திங்கள், அக்டோபர் 29, 2012

கணவன், மனைவி comedy


மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.

கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.

கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!

புதன், அக்டோபர் 24, 2012

உதாரணத்திற்கு அப்பாற்பட்டவனே கடவுள்


இறைவனுக்குரிய இலக்கணம் அவனைப் போல் யாரும் இல்லை எதுவும் இல்லை என்று நம்புவதாகும்.
எதைப் போன்றும் அவனில்லை. அவனைப் போன்று எதுவும் இல்லை என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிற போது, அல்லாஹ்வுக்கு இணைவைக்கிற சித்தாந்தங்களும் பல கடவுளை நம்புகிற போலிச் சிந்தாந்தங்களும் அடிபட்டுவிடுகின்றன.
ஆனால் இதை உணர்ந்து கொள்ளாத சிலர் அல்லாஹ்வை நீதிபதியுடன் ஒப்பிட்டு உதாரணம் கூறுவதைப் பார்க்கலாம்.
ஒருவன் தவறு செய்து விடுகிறான் அல்லது ஒருவன் மீது தவறான குற்றச்சாட்டு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு வழக்குறைக்க நீதிமன்றத்திற்குச் சென்றால், அவனே நேரடியாக நீதிபதியிடம் பேசமுடியாது.

