வெள்ளி, ஏப்ரல் 03, 2015

பெர்முடா முக்கோணமும் இஸ்லாமிய சிந்தனையும்..


மதுரையில் வசித்துவரும் இந்த முதியவர் 1953 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வியாபாரத்திற்கு கப்பலில் அடிக்கடி சென்றுவருவாராம். ஒரு தடவை இவரும்,இவருடன் சென்ற பயணிகளும் உள்ள கப்பல் பெர்முடா முக்கோணத்தில் சிக்கிக்கொண்ட போது இருந்தவர்கள் அனைவரும் அலறினோம்,பயந்தோம் அதில் எங்களோடு பயணித்த ஒரு முஸ்லிம் பயம் இல்லாமல் எங்களை பார்த்து சொன்னார் பயப்பிடாதீர்கள் நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான். நிச்சயம் நம்மை காப்பாத்துவான் என்று வானை நோக்கி இறைவா எங்கள் பயணத்தை லேசாக்கு! என்று பிரார்த்தனை செய்தார் நாங்கள் பெர்முடா முக்கோணத்தில் இருந்து மீண்டோம். பின்னர் அந்த முஸ்லிம் சகோதரரை அனைவரும் பாராட்டினோம் அப்போது அவர் சொன்னார் என்னை பாராட்டுவதை விட அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்றார்.நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி அவரிடம் கேட்டோம் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னார் பொறுமையோடு.
பின்னர் ஒரு வசனம் சொன்னார் முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6) இந்த வசனம் எங்களுக்கு இறையச்சம் ஏற்ப்படுத்தியது.
நானும் என்னோடு பயணம் செய்த 10 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றோம்.அல்லாஹ்வின் கிருபையால் நலமுடன் இருக்கிறேன்.எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.வியப்பான சந்திப்பு.
-Editor Alaudeen
Related Posts Plugin for WordPress, Blogger...