சனி, மார்ச் 31, 2012

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.

ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.


மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!



"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.


அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.


அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.


"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."


"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.


சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.


உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.


அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.


ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.


அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.


முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?


வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.


கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.


சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?


ஆக்கம்: அபூ ஸாலிஹா


Read more about கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1) | ஆய்வுக் கட்டுரைகள் Courtesy: www.satyamargam.com

வேலைவாய்ப்பு செய்திகள் New job opportunities31/3/2/2012

Wanted content writer at chennai

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 01:13 PM

Role: Other Software / Hardware / EDP
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Content Writing
நிறுவனத்தின் பெயர்: Sana Consultancy
காண்டாக்ட் பெர்சன்: Vinodh.p

Mobile: +91 - 96295 59591

Verified

Wanted content writer at chennai
Qualification: Any degree
Experience: min 6 months
Salary: Negotiable
Looking for right candidates immediately
Location – Chennai
For More Details Contact:
P. Vinodh
9629559591,9791435671
sanaplacement@gmail.com http://www.sanaconsultants.com

Hot Openings for Customercare Executives in Chennai

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 04:02 PM

Role: Customer Service Executive (Voice)
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Excellent Communication & Pleasant Attitude Skills
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Glister Technologies Solutions Pvt Ltd
வெப்சைட்: www.glistertech.com
காண்டாக்ட் பெர்சன்: Vardhini-Human Resources

Landline: +91-44-2264 0263

Glister Technologies Solutions Requires Fresher Female Candidates 10+ for Tele-callers, Customer Care executives for new branch. Only female candidates can apply for this job. Call@ 9677211556/57. www.glistertech.com
Preferred Candidates:-
§ Excellent communication & pleasant attitude skills
§ Required candidates basically from Chennai Area
§ Fresher’s from any stream line
§ Only Female candidates can apply for this job
§ Opportunity to play multi role
Benefits:-
Flexible-Timings
Immediate Incremental process
Exciting career opportunity
Great place to work with long term career opportunity!
Limited vacancies
Direct Recruitment process
Attractive incentives
Note: Vacancies available in only at our Pallavaram branch. Nearby candidates are most welcome.
For Further details, Contact: Vardhini-HR @ 9677211556 / 57

Hot Openings for Telecallers in Chennai

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 04:00 PM

Role: Customer Service Executive (Voice)
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Excellent Communication & Pleasant Attitude Skills
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Glister Technologies Solutions Pvt Ltd
வெப்சைட்: www.glistertech.com
காண்டாக்ட் பெர்சன்: Vardhini-Human Resources

Landline: +91-44-2264 0263

Glister Technologies Solutions Requires Fresher Female Candidates 10+ for Tele-callers, Customer Care executives for new branch. Only female candidates can apply for this job. Call@ 9677211556/57. www.glistertech.com
Preferred Candidates:-
§ Excellent communication & pleasant attitude skills
§ Required candidates basically from Chennai Area
§ Fresher’s from any stream line
§ Only Female candidates can apply for this job
§ Opportunity to play multi role
Benefits:-
Flexible-Timings
Immediate Incremental process
Exciting career opportunity
Great place to work with long term career opportunity!
Limited vacancies
Direct Recruitment process
Attractive incentives
Note: Vacancies available in only at our Pallavaram branch. Nearby candidates are most welcome.
For Further details, Contact: Vardhini-HR @ 9677211556 / 57

Opening For Graduate Engineer Trainee for ERICSSON

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 02:18 AM

Role: Other Production / Engineering / R&D
எக்ஸ்பீரியன்ஸ்: 0 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.E/B.Tech
PG Qualification: M.Tech
கீ ஸ்கில்ஸ்: MS Word
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
நிறுவனத்தின் பெயர்: Global HR Consultancy
வெப்சைட்: www.careerage.com
காண்டாக்ட் பெர்சன்: Virendra Patil

Mobile: +91 - 88791 59936

Verified

Opening For Software Developer for ERICSSON INDIA (P) LTD
WORLD’s No. 1 COMPANY URGENTLY REQUIRED
Graduate Engineer Trainee
Job Code: GHRS-BE EIPL
Job Location: Noida/ Gudgaon / Anywhere within India
Job Description: BE COMPUTER SCIENCE / INFORMATION TECHNOLOGY
Job Nature: SOFTWARE DEVELOPMENT
BE -- ELECTRONICS, EEE, ECE, CSE & IT
Job Nature:
Wireless Communication: Zigbee RF4CE, Mi Wi, Wi Fi, ISM Band RF and Bluetooth
Wired Communication: RS232, RS485, CAN, ModBUS, LIN, Ethernet, SPI and I2C
Mobile Communication: GSM, GPRS, CDMA.
Satellite Communication: GPS
Digital signal processing (DSP)
EPLC / PLC / DCS / SCADA / HMI
RFID / Smart Cards / Magnetic Cards
GPS (Global Positioning System)
Zigbee
GSM (Global System for Mobile Communication)
Embedded Networking
PLCs
Virtual Instrumentation (VI) / LabView
Wi Fi / WLAN
Blue Tooth & Drives
Job Code: GHRS-BE EIPL
Functional Area: Maintenance
Functional Role: Trainee – GET
Qualification: B.E./B.Tech(Electronics & Communication), B.E./B.Tech(Electronics & Computer Engineering), B.E./B.Tech(Electronics & Telecommunication), B.E./B.Tech(Computer Science & IT), B.E./B.Tech(Electrical & Electronics), B.E./B.Tech(Electronics)
Mail: globalhrconsultancy2020@gmail.com
Compensation Details:
Basic Salary plus
Other Benefits: As per company
No.'s of Post: 09No.'s
Percentage criteria: 60%.
Experience: Fresher
Salary: Rs.28,334/- Per Month
Call to: 8879159935, 8879159936
Functional Area: Engineering
Functional Role: Maintenance / Software Development
Trainee – GET.
Company: ERICSSON INDIA PRIVATE LIMITED (www.ericsson.com)
Experience: Fresher
Preferred Resume Format: MS-Word
Compensation Details
Salary: 3 lakhs & 50 thousands (Indian Rupees)
Rs.28,334/- Per Month
As per company