அவன் தரப்புக்காக வாதாடும் வக்கீலைத் தேர்வு செய்து அந்த நீதிபதியிடம் பேசவேண்டும். நீதிபதியிடம் பேசுவதற்கே ஒரு வக்கீல் தேவையென்றால், நீதிபதிக்கெல்லாம் பெரிய நீதிபதியான அல்லாஹ்விடம் பேசுவதற்கு அவ்லியா - மகான் என்று ஒரு வக்கீல் தேவையில்லையா என்று கேட்கின்றனர். இப்படி அல்லாஹ்விற்கு உதாரணம் சொல்வதே முதலில் தவறு. அல்லாஹ்விற்கு இழுக்குச் சேர்ப்பதாகும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை என்று சொன்னபிறகு, நீதிபதியைப் போன்று அல்லாஹ் இருக்கிறான் என்று அல்லாஹ்வுக்கு நீதிபதியை உதாரணமாகக் கொள்வது, அவனுக்கு நிகராக எதுவுமில்லை எவருமில்லை என்கிற لم يكن له كفوا أحد இந்த வசனத்திற்கு மாற்றமானதாகும்.
இந்த வாதமாவது நியாயமானதா? என்றால் கடவுளின் தன்மையைக் குறைத்து மதிப்பிடுகின்ற ஈனச் செயலாகத்தான் இருக்கிறது. நீதிபதிக்கு எல்லாக் காலமும் தெரியாது. மறைவான விஷயமும் தெரியாது. பணத்தை வீசினால் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்புச் சொல்லுகிற பலவீனமானவர் தான் நீதிபதி. மேலும் வக்கீல் எடுத்துவைக்கிற வாதங்களின் அடிப்படையில்தான் அவரால் தீர்ப்புச் சொல்லவே முடியும். குற்றம் செய்தவன் தரப்பு வக்கீல் வாதத்திறமை உள்ளவராக இருந்தால் தப்பித்துவிடுவது சுலபம். அல்லாஹ்வுக்கு வழக்கறிஞர் தேவை என்றால் அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாது. யாராவது சொல்லித்தான் அந்த வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பளிப்பான் என்று ஆகாதா?
எந்த வாதப்பிரதிவாதமும் இல்லாமல் எல்லாம் தெரிகிற அல்லாஹ்வுக்கு எதற்காக வக்கீல்? சிந்திக்க வேண்டாமா? நீ திருடினாயா? இல்லையா? என்று எனக்குத்தான் தெரியுமே! நீ நோன்பு வைத்தாயா? இல்லையா? என்று எனக்குத்தான் தெரியுமே! நீ ஜகாத் கொடுத்தாயா?இல்லையா? என்றும் எனக்குத் தெரியுமே! பிறகு எதற்காக எனக்கு வக்கீல்? என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? நன்றாக சிந்தித்துத்தான் இப்படி சொல்லுகிறீர்களா? இப்படியெல்லாம் அல்லாஹ்வைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
எனவே மனிதனுக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனால் படைத்த இறைவனுக்கு நல்லது கெட்டது தெரியும். சில நேரங்களில் பொய்யாக வழக்கைப் பதிவு செய்துவிடுகிறார்கள். அதுபோன்று அல்லாஹ்வும் தவறுதலாக நம்மீது வழக்குப் போடுவானா? சிந்தியுங்கள். இப்படியெல்லாம் அல்லாஹ்விற்கு உதாரணம் கூறி அல்லாஹ்வின் தன்மைக்கு இழுக்கைச் சேர்க்காதீர்கள்.
அடுத்ததாக, தர்ஹா வழிபாடு செய்கிறவர்கள் அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் நமக்காக சிபாரிசு செய்வார்கள். பரிந்து பேசுவார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கும் வழிகேடான கொள்கையாகும். அல்லாஹ்விடத்தில் எதற்காக சிபாரிசு செய்ய வேண்டும்? என்னைப் பற்றித் தெரியாதவர்களிடம்தான் சிபாரிசு செய்ய வேண்டும். என்னைப் பற்றியும் எல்லாவற்றையும் பற்றியும் தெரிகிற அல்லாஹ்விடம் ஏன் சிபாரிசு செய்ய வேண்டும்?
இதை விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். என் தந்தையிடம் வந்து ஒருவர் இவர்தான் உங்கள் மகன் என்று தெரியப்படுத்தினால் எப்படியிருக்குமோ அதைவிட கேவலமானது, பைத்தியக்காரத்தனமானது தான் அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் நமக்காகப் பரிந்து பேசுவார்கள் என்பது.
என் தந்தை என்னைத் தெரிந்து வைத்திருப்பதைவிட என்னைப் படைத்த அல்லாஹ் என்னை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த அவனிடம் எனக்காக ஏன் சிபாரிசு செய்ய வேண்டும்? இவர் சொல்லித்தான் அல்லாஹ்விற்கு என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லையே.
இந்த அவ்லியா நம்மைப் பற்றி அல்லாஹ்விடம் சொல்லி நமக்கு நன்மையைப் பெற்றுத் தருவார், சுவர்க்கத்தைப் பெற்றுத் தருவார் என்பதற்கெல்லாம் இஸ்லாத்தில் வேலையில்லை. இவை பிறமதக் கோட்பாடுகள். இறைவனுக்கு இணைவைக்கிற செயல்பாடுகள். மக்கத்துக் குறைஷிக் காஃபிர்களின் நம்பிக்கை. எனவே இப்படியெல்லாம் அல்லாஹ்விற்கு இழிவை ஏற்படுத்தக்கூடாது.
அதேபோன்று கடவுளின் பெயரைப் பயன்படுத்தி தவறு செய்கிறவர்கள் அனைவருமே, கடவுளை சூரியன் மாதிரியென்றும், நீதிபதி மாதிரியென்றும், வக்கீல் மாதிரியென்றும்,மின்சாரம் மாதிரியென்றும், ரொட்டி மாதிரி சட்டி மாதிரி என்றெல்லாம் கூறி கடவுளை கடவுளால் படைக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு உதாரணம் காட்டிக்கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கிறார்கள்.
அதனால்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு முத்திரை வைக்கிறான். அந்த முத்திரைதான் அவனுக்கு நிகராக எதுவும் எவனுமில்லை என்பதாகும். எனவே அல்லாஹ்வுக்கு நிகராக எதையாவது யாராவது உதாரணம் காட்டினார்களெனில் அது பொய் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ள வேண்டும். அவைகளைத் தூக்கியெறிந்துவிட வேண்டியதுதான்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 16:74)
(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால்நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச்செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 42:11)
36வது யாசின் அத்தியாயத்தில் இதை விடவும் கடுமையாக எச்சரிக்கிறான்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
(அல்குர்ஆன் 36:78)
எனவே இந்த அத்தியாயத்தை திரும்பத் திரும்ப உருப்போட்டால், ஏகத்துவமே மனிதன் வெற்றி கொள்வதற்கான சரியான சித்தாந்தம் என்பதை உருப்போடுகிற ஒவ்வொரு முறையும் உணரலாம். இந்த அத்தியாயத்தின் ஒவ்வொரு வசனத்தையும் சுருக்கி சுருக்கித்தான் விளக்குகிறோம். இந்த ஒரு சூராவை மட்டுமே ஒரு ரமலான் முழுவதும் பேசலாம். அவ்வளவுக்கு இதில் விஷயம் இருக்கிறது. அதனால்தான் சூரத்துல் ஃபாத்திஹாவின் விளக்கத்திலேயே கடவுளைப் பற்றி முழுவதுமாக அலசிவிட்டோம். அதிலுள்ள முழு விஷயங்களையும் இதில் சொல்லப்பட்ட செய்திகளையும் சேர்த்து விளங்கிக் கொண்டாலேயே ஒரு கடவுளைப் புரிந்துகொள்வதற்கான அத்தனை அம்சங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி புரிந்து கொண்டு இருவுலகிலும் கண்ணியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
பி.ஜைனுல் ஆபிதீன்

