வியாழன், டிசம்பர் 08, 2011

70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய பெண்!




சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு பெண் விபரீதமான செய்கையில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கிழக்கு சீனாவில் காணப்படும் 70 உயரமான கோட்டை சுவர் காணப்படுகிறது. இதற்கு நாளாந்தம் பல நூற்றுக்கணக்காண உல்லாசப்பயணிகள் செல்வது வழக்கம். இதற்காக உள்நுழைவு கட்டணமாக £2.50 அறவிடப்படுகிறது. எனவே இதைனை செலுத்த முடியாத ஒரு பெண்ணே அங்கு உள்நுழைவதற்காக 70 அடி உயரமான சுவரில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் ஏறி அசத்தியுள்ளார். நான்ஜிங் என்ற பெண்ணெ இவ்வாறு விபரீத விளையாட்டில் ஈடுபட்டவராவார். இவர் செங்குத்தாக இருக்கும் சுவரில் ஏறுவதை பார்த்து உல்லாசப்பயணிகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி வேடிக்கைபார்க்க தொடங்கியுள்ளார்கள். இவர் சிறுவயதில் இருந்து இவ்வாறு செங்குத்தான இடங்களில் ஏறுபவர் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இவர் சீனாவின் சிலந்திப்பெண் எனவும் அழைக்கப்படுகிறாராம்.
thanks to puthuyavulagam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...