 TO 1200
5. DJ PERSONS - NEGOTIABLE.
URGENT VACANCY. SEND UR PROFILE IMMEDIATELY. COMPANY DIRECT VISA.

சிங்கப்பூரில்

air conditioner maintainace supervisor/mechanic/technician

வெளியிட்ட நாள்: Sun, 25 Dec 2011, 05:58 PM

கன்ட்ரி: Singapore
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Hotels & Restaurant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: A.C.mechanic
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
நிறுவனத்தின் பெயர்: Primehrconsultants
காண்டாக்ட் பெர்சன்: Shiva

Mobile: +91 - 98865 84899

Verified

AIR CONDITION MAITAINACE/MECHANIC,/Installation of A.C.
DIPLOMA/ITI/ Or AC maintaninace certificate holder
work place: singapur, salary: $18 USD per day,8 hrs a day work,OT 1.5, accomodation free,no food.AGE beetween 19 to 23 yrs male only.
intersted mail your resumes to : primehrmys@yahoo.com

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
1 Attached files| 84KB

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?பலதார மணம் பெண்களுக்கில்லை:

இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.

ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா? ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு 'தாய் யார்?' என்பது தான் தெரியுமே தவிர, தன் 'தந்தை யார்?' என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் தகப்பன் யார் என்று தெரியாமல் உருவாகக் கூடிய சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் என்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்த அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்! அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பதனாலேயே எல்லாம் அறிந்த ஏக இறைவன் ஆண்களுக்கு மாத்திரம் இதை நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறான். நீக்கிவிட முடியாத வித்தியாசங்கள் இருக்கும் வரை பலதார மணத்தை விமர்சனம் செய்பவர் புத்திசாலியாக இருக்க முடியாது.

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிகமிக முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு.

பல மனைவியரைக் கட்டியவன் நினைத்த போது விரும்பிய மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும்; ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது என்பதைச் சிந்தித்தால் ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணரலாம்.

திருமணத்துக்கு தயார் நிலையில் உள்ள ஆண்களும், பெண்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கும் போது அனைத்துப் பெண்களுக்கும் மண வாழ்வு கிடைத்து விடுவதால் இரண்டாவதாக வாழ்க்கைப்பட பெண்கள் முன்வர மாட்டார்கள். பல தாரமணம் செய்ய ஒருவர் விரும்பினாலும் அது சாத்தியமாகாது. அப்போது எந்தச் சட்டமும் போடாமலேயே பலதார மணம் தானாக நின்று விடும். முதல் தாரத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது எந்தப் பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட விரும்புவாள்?

அந்த நிலை ஏற்படும் வரை எந்தச் சட்டத்தினாலும் இதைத் தடுக்க முடியாது.இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்போரின் அடுத்த குற்றச்சாட்டு தலாக்' குறித்ததாகும். அது பற்றியும் நாம் ஆராய்வோம்.
தலாக்
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம்.

ஆணும், பெண்ணும் இல்லற இன்பத்தை அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் திடீரென ஆண்கள் தம் மனைவியை விவாகரத்துச் செய்து விடும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை. இது தான் தலாக் சட்டத்தை விமர்சனம் செய்வதற்குக் காரணம்.

தலாக் கூறுவதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் ஏன் இதை அனுமதிக்க வேண்டும் அனுமதிக்காமலேயே இருக்கலாமே? என்ற கேள்விகள் நியாயமானவையே. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.

தலாக்கை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? அதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்று இரண்டையும் எடை போட்டுப் பார்க்கும் போது, அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகளை விட அதிமோசமான விளைவுகள் அனுமதிக்காவிட்டால் ஏற்பட்டு விடுகின்றன.

அனுமதிப்பதிலும் கேடுகள் உள்ளன; அனுமதி மறுப்பதிலும் கேடுகள் உள்ளன; இரண்டில் எதைச் செய்தாலும் விளைவுகள் மோசமானவை என்ற நிலையில் எது குறைந்த தீங்குடையதோ அதை அனுமதிப்பது தான் அறிவுடைமையாகும். இந்த அறிவுப் பூர்வமான முடிவையே இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படும் குறைந்த அளவிலான கேடுகளைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்வோர் அந்த அதிகாரம் ஆண்களிடம் வழங்கப்படாவிட்டால் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன என்பதைக் கவனிப்பதில்லை. இதை விரிவாகவே நாம் விளக்குவோம்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்காமல் போய் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டிலும், சமுதாயத்திலும் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால் நீதிமன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.

நமது நாட்டிலும், மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய சட்டம் தான் இருக்கிறது. நீதி மன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கணவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்துக்கு அனுமதி வழங்குவார்.

இத்தகைய நிலையில் ஏற்படும் விளைவுகளை நாம் பார்ப்போம்...
Related Posts Plugin for WordPress, Blogger...