சனி, அக்டோபர் 20, 2012

சுவாக்கத்தில் ஆனுக்கு ஹீருல் ஐயூன் அப்ப பென்னுக்கு??


குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் 'ஹூர்' என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.

பதில்:

1. 'ஹூர்' பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.'.



அத்தியாயம் 52 ஸுரத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.


'..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.'.



அத்தியாயம் 55 ஸூரத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.


'..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.'.



அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.


'(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்'.



2. 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அருள்மறை குர்ஆனை மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்பாளர்கள் - குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்துள்ளனர். 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று பொருள் கொண்டால் - அது ஆண்களுக்கு

3. 'ஹூர்' என்ற அரபி வார்த்தையின் பொருள்.

'ஹூர்' என்ற அரபி வார்த்தை 'அஹ்வார்' என்ற அரபிவார்த்தைக்கும் (ஆண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) 'ஹவ்ரா' என்கிற அரபி வார்த்தைக்கும் (பெண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மையான (Plural) வார்த்தை ஆகும். குறிப்பாக சொர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களை உடைய ஆண்பாலரையோ அல்லது பெண் பாலரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவர்.

அருள்மறை குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில் நீங்கள் 'முத்தஹ்ரதுன்' தூய்மையான மற்றும் புனிதமான 'அஸ்வாஜ்' - இணை, அல்லது துணை அல்லது ஜோடியினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகிறது. 'முத்தஹ்ரதுன்' என்கிற அரபி வார்த்தைக்கு தூய்மை மற்றும் புனிதம் என்று பொருள் கொள்ளலாம்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸூரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:


'(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் பொதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)


அதே போன்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:


(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: அங்குஅவர்களுக்குப் பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)


மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹூர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹூர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும்> ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

4. பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள்.

அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

வியாழன், அக்டோபர் 18, 2012

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?


மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல. இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான் எங்கோ குழப்பி விட்டீர்கள். குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். உயர்ந்த குறிக்கோள் தேவைதான். ஆனால் அது நம் நிகழ் காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் போகும் வ
ழியில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள், நீர்நிலைகள், மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படை யாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது. ''எனக்குத் தலைவலி, காய்ச்சல்,என் உடல் நிலை சரியில்லை,'' என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.'நானே சரியில்லை,'என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல் நிலையைப் பாதிக்கும். உடல்நிலை, மனநிலையில் தெரியும் ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை. சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம். மழை கூட மகிழ்ச்சிதான். நனைந்துதான் பாருங்களேன்! ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது. மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும். புல் தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.
பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

சனி, அக்டோபர் 13, 2012

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!




அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

வியாழன், அக்டோபர் 11, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2


அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)
From http://www.valaiyugam.com

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்


‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?
அக்பர்
அனைத்து வகையான ஊடகங்களும், இணையமும் சமகாலத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக தொடுக்கிற போரை விட பலமடங்கு அதிகமான சிலுவைப் போர்,தாத்தாரிய படையேடுப்பு, வாள், பேனாமுனை தாக்குதல்களை இஸ்லாம் சந்தித்து வென்று இன்றும் கலப்படமற்று நிற்கிறது. இதோ வரலாறு

முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். “மகாத்மாவைக் கொண்ட ஓர் அரசன் பிறப்பான்;அவன் பசுவைக் காப்பான்” என்று கதை விட்டனர்.

நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர்.அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீஃபா’என்றும் ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
ஆகவே இறைவனின் புதிய அவதாரம் அக்பர் புதிய மதத்தை தொற்றுவித்து அந்த மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.அக்பர் அவனது பிரதிநிதியாவார்) இப்புது மதத்தை தழுவியவர்கள் தம் ‘பாரம்பரிய மதமும் மூதாதையரிடமிருந்து கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொண்ட மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹி’யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர். முகமன் கூறும் முறையும் மாற்றப் பட்டது.( ‘அஸ்ஸலாமு அலைக்கும்’என்பதற்கு பதில்) ஒருவர் ‘அல்லாஹ்’ என்று கூற மற்றவர் பதிலுக்கு ‘ஜல்லா ஜலாலுஹு’ என்பார்.இச்சொற்கள்,சக்கரவர்த்தியின் ஜலாலுதீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.

சேலர்கள் தம் தலைப்பாகைகளில் அக்பரின் உருவத்தை ஒத்த உருவங்களை அணிமாறு பணிக்கப்பட்டனர்.அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் அரசனை அதிகாலையில் தரிசிப்பதைக் கொண்டு மக்கள் இதனை நிறைவேற்றினர்.அரசனின் திருமுன் வருவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்துவிட்டால் முதலாவதாக அவர் அரசருக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.அவரே தம் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் நிரைவேற்றுவார் போல ஆலிம்களும்,சூஃபிகளும் கூட அரசனுக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.

இஸ்லாத்துக்கு முரணான இச்செயலை அவர்கள், ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காக காலில் விழுதல் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். தீ வழிபாடு பாரசீக ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப் பட்டு, எப்போழுதும் அரசமாளிகையில் தீ எரிந்துக் கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்குகளும் மெழுகுத்திரிகளும் ஏற்றப்படும் போது அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது.
‘மணி அடித்தல்’, ‘மும்மூர்த்திகளை வழிபடல்’ போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவலாகப் பெறப்பட்டன.எனினும் இந்து மதமே அதிக ஆதரவைப் பெற்றது. ஏனெனில் அதுவே நாட்டின் பெரும்பான்மை மக்களது மதம் என்கிற அரசியல் காரணம் இருந்தது.சாம்ராஜ்யத்தை ஆள்வதை உறுதிப்படுத்துவதற்கு இந்து மதத்துக்கு அதிக ஆதரவு அளிப்பது அவசியம் ஆயிற்று.

பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அரசமாளிகையில் ‘ஹவான்’ முறையாக நடைபெற்றது. அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு இடம்பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால்,அதை கேட்டவர்கள் “அதன் புகழ் ஓங்குக” என்பர் மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது.

அதேவேளை அக்பரும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். அஹ்மத்,முஹம்மத் போன்ற பெயர்கள்கூட வழக்கொழிக்கப்பட்டு, இச்சொற்களைக் கொண்ட பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.பாரசீக மொழியில் பெரோஸ்,பைரோஸ் போன்ற பெயர்கள் சூட்டப் பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் இடங்களில் வாழ்த்துச் சொற்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டனர். சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறினர் (இறைவன் மன்னித்தருள்வானாக!).

அரசனின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு,ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து அவற்றை இழித்துரைத்தார். அரசவைக் கவிஞர்கள் இக்கடமைகளைக் கிண்டல் செய்து புனைந்த கவிதைகளுக்கு உயர்ந்த சன்மானங்கள் வழங்கப்பட்டன. நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.
(Akbar holds a religious assembly of different faiths in the Ibadat Khana in Fatehpur Sikri.)
எல்லா மதங்களையும் நுணுகி ஆராய்வதற்காக ஓர் அரசாணை மூலம்நாற்பது பேரைக் கொண்ட ஒரு சபை நியமிக்கப்பட்டது. இவர்கள் ஏனையமதங்களை ஆராயும் பொழுது மிக்க சகிப்புத் தன்மையோடும் கண்ணியமாகவும் நடந்துக் கொள்வர் என்றும், இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் வெளிப்படையாகவே அவமதிப்பர்கள்.இஸ்லாத்தை ஆதரிப்பவர் எதுவும் சொல்ல முற்பட்டால் உடனே அவர் அடக்கப்பட்டு விடுவார்.நடைமுறையில் இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன;அல்லது வெட்கக் கேடான முறையில் திருத்தப் பட்டன.