MARKETING EXECUTIVE JOB for TALENTED FRESHERS

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 03:18 PM

Role: Direct Marketing - Executive
எக்ஸ்பீரியன்ஸ்: 0 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Graduate With Fluency In English
வீனே: INMAD SOLUTIONS PVT. LTD. J R TOWER 11, Bharathi
street, West Mambalam, Chennai-600033 Near
Indian Bank stop, Arya gowda road,
w.mambalam Near R-3 Ashok nagar police station,
ashok nagar.
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
நிறுவனத்தின் பெயர்: INMAD SOLUTIONS PVT. LTD.
வெப்சைட்: www.inmads.com
காண்டாக்ட் பெர்சன்: MD

Mobile: +91 - 91760 99574

Verified

Landline: +91-44-2489 0660

Should have capacity to convince client and mobilise the clients. High attractive sales incentives at par with the talent of the candidate apart from the basic salary.

Part Time Full Time Marketing Salary 12,000 t0 30,000

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 10:34 AM

Role: Other Marketing
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 3 Years
ஜாப் லொகேஷன்: சென்னை / வேலூர் / திருவள்ளூர்
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Degree Pass Or Fail
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Tranz India Lmt An ISO, TUV Certified Company
காண்டாக்ட் பெர்சன்: S. RAJESH KUMAR

Mobile: +91 - 98435 21105

Verified

Every Degree Pass Or Fail Person Jobs Available, Salary Can Differ From ur Talent

Fresher Wanted Diplomo CS, IT, BBA, Bcom, Bsc CS, IT, BCA

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 09:20 AM

Role: Other Marketing
எக்ஸ்பீரியன்ஸ்: 0 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: B.B.A / B.Com / B.Sc
PG Qualification: M.Com
கீ ஸ்கில்ஸ்: Good Communication Skills
வீனே: Chennai
காலியிடங்களின் எண்ணிக்கை: 10+
நிறுவனத்தின் பெயர்: Terra Beans Technology
வெப்சைட்: www.adityams.com
காண்டாக்ட் பெர்சன்: Mr.Rajasekaran

Description

Fresher Wanted Diplomo CS, IT, BBA, Bcom, Bsc CS, IT, BCA for Software Markerting and sales
Established in 2006, Terra beans is a growing company in India. We are providing software global consulting and IT services with budget. Our Company operates as product engineering and enterprise solutions company in India and internationally. Services include product development, testing and quality assurance, sustenance, embedded services, enterprise applications, customer relationship management applications, and enterprise information management applications, Web content management system, Web Services.
With our professional workforce and well-defined quality processes, rest assured we are committed to deliver on-time and quality output. Now, we deliver quality custom application, software development and web solutions with our creative and technical expertise.
Send your resumes to hr@adityams.com
We will send interview schedule details to you if resume shortlised.
**** DONT CALL US
**** ONLY FORWARD RESUME to hr@adityams.com

Postion : Marketing and Sales
Location : Chennai
**** Dont apply if you are from other states.
Fresher Wanted Diplomo CS, IT, BBA, Bcom, Bsc CS, IT, BCA for Software Markerting and sales

Accountant- Quickbooks or PeachTree

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 12:54 PM

Role: Accounts Executive / Accountant
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 10+ Years
ஜாப் லொகேஷன்: தில்லி, குர்க்கான் & நொய்டா / சென்னை / ஹைதராபாத் & செக்கந்தராபாத்
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Quickbooks
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: JM Finserve Pvt Ltd
வெப்சைட்: www.jmfinserve.com
காண்டாக்ட் பெர்சன்: Mr. Kamal

View similar ads0567729057

Description

Required accountants who are familiar with Quickbooks or Peachtree software. Compensation varies depending on the experience of the candidates. Please fill the form at www.jmfinserve.com/careers to initiate the recruitment process.

Wanted Financial manager at chennai

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 12:31 PM

Role: Finance Manager
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 1 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: MBA/PGDM
கீ ஸ்கில்ஸ்: Finance Management
நிறுவனத்தின் பெயர்: Sana Consultancy
காண்டாக்ட் பெர்சன்: Vinodh.p

Mobile: +91 - 96295 59591

Verified

Wanted Financial manager at chennai
Qualification: MBA(FINANCE)
Experience: Fresher/Experience
Salary: As per company norms
Looking for right candidates immediately
Location – Chennai
For More Details Contact:
P. Vinodh
9629559591, 9791435671
sanaplacement@gmail.com, http://www.sanaconsultants.com

Require Branch Manager for Leading Insurance Company

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 12:30 PM

Role: Branch Manager
எக்ஸ்பீரியன்ஸ்: 5 To 9 Years
ஜாப் லொகேஷன்: சென்னை / கோயம்புத்தூர் / சேலம்
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Branch Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
நிறுவனத்தின் பெயர்: Poonik Technology
வெப்சைட்: www.poonik.org
காண்டாக்ட் பெர்சன்: Karthik

Mobile: +91 - 97894 09009

Verified

Landline: +91-422-437 1770

Greetings from Poonik Technology !
We have immediate requirment for Branch Manager for Leading Life Insuance Company in Coimbatore.
Salary : 8 Lakh pa + Perks
Location : Coimbatore
Description :
* Male / Female
* Should possess minimum 5 - 8 years experience in sales
* Prior experience in Insurance/Banking/Finance domains will be added advantage
* Should have good managerial experience
* Should have prior exprience working as Branch Manager
If interested contact ,
Karthik Prasad - HR
Poonik Technology
97894 09009 / 0422 4371770
poonikjob@gmail.com

All the Best !