வட்டி,சூதாட்டம்,மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது.அதிகாலையில் பன்றியின் முகத்தில் விழிப்பது நற்சகுனத்துக்குரிய செயலாகக் கொள்ளும் அளவுக்குப் பன்றி புனிதத்தன்மை பெற்றது.

இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன;அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று யாரேனும் வற்புறுத்தினால்,அவ்வுடலின் கால்களைப் புதைகுழியில்‘கிப்லா’வுக்கு நேராக வைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சூஃபிஸத்தை ‘தீனே இலாஹி’யின்ஆதாரவு மதம் என்று ஆன்மீகத் தலைவர்கள் மற்றொரு நோயையும் மக்களிடையே பரவச் செய்தனர்
அவர்கள் கிரேக்கத்தத்துவங்களையும் கடுத்துறவு கோட்பாடுகளையும்,
வேதாந்தத்தையும் கலந்து புதுமையான,தத்துவரீதியான சூஃபித்துவக் கொள்கை ஒன்றை தோற்றுவித்தனர். அது எவ்வகையிலும் இஸ்லாமிய ஒழுக்க முறைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. இந்த சூஃபித்துவ அமைப்புகளுக்கும் ஷரீஅத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலை உருவாகி சூஃபிகள் ஷரியத்தை பின்பற்ற தேவையில்லை.என்றார்கள்.

இன்னும் விரிவாக “தீனே இலாஹி” என்ற மதத்தின் ஒரு சில அபத்த கொள்கைகளையும்.இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குவான் அப்படி அந்த காலப் அப்குதியில் தோன்றி “தீனே இலாஹி” கொள்கையை எதிர் கொண்டு அழித்து சரியான மார்க்கத்தை நிலைநாட்டிய மார்க்க அறிஞர், மேதை
‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ அவர்களைப் பற்றியும் அடுத்த தொடரில்.

(இறைநாடினால் தொடரும்)

அமெரிக்க வின் உளவுத்துறை comedy


அமெரிக்க வின் உளவுத்துறை அங்க வசிக்கும் முஸ்லிம் குடும்பகளை எவ்வாறு கவனிக்குதுநு பாருங்கள். அதனை பயன் படுத்தி நம் சகோதரர் எவ்வாறு புத்திசாலி தனமாக நடந்து கொண்டார்! என்பதை பாருங்கள்.

புத்திசாலி மகன்

நியூயார்க் நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும் பயிரிட விரும்பினார்.

அவரோ

வயது முதிர்ந்தவர்; தனியாள். பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு மின்மடல் எழுதினார்:

"அன்பு மகன் அஹ்மதுக்கு,

நம் வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.

அன்புடன்
- உன் தந்தை"

மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:

"என் அருமைத் தந்தையே ,
தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் அன்பு மகன்
- அஹ்மது"

அன்று மாலை நான்கு மணியிருக்கும்.

வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின் வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத் தோண்டித் துருவி, தேடு-தேடென்று 'முக்கியப் பொருளை'த் தேடினார்கள். தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில் சலிப்புற்றுச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது:

"அன்புத் தந்தையே,
உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம் சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.

அன்பு மகன்
- அஹ்மது"

வெள்ளி, அக்டோபர் 05, 2012

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?


மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று அறியாது. எந்த ஆத்மாவும் தான் எங்கே மரணிப்பேன் என்று அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன் நுட்பமானவன். லுக்மான்:34

இவ்வசனத்தில் இறைவன் 5விடயங்களைப்பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்கிறான். அதில் கருவரைகளில் உள்ளவை பற்றிய அறிவும் ஒன்று. இந்த வசனம் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு முரண்படுவதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மருத்துவ அறிவியல் இதனை நிரூபிக்கிறது என்பதே உண்மையாகும். அதனை தெரிந்துகொள்ள முன்னர் இந்த வசனம் என்ன சொல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்பது சிசு ஆணா பெண்ணா என்பதை மாத்திரங் குறிக்கவில்லை. விந்திலிருந்து குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? ஒற்றையா? இரட்டையா? என்பவைகளையும் இவ்வசனமும் குறிக்கிறது. அல்குர்ஆனில் சில வசனங்கள் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றன.

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6) آل عمران

‘அவனேகருவரையில் உங்களை அவன்விரும்பியவாறு வடிவமைக்கிறான்” ஆலு இம்ரான்:6

اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَى وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ (8) الرعد : 8

‘ஒவ்வொரு பெண்ணும் தன் கருவில் சுமப்பதையும் கருவரைகள் சுருங்குவதையும் விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்.ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.” ரஃத்:8

இந்த வசனங்களில் இறைவன் கருவரையில் வடிவமைக்கப்படல் எவ்வளவு காலம் கருவரையில் சிசு தங்கும் போன்ற செயற்பாடுகளை தானே நிர்ணயிப்பதாகவும் சொல்வது இவையனைத்தும் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்தை தெளிவுபடுத்துகிறது.

நவீன மருத்துவ அறிவியலோடு இந்த வசனம் முரண்படுவதாய்ச் சொல்வது மருத்துவம் பற்றிய அறியாமை. இரண்டு அறிவியல் வளர்ச்சிகளை எடுத்துக்காட்டியே இதை முன்வைக்கிறார்கள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்

2.நவீன மருத்துவ அறிவியல் பால்த் தேர்வு(sex selection) முறைகள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்.



இது ஒளிக்கோட்பாட்டுக் கண்டுபிடிப்பின் விளைவாக ஏற்பட்ட ஒரு நன்மையெனலாம். ஒளியலைகளை கருவரைக்குள் செலுத்தி கருவின் நிலை பற்றி அறிய இதைப் பயன்படுத்துவார்கள். 1940 களில்தான் அறிமுகமாகின. ஆரம்பத்தில் இரு பரிமாணமாகவே இருந்த இந்தக் கண்டுபிடிப்பு இப்பொழு நாற்பரிமாணம் வரை முன்னேறியுள்ளது. இதனால் கருவின் களங்களுக்கு எந்தப் பாதிப்புங்கிடையாது. சிசுவின் நிலைகள் நோய்கள் வடிவமைப்பு பால் போன்றவற்றை இதன் மூலம் கண்டறியப்படுகின்றன.


2.நவீன மருத்துவ அறிவியல் பால்த்தேர்வு(sex selection) முறைகள்.

ஆண் குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு ஆண்குழந்தையையும் பெண்குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு பெண்குழந்தையையும் ஏற்படுத்துவதற்காக நவீன விஞ்ஞான முறைகள். இது இன்று பல அமைப்பில் ஒழுங்கில் செய்யப்படுகின்றன.

IUI.

Flow Cytometry / Sperm Separation.

PGD

இந்த அனைத்து முறைகளும் பெண்ணது சினை முட்டை ஆணின் இந்திரியத் துளியிலும் மேற் கொள்ளப்படும் சில விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகள். அவ்வாறு க்ரோமோஸோன்கள் சுமந்துவரும் டீஎன்ஏ வை பகுத்தும் இன்னும் சினைமுட்டைகளை அதிகரிக்கச் செய்வதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவைகள் கருவரைக்குள் செலுத்தப்படும்.

இந்த இரண்டு வளர்ச்சிகளையும்தான் ஆணா பெண்ணா என்று அறிவதென்ன உருவாக்கவும் செய்கிறார்களே என இறைமறைக்குச் சவாலாக வாதாடுகிறார்கள்.

இவைகள் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்திற்கு முரண்படுகிறதா?