Immediate requirement for Branch Manager for Insurance

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 12:29 PM

Role: Branch Manager
எக்ஸ்பீரியன்ஸ்: 5 To 9 Years
ஜாப் லொகேஷன்: சென்னை / கோயம்புத்தூர் / ஈரோடு
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Branch Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
நிறுவனத்தின் பெயர்: Poonik Technology
வெப்சைட்: www.poonik.org
காண்டாக்ட் பெர்சன்: Karthik

Mobile: +91 - 97894 09009

Verified

Landline: +91-422-437 1770

Greetings from Poonik Technology !
We have immediate requirment for Branch Manager for Leading Life Insuance Company in Coimbatore.
Salary : 8 Lakh pa + Perks
Location : Coimbatore
Description :
* Male / Female
* Should possess minimum 5 - 8 years experience in sales
* Prior experience in Insurance/Banking/Finance domains will be added advantage
* Should have good managerial experience
* Should have prior exprience working as Branch Manager
If interested contact ,
Karthik Prasad - HR
Poonik Technology
97894 09009 / 0422 4371770
poonikjob@gmail.com

All the Best !

Receptionist/ Medical Secretary

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 11:19 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 3 Years
ஜாப் லொகேஷன்: சென்னை
Basic/UG qualification: Graduation Not Required
PG Qualification: Post Graduation Not Required
கீ ஸ்கில்ஸ்: Communication
வாக்கின் டேட்: Thu 29 Mar, 2012 To Fri 13 Apr, 2012
வீனே: Satish Eye Hospital New #57, Old #15, Ormes
Road, Kilpauk, Chennai – 600010. Landmark:
Near Paramount Hotel, Opposite to C.S.I. Bain
School
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
நிறுவனத்தின் பெயர்: Satish Eye Hospital
காண்டாக்ட் பெர்சன்: Nandhitha

Mobile: +91 - 96000 50123

Verified

Landline: +91-44-2642 6464

Satish Eye Hospital, an eye hospital based in Chennai, has 2 vacancies for receptionists. The job would be interesting; a combination of great learning opportunity and growth. Interested candidates (preferably female) are requested to contact via mail/ phone as soon as possible.
E-mail: satisheyecare@gmail.com

Phone: +91 44-26424935, +91 44-26426464, +91-9600050123

Subject: Freelance SAP FSCM and SAP Treasury Trainers needed

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 10:38 AM

Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 2 To 3 Years
ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / மும்பை
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: Freelance SAP FSCM And SAP Treasury Trainers
அனுப்பியவர்: கஂபநீ
நிறுவனத்தின் பெயர்: Dharani Academy
காண்டாக்ட் பெர்சன்: Ram

Mobile: +91 - 93924 99922

Verified

remotely from his/her place. The trainer should have good sap and domain knowledge. Experience in implementation project would be preferred.
Excellent communication skills is mandatory
The trainer should be passionate in teaching and able to teach the subject well and should have 4 to 5 years of teaching experience.
If interested to teach online, please do call us at +91-9346626363 or email to kausar.dharaniacademy@gmail.com

Regards
Kausar
Executive

Dharani Academy
Business Development Engineer Dubai

வெளியிட்ட நாள்: Wed, 28 Mar 2012, 04:17 PM

கன்ட்ரி: UAE
ஜாப் கேட்டகரி: அதர்
Role: Others
எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 6 Years
Basic/UG qualification: Any Graduate
PG Qualification: Any Post Graduation
கீ ஸ்கில்ஸ்: 1
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS
வெப்சைட்: www.pegasusstaffing.com
காண்டாக்ட் பெர்சன்: VIJAY SIMHA

Landline: +91-44-4204 6607

Client is a service provider in turnkey projects for the Petroleum, Power and industrial sectors
Electro-Mechanical and Mechanical works; related Oil & Gas activities include Central Processing Facilities, pipelines, flow lines, wellhead tie-in’s and tank erections, annual contracts for maintenance of electric generators for oil companies and industrial clients, installation of industrial infrastructures of Yemen
They require
BUSINESS DEVELOPMENT ENGINEER - DUBAI
Desired Expertise: Marketing Services
Experience: 3-5 years work experience in marketing oil and gas services and equipment in Abu Dhabi market.
Minimum Education: Bachelors Degree preferably graduate in Mechnical / Chemical /Process Engineering.
Location: Dubai/Abu Dhabi
Job Description:
Experienced in acquisition and management of Agencies and Representations.
Dynamic, pro-active and able to work independently.
Familiar with pre qualification and tendering procedures of Petroleum Companies and Government Departments in Abu Dhabi.
Computer literate
Auto Responders from Job portals would be deleted
Our Contact details:
Pegasus Staffing Solutions
93 Arcot Road
Lakshmi Towers
IV Floor
Kodambakkam
Chennai 600024
Phones: 42046607/08
www.pegasusstaffing.com
Email: sales@pegasusstaffing.com,/engg@pegasusstaffing.com

வியாழன், மார்ச் 29, 2012

ராஜபாட்டை

ஸாப், காஃபி!’
அப்பாஸ் பாய் காஃபிக்கோப்பையை மேஜையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்.

கோப்பையில் ஆவி பறக்கக் காத்திருந்த காஃபி என்னைப் பார்த்துச் சிரித்தது.

பதினாறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் காஃபி அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கு முன்பு வளைகுடா நாடுகளில் மட்டும் காஃபி பயிரிடப்பட்டு வந்தது. பாபா புடன் என்கிற இறைநேசர் தான் ஏழு காஃபி கொட்டைகளைக் கொண்டு வந்து முதன்முதலாக மைசூரில் பயிரிட்டார்.

கஃபே லேட், கஃபே மோச்சா, காபுஸினோ, ஐரிஷ் காஃபி, மச்சியாடோ, சோலார் எக்ளிப்ஸ், அஸ்டெக், பிளாக் காஃபி, எக்ஸ்பிரஸ்ஸோ, எத்தியோப்பியன்

-சென்னையில் காஃபி டே கடையில் கிடைக்கின்ற சூடான காஃபிகளின் பெயர்கள்தாம் இவை.

சில்லோ காஃபி, காபி நிர்வாணா, மோச்சா சில்லோ, கஃபே ஃபிராப்பே, டெவில்ஸ் ஓன், ஆல்டே ரிஃப்ரஃப்ரஷ்,டிராபிகல் ஐஸ்பெர் - சில்லென்று உறைக்கின்ற ஆறிப்போன காஃபிகளின் பெயர்கள் இவை.

எதற்காக இந்தக் காஃபி புராணம் என்கிறீர்களா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அலுவலுக்கிடையில் சற்றே இளைப்பாறும் போது அருந்தப்படுகின்ற பானம்தான் காஃபி. ஐந்து நிமிட உற்சாகப் பானத்திற்குத்தான் எத்தனை எத்தனை உழைப்புகள், முயற்சிகள்...! அதன் சுவையையும் மணத்தையும் திடத்தையும் கூட்டுவதற்காகத்தான் எத்தனை எத்தனை திட்டங்கள்..! சர்ச்சைகள்..!

காஃபி உற்பத்தியில் நம் நாடு ஆறாவது இடத்தை வகிக்கின்றது.

காஃபி மட்டுமல்ல, இன்று உணவு, உடை, வீடு, வாகனம், தொழில், தகவல்தொடர்பு, போக்குவரத்து, வணிகம் என அனைத்திலும் புரட்சிகரமான மாற்றங்களும் வளர்ச்சிகளும் முகிழ்த்துள்ளன.

வகைவகையான உணவுகள், உடைகள், வீட்டுக்கட்டுமானங்கள், வாகனங்கள், தொழில்கள் என அனைத்திலும் வகைகளும் அதிகமாகி விட்டன; வாய்ப்புகளும் பெருகிவிட்டன.

அவற்றையெல்லாம் தொகுப்பதற்கும் விவரிப்பதற்கும் இங்கு நேரம் இல்லை.

அதனால்தான் அந்தச் சாதனைகளிலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டாக முதலில் காஃபி குறித்து மட்டும் சற்றே விரிவாகச் சுட்டிக்காட்டிவிட்டேன்.


இங்கு ஒரு கேள்வி எழுகின்றது.

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம், வாகனம், தொழில், காஃபி இவை மட்டும் போதுமா? மனிதனின் அடிப்படைத் தேவைகள் இவை மட்டும்தானா?

மனிதனின் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் அவன் எத்தகையப் படைப்பு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு நீங்கள் அல்ஃபாரபியைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

அல்ஃபாரபி. யார் தெரியுமா?

இஸ்லாமிய அரலாற்றில் நீங்காப் புகழ்பெற்ற விஞ்ஞானிதான் அல்ஃபாரபி. கணிதம், அறிவியல், மருத்துவம், லாஜிக், சமூகவியல், உளவியல் எனப் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்.

இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற படைப்புகள் அனைத்தையும் நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார், அல்ஃபாரபி.

அவர் தம்முடைய ‘மராதிப் அல்மவ்ஜுதாத் ஃபில் ஸியாஸத் அல் மதீனா’ என்கிற நூலில் இதனைப் பதிவு செய்திருக்கின்றார்.
அவற்றின் விவரம் வருமாறு:

1. முதலாவதாக ‘அறிவும் ஞானமும்’ வழங்கப் பெற்றவை; ஆனால் ஆசை, கோபம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகாதவை. இறைவனின் புகழ் பாடுவதையும் அவனைத் துதிப்பதையும் அவனுடைய பெருமையைப் பறைசாற்றுவதையும் மட்டுமே அறிந்த படைப்புகள் இவை. குழப்பம் செய்கின்ற, கலகம் விளைவிக்கின்ற, இரத்தம் சிந்துகின்ற ஆற்றலோ, திறனோ, வல்லமையோ இம்மியளவு கூட இல்லாதவை.

இந்த முதல் வகை படைப்புகளில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்கள் வானவர்களே!

2. இரண்டாஅது வகை படைப்புகளுக்கு ‘அறிவும் ஞானமும்’ வழங்கப்பட்டிருக்கவில்லை. அதே சமயம் இந்தப் படைப்புகளுக்கு ஆசையும் கோபமும் அதிக அளவில் அருளப்பட்டிருக்கின்றன.

நன்மை, தீமை பற்றிய அறிவோ, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிகின்ற ஆற்றலோ இவற்றுக்கு அறவே இல்லை. ஆனால் வேட்கையும் வெறியும் இவற்றின் அடையாளங்கள் எனலாம். இந்த வகை படைப்புகளாக மிருகங்களைச் சொல்லலாம்.

3. மூன்றாவது வகை படைப்புகளுக்கோ ‘அறிவு, ஞானம்’ போன்றவையும் அருளப்பட்டிருக்கவில்லை. ‘ஆசை, வேட்கை, கோபம்’ போன்றவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எது நன்மை, எது தீமை எனச் சோதித்துப்பார்க்கின்ற கட்டாயமோ, ஆற்றலோ இவற்றுக்கு இல்லை. மோதல், போட்டி, கலகம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட படைப்புகள் இவை.

இந்த வகை படைப்புகளாகத் தணிஅரங்களைச் சொல்லலாம். உயிரற்ற பொருட்களையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

4. நான்காவது படைப்போ மேற்படி மூன்று வகை படைப்புகளை விடவும் மாறுபட்டது. தனிச்சிறப்பு மிக்கது. அதுதான் மனிதப் படைப்பு.

மனிதனுக்கு ‘அறிவும் ஞானமும்’ குறைவில்லாத வகையில் கொட்டித் தரப்பட்டிருக்கின்றன. மேன்மைமிக்க, தூய செயல்களில் ஈடுபடுகின்ற ஆற்றலும் தகுதியும் அவனுக்குப் போதுமான அளவுக்குத் தரப்பட்டுள்ளன. அதே வேளையில் இழிவான, கேவலமான செயல்களில் சறுக்கி விழுவதற்கான வாய்ப்பும் அவனுக்கு முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஆக, மனிதப் படைப்பின் உண்மைநிலையை அல்ஃபாரபி மிக அழகாகத் தெளிவுபடுத்திவிட்டார். என்றாலும் மனிதனின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு இந்தத் தெளிவு மட்டும் போதாதே என்கிறீர்களா? மேலே படியுங்கள்.

மனிதப் படைப்பின் சிறப்பையும் தனித்தன்மையையும் உணர்ந்துகொள்வதற்கும் அவனுடைய தேவைகளை அறிந்துகொள்வதற்கும் எத்தகைய மூலப்பொருட்களைக்கொண்டு அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதைக்கருத்தில் கொள்வது அவசியமாகும்.

படைப்பின் இரகசியம்:

மனிதன் முதன்முதலாகப் படைக்கப்பட்ட போது இறைவன் வானவர்களிடம் கூறினான்:

‘நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப் போகின்றேன்; நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால் அவருக்கு முன்னால் ஸுஜூது செய்யுங்கள்’ (38 : 71, 72)

இதிலிருந்து முற்றிலும் நேர் முரணாண பண்புகளைக் கொண்ட இரண்டு மூலப்பொருட்களைக் கொண்டு மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்துகொள்ளலாம்.

முதலாவதாக மண்: பொதுவாக மிகவும் கேவலமான பொருளாகப் பார்க்கப்படுவதுதான் மண். இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற அனைத்தையும் விட மிக அதிகமாக மிதிக்கப்படுகின்ற பொருளும் மண்தான். இந்தப் பூமியின் ஒரு பகுதிதான் மண். இதனால் மனிதனுக்குள் மண்ணின் விழைவுகள் பதியப்பட்டிருக்கின்றன. மண் அவனை தன் பக்கம் (வீழ்ச்சியின் பக்கம்) கவர்ந்து இழுக்கின்றது.

இரண்டாவதாக உயிர் : உயிர், ஆன்மா என்று சொன்னாலே உயர்வின் பக்கம் நம்முடைய கவனம் போகின்றது. தூய்மையான, மேன்மைமிக்க பொருள் பற்றிய சித்திரம் நம்முடைய மனக்கண்ணில் மின்னுகின்றது.

ஆன்மா எப்படி இருக்கும் என யோசிக்கின்ற போது வானத்தில் சஞ்சரிக்கின்ற பொருளாகத்தான் அது தோன்று கின்றது. இதனால் மனிதன் வானளாவிய வெற்றிகளை ஈட்டுவதில் பேரார்வம் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆக மனிதன் இரண்டு வகையான மூலப்பொருள்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் அவன் இரண்டு வகையான தேவைகள் கொண்டவனாக இருக்கின்றான்.

முதலாவதாக உலகியல் தேவைகள் (மூலப்பொருளாக மண் இருப்பதால்).

இரண்ட õவதாக ஆன்மிக தேவைகள். (மூலப்பொருளாக ஆன்மா இருப்பதால்)

இவ்விரண்டும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவன் நிறைவடைய முடியும். முழுமையடைய இயலும். இல்லாவிட்டால் அவன் அரைகுறை மனிதன்தான்.

உலகியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற ஆற்றலும் அறிவும் திறனும் வல்லமையும் மனிதனுக்கு நிறையவே தரப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டு மனிதன் சாதனைக்கு மேல் சாதனையாக சாதித்துக் கொண்டே வந்துள்ளான்.

‘பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்’ (62 : 10) என்றே இறைவன் கட்டளையிடுகின்றான்.

மனிதனும் இந்தப் பூமியிலிருந்து அருள்வளங்களைத் தேடியவாறு இருக்கின்றான்.

இந்தத் துறையில் அவன் ஈட்டியுள்ள சாதனைகளை இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

ஆனால் மனிதனின் ஆன்மிகத் தேவைகள் என்னென்ன? ஆன்மாவுக்கு நிம்மதி அளிப்பவை எவை? வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொண்டால் அது ஆன்மாவுக்கு இதம் தருவதாக அமையும் போன்ற கேள்விகளுக்கு மனிதன் விடை கண்டாக வேண்டும்.

ஏன் வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதும் அவசியம்.

God is dead என்று பிதற்றி தனி மனிதர்களின் சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து இருப்பியல் வாதம் (Existentilaism) பேசிய ஃபிரெட்ரிக் நீட்ஷே குழப்பத்திற்கும் மன நிறைவின்மைக்குமே வித்திட்டார்.