கருவரையில் கருவிற்கு இரு நிலை உண்டு. 12 வாரங்களுக்கு முன்னுள்ள நிலை 12 வாரங்களுக்கு பின்னுள்ள நிலை. அதாவது கிட்டத்தட்ட 4 மாதங்ளை எட்டியுள்ள நிலை. 4 மாதங்களைத் எட்டும்போது இந்தக் காலத்து விஞ்ஞானிகளுக்கு மாத்திரமல்ல அறிவியலின் வாசமே அடிக்காத அந்தக் காலத்து மக்களும் கருவிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று அறியலாம் முறைகள்தான் வேறுபடுமே தவிர இதில் நவீன விஞ்ஞானத்திற்கு எந்த சிறப்பம்சமும் இல்லை. அந்தக் காலத்து அறியாமைக்கால மக்களாலும் அறிய முடிந்த ஒன்றை இறைவன் தான் மட்டும்தான் அறிவேன் என்று சொல்லியிருக்கமாட்டான்.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இறை நிராகரிப்பாளன் கூட இந்த வசனத்தை அப்படிப் புரியவில்லை. அவ்வாறு புரிந்திருந்தால் தங்களது ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் காட்ட கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவரையிலுள்ள சிசுவை வெளியே எடுத்துப் பார்த்து ஆணா பெண்ணா என்று பதில் கூறியிருப்பார்கள். அவ்வாறு செய்திருந்தால் அந்த மக்களே அவனை நகைத்திருப்பார்கள். காரணம் இந்த வசனத்தை அவ்வாறு யாரும் விளங்கவில்லை. கர்ப்பத்தில் குழந்தை ஆணாகவே பெண்ணாகவே தோற்றம் பெற்றபின்னால் கருவரையை கிழித்துப் பார்த்துச் சொல்வதும் ஸ்கேன் மூலம் சொல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

1ம் 2ம் 3ம் 4ம் 5ம்……வாரங்களில் அன்றைய காலத்து மக்களாலோ இன்றைய விஞ்ஞானத்தாலோ என்ன வழிமுறையைக் கையாண்டாலும் சொல்ல முடியாது. இந்த பதில் ஸ்கேனிங்கிற்குப் பொருந்துகிறது 2வது முறையான ‘பால் தேர்வு” முறைக்குப் பொருந்தவில்லையே என்ற கேள்வி இப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். இந்த நவீன வழிமுறைக்குக் கூட சில பழைய முன்மாதிரிகள் உள்ளன. சில சமூகங்கள் வலது விதை மூலம் ஆணும் இடது விதை மூலம் பெண்ணும் கிடைப்பதாக நம்பினர். இதனால் பெண் குழந்தை கிடைக்காமல் செய்வதற்காக சிலர் இடது விதையை நீக்கம் செய்தனர். இன்னுஞ் சிலர் அதைக் கட்டினர். இது போன்ற முயற்சிகளின் அறிவியல் வடிமே இந்தப் ‘பால் தேர்வு முறை” இந்த முறைகளின் ஆண் குழந்தைகளுக்கான சாத்தியப்பாடுகள் பின்வருமாறு:

IUI. : 55%

Flow Cytometry / Sperm Separation. : 80%

PGD: 99%

ஒரு கருவரையில் ஆண் குழந்தையை இந்த முறைகள் மூலம் உருவாக்க விரும்பினால் உருவாகுவாவதற்கான சாத்தியப்பாடுகளே இவைகள். இங்கேயும் விஞ்ஞானத்தால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட கருவாயினும் 12ம் 13ம் வாரங்களிலேதான் ஆணா பெண்ணா என மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்.

அப்படியாயின் இங்கேயும் ஸ்கேனிங்கிற்கு நாம் கேட்ட கேள்வியே கேள்வியாகும். எனவே ஒரு காலமும் இந்திரியத்துளியாக இருக்கும்போது களப்புத்துளியாக மாறும்போது தொங்கும் ஒரு அட்டைப் பூச்சி வடிவம் எடுக்கும் போது சதைத் துண்டாக இருக்கும் போது இது ஆணா பெண்ணா என அறியமுடியாது என்பது மட்டமல்ல குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? போன்ற எல்லாவற்iயும் அகிலத்தைப் படைத்து நிருவகிக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே அறிவான்.
Related Posts Plugin for WordPress, Blogger...