சிக்மண்டு ஃபிராடு, மாச்சியாவெலி, ஹெர்பர்ட்ஸ்பென்சர், ஜான் ரஸ்கிண், நீல்ஸ் போர், ஆல்பர்ட் காமஸ், ராபர்ட் பாயில், பெர்னார்ட் ரஸ்ஸல், லியோ டால்ஸ்டாய் எனத் தோற்றுப்போன தத்துவ ஞானிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

டார்வினிஸம், மெட்டிரியலிஸம், செக்குலரிஸம், ஸ்டாய்க்கிஸம், ஹிடோனிஸம், பாஸிடிவிஸம், ரிலேடிவிஸம், யுடிலிடாரியனிஸம், நிஹிலிஸம், எபிக்யூரியானிஸம், ஆல்ட்ரூயிஸம், ஹியூமானிஸம், கம்யூனிஸம், கேபிடலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், அப்ஸர்டிஸம், ஸப்ஜெக்டிவிஸம், அக்னாஸ்டிஸிஸம், டிடர்மினிஸம், ஃபாடாலிஸம், அனார்க்கிஸம் என இவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்களின் பட்டியல் அனாகொண்டா பாம்பைப் போன்று நீண்டுகொண்டே போகின்றது.

மனிதனால் மனிதனுக்கான வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக்கொள்ள முடியாது என்பதை மெய்ப்பிக்ணுன்ற பட்டியல் இது.

இந்த இஸங்கள் கூறுகின்ற செய்திகளையும் இவை முன்வைக்கின்ற கோட்பாடுகளையும் படிக்கும் போதும் அவற்றைப் புரிந்துகொள்ள முயலும்போதும் தலை சுற்றும். இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்த மனிதன் எப்படியெல்லாம் திக்குத் தெரியாமல், பாதை புரியாமல் தட்டுத்தடுமாறி தத்தளிக்கின்றான் என மனம் வலிக்கும்.

இதனைத்தான் இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

‘மேலும் கவிஞர்களையோ - வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும் தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?’ (26 : 224 - 226)

இந்தச் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

ஒருவர் மனிதனை வெறும் வயிறாகப் பார்த்தார் எனில், இன்னொருவர் அவனை வெறும் மூளையாகப் பார்த்தார்.

வேறொருவர் அவனைப் பிற உறுப்புகளாகப் பார்த்தார். இதனால் இவர்கள் வகுத்த வாழ்க்கைத் திட்டங்களும் வயிற்றை மையப்படுத்துகின்றவையாகவோ, பாலியல் உறவுகளை முன்னிறுத்துகின்றவையாகவோ பகுத்தறிவைத் தூக்கிப்பிடிக்கின்றவையாகவோ அமைந்து விட்டன.

ஒருவர் வாழ்வே மாயம் என்று உதறித்தள்ளினார் எனில், இன்னொருவர் வாழ்வதோ ஒருமுறை வாழுங்கள் இன்பமுடன் என்று தூக்கிக் கொண்டாடினார்.

ஒருவர் மனிதர்களை வர்க்கங்களாகப் பார்த்தார் எனில், இன்னொருவர் மனிதர்களைப் பாவிகளாகப் பார்த்தார்.

இதன் விளைவாக உருவாக்கப்பட்ட வாழ்க்கைத் திட்டங்களும் அந்த பார்வைக் கோளாறுகளின் பதிவுகளாயின.

இறைவனைப் பற்றிய இவர்களின் தீர்மானங்களும் வெவ்வேறானவை. சிலர் இறைவனே இல்லை என்றார்கள். சிலர் இறைவன் இருக்கின்றான்; ஆனால் அவனுக்கு மனைவி மக்கள், மாமன், மச்சான் என ஒரு பட்டாளமே இருக்கின்றது; அவர்கள் அனைவரும் இறைமைப் பண்புகளைத் தமக்குள் பங்கிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்கள். சிலர் இறைவனுக்கு ஒரு மகன் இருக்கின்றான் அந்த மகனுக்கு ஒரு தாயும் இருக்கின்றாள் என்றும் மூவருக்கும் இறைமையில் பங்கு என்றும் சொல்லி மூன்றில் ஒன்று என்கிற தியரியை முன்வைத்தார்கள். சிலர்

இறைவனுடன் அவனுடைய பங்காளிகளாக இரண்டு பேர் இருக்கின்றார்கள். ஒருவர் படைப்பார்; இன்னொருவர் அழிப்பார்; வேறொருவர் காப்பார் என்றார்கள்.

இதனால் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இவர்களாக வகுத்துக் கொண்ட வழிமுறைகளும் கோணலாகவே அமைந்துவிட்டன. கோணல்மாணலாக இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக அலைபாய்கின்ற இந்த எண்ணற்ற பாதைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாதை நேராக, சீராக, செம்மையாக மனிதனை சுவனம் வரை கொண்டு சேர்க்கின்றது.

மௌலானா அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் இதனை கருத்துச் செறிவுமிக்க வரை படத்துடன் விளக்குகின்றார்:

‘இறைவனின் உவப்பு வரை மனிதனைக் கொண்டு சேர்க்கின்ற இந்த நேர்வழியைத்தான் குர்ஆன் ‘ஸவாவுஸ் ஸபீல்’ - இராஜபாட்டை என்று அறிவிக்கின்றது.

இந்த உலக வாழ்விலிருந்து மறுமையின் இரண்டாவது வாழ்க்கை வரை போகின்ற எண்ணற்ற கோணல் வழிகளுக்கு நடுவில் இந்த இராஜபாட்டை நேரணிகக் கடந்து செல்கின்றது. இந்த இராஜபாட்டையில் எவர் பயணித்தாலும் அவர் நேர்வழியில் நடந்து இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்றுவிடுகின்றார். எவர் இந்த இராஜபாட்டையைத் தொலைத்து விடுகின்றாரோ அவர் இந்த உலக வாழ்விலும் தவறான திசையில் நடந்து தத்தளிக்கின்றார்; மறுமையிலும் நரகத்தில் போய் விழுந்துவிடுகின்றார். ஏனெனில் உலகத்தின் கோணல் பாதைகள்

அனைத்தும் நரகத்தில் தான் போய் முடிகின்றன.”

இந்த இராஜபாட்டை புலப்படாமல் போனாலோ, இதனைப் பற்றிய செய்தி தெரியாமல் போனாலோ மனிதன் விக்கித்துப்போகின்றான்.

இன்றும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், தொழில்நுட்பமும் வாழ்க்கை வசதிகளும் பெருகி விட்ட நிலையிலும் மனிதன் நிம்மதி கிடைக்காமல் தவித்துக்கொண்டிருப்பதற்கும் போகின்ற பாதை புரியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணம்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

இறைவழிகாட்டுதல்தான் ஒரே தீர்வு. இறைவன் தன்னுடைய தூதர்கள் மூலம் அனுப்பிய வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பதுதான் ஒரே தீர்வு.

மனிதனைப் படைத்த இறைவனே அவனுக்கு வழிகாட்டுகின்ற பொறுப்பையும் எடுத்துக் கொண்டுள்ளான்.

‘திண்ணமாக வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும். மேலும், உண்மையில் மறுமை, இம்மை ஆகிய இரண்டும் நமக்கே உரியனவாகும்.’ (92 : 13, 14)

இறைவன் இந்த வாழ்க்கைமுறை பற்றிய வழிகாட்டுதலை இறைத்தூதர்கள் மூலமாக அளித்து வந்துள்ளான். இன்னும் சொல்லப்போனால் முதல் மனிதரே இறைத்தூதராகவும் இருந்தார்.

இறைத்தூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்:

‘நாமே உம்மை நற்செய்தி சொல்பஅரணிகஅம், எச்சரிக்கை செய்பஅரணிகஅம் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை.’ (அத்தியாயம் 35 ஃபாத்திர்: 24)

இவ்வாறு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்தாம் அண்ணல் நபிகளார் (ஸல்). அண்ணல் நபிகளார்(ஸல்) எடுத்துரைத்த வாழ்க்கைத்திட்டம்தான் இஸ்லாம்.

இன்றைய உலகத்தின் அனைத்து பிரச்ணிக்கஈக்கும் தீர்வாக இருப்பதும் அதுதான். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகத் தாவித் தாவி அலைக்கழிக்கப்பட்டு வருகின்ற மனிதனுக்கு நேர்வழியாக (ஸவாஅஸ்ஸபீலாக) இருப்பதும் அதுதான்.
http://nenjodu.co

இஸ்லாம் மறுபிறவியை ஏன் மறுக்கிறது?

இஸ்லாம் மறுபிறவிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதன் ஒரே ஒரு முறைதான் பிறந்து இறப்பான். இறந்த பிறகு மறுமை நாளில் அவன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவனுடைய செயல்களின் அடிப்படையில் சுவனத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவான். இவ்வாறுதான் இஸ்லாம் கூறுகிறது.

ஆனால் மறுபிறப்புக் கொள்கையின் நிலை வேறு. மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆவி வேறு ஒரு கூட்டிற்குச் சென்று விடுகிறது. அந்தக் கூடு மனிதனாகவோ, விலங்காகவோ, தாவரமாகவோ, உயிரற்ற பொருளாகவோ இருக்கலாம். பின்னர் அவன் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான். இவ்வாறு பல பிறவிகள் எடுத்து இறுதியாகப் பிறவியில் இருந்து விடுபட்டு இறைவனை அடைந்து முக்தி அல்லது மோட்சம் பெறுகிறான் என்று மறுபிறவிக் கொள்கை கூறுகிறது.

இந்த மறுபிறவிக் கொள்கையில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன.

அ) மனிதன் முதலில் மனிதனாகப் பிறந்தானா அல்லது விலங்காகப் பிறந்தானா? விலங்கு என்று சொன்னால் அதற்கு முன் அவன் மனிதனாக இருந்து பாவம் செய்திருக்க வேண்டும். மனிதன் என்று சொன்னால் அதற்கு முன் அவன் விலங்காக இருந்திருக்க வேண்டும். ஆக, எது முதல் பிறவி?

ஆ) அவனுடைய ஆன்மா கர்ம வினைகளின் பயனாக ஒரு விலங்கிற்குள்ளோ, தாவரத்திற்குள்ளோ போகிறது என்று சொன்னால், நன்மை எது, தீமை எது என்று புரிந்து கொள்ளும் சக்தி அற்ற விலங்கோ, தாவரமோ எவ்வாறு முற்பிறவியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்?

இ) ஒருவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக அடுத்த பிறவியில் துன்பங்களை அனுபவிக்கிறான் என்றால் அவன் முற்பிறவியில் செய்த பாவம் என்ன என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு தெரிந்தால்தானே அவன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்? அவ்வாறு அவனுக்கு ஏதேனும் தெரிவிக்கப்படுகிறதா? அல்லது முந்தைய பிறவியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய நினைவுகள் அவனுக்கு உள்ளதா?

மறுபிறவிக் கோட்பாட்டில் காணப்படும் முரண்பாடான குழப்ப நிலை இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டில் இல்லை. மனிதர்கள் இவ்வுலகில் வாழுகின்றபோது அவனுடைய செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. உலக முடிவு நாளின் பின்பு வரும் மறுமை நாளில் அந்த வினைச் சுவடி அவனிடத்தில் ஒப்படைக்கப்படும்.
குர்ஆன் கூறுகிறது, “அந்த வினைச் சுவடியைப் பார்க்கும் மனிதன் கூறுவான்: “அந்தோ! என் சிறு செயலையும் இது விட்டு வைக்கவில்லையே!” தாம் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். உம் அதிபதி சிறிதும் அநீதி இழைக்கமாட்டான்.” (குர்-ஆன் 18 : 49)

மனிதனின் செயல்களுக்கான வினைச்சுவடியை வைத்து அவன் சுவனத்திற்குரியவனா, நரகத்திற்குரியவனா என்பது தீர்மானிக்கப்படும். அத்தோடு அவனது செயல்களுக்கு சாட்சியங்களும் கொண்டு வரப்படும். அவனுடைய உடல் உறுப்புகளே அவனுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ சாட்சி சொல்லும். எனவே குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றங்கள் குறித்து அவனுக்கு உணர்த்தப்பட்ட பின்னரே அவனுக்குத் தண்டனை வழங்கப்படும்.

அவன் செய்த குற்றத்தை நிரூபிக்காமல், அவனுக்குத் தண்டனை வழங்கப்படுவது அநீதியானது. எனவே இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டில் உள்ள இந்தத் தெளிவும் நீதியும் மறுபிறவிக் கோட்பாட்டில் இல்லை.

மறுபிறவிக் கொள்கையில் இன்னொரு குறைபாடும் உள்ளது. ஒருவன் செய்த பாவத்தின் சுமை அவன் வாழ்நாளோடு முடிந்துவிடுவதில்லை. அவன் செய்த பாவம் எவ்வளவு காலத்திற்கு இந்த உலகில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்குமோ அதுவரை அவனுடைய பாவச் சுமை கூடிக் கொண்டே போகும். இந்த உலகம் முடிகின்ற போதுதான் அவன் செய்த பாவத்தின் முழு பரிமாணத்தையும் அளக்க முடியும். உதாரணமாக, ஒருவன் ஒரு மதுக்கடையைத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்த மதுக் கடையைத் திறந்ததற்காக ஒரு பாவத்தை அவன் சுமக்கிறான். ஆனால் அவன் பாவச் சுமை அத்தோடு முடிந்துவிடுவதில்லை. அவனால் துவக்கப்பட்ட மதுக் கடை இவ்வுலகத்தில் என்று வரை இருக்கிறதோ அன்று வரை அவனுடைய பாவச் சுமை நீண்டு கொண்டே போகும். அந்தக் கடையில் மது அருந்தியவர்கள், அதன் விளைவாக அவர்கள் செய்யும் கேடுகள் ஆகிய அனைத்துப் பாவங்களிலும் மதுக் கடையைத் திறந்தவனுக்கு ஒரு பங்கு உண்டு. இந்தப் பாவத்தின் விளைவுகள் ஒரு சங்கிலித் தொடர்போல நீண்டு கொண்டே போகும். இது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அவன் இறந்த பிறகும் அவன் துவக்கி வைத்த பாவத்தின் தாக்கம் தொடரும். எனவே இந்த உலகம் முடிவுற்ற பின்னரே ஒருவன் செய்த பாவத்தின் அளவை முழுமையாக கணிக்க முடியும்.

நபிகள் நாயகம் கூறினார்கள்:
“உலகில் ஒவ்வொரு கொலை நிகழும்போதும் முதல் கொலை நிகழ்த்திய முதல் மனிதன் காபிலின் (ஆதமின் மகன்) கணக்கில் ஒரு பாவம் எழுதப்படும். ஏனெனில் மனித சமூகத்திற்கு முதலில் கொலையை அறிமுகப்படுத்தியவன் அவனே.”

ஈ) இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டின்படி இந்த உலகம் முடிவுற்ற பின்னர்தான் விசாரணை துவங்கும். ஆனால் மறுபிறவிக் கொள்கையிலோ இறந்தவுடன் தண்டனை துவங்கி விடுகிறது என்ற கருத்து உள்ளது. இது ஒரு நீதியான தீர்வாக இல்லை.

மனித இன வளர்ச்சியும் தமிழ் இனமும்

கி.மு 14 பில்லியன்: பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கி.மு. 300000



யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.



கி.மு. 100000





நியாண்டெர்தல் மனிதன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.



கி.மு. 75000



கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.



கி.மு. 50000



தமிழ்மொழியின் தோற்றம்.



கி.மு. 50000 - 35000



தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.



கி.மு. 35000 - 20000



ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.



கி-மு. 20000 - 10000



ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )



கி-மு. 10527



முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.



கி.மு. 10527 - 6100



பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.



கி.மு. 10000



கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.



கி.மு. 6087



கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.



கி.மு 6000 - 3000



கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.



கி.மு. 5000



உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.



கி.மு. 4000



சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.



கி.மு - 4000



கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.



கி.மு - 3200



சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.



கி.மு - 3113



அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.



கி.மு - 3102



சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.





மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்



இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.







கி.மு - 3100 - 3000



ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.



கி.மு - 2600



எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.



கி.மு - 2387



இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.



கி.மு - 2000 - 1000



காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.



கி.மு - 1915



திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.



கி.மு. - 1900



வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.



கி.மு. 1500



முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.



கி.மு. - 1450



உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.



கி.மு. - 1316



மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.





கி. மு. 1250



மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.



கி. மு . 1200



ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.



கி. மு. 1000



உலக மக்கள் தொகை 50 மில்லியன்.



கி. மு. 1000-600



வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.



கி. மு. 950



அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.



கி. மு. 950



வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.



கி. மு. 925



யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.



கி. மு. 900



இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.



கி. மு. 850பின்



இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.



கி. மு. 776



கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.





குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)





கி. மு. 750



பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.



கி. மு. 700



சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.



கி. மு. 623- 543



கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.



கி. மு. 600



லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.



கி. மு. 600



கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.



கி. மு. 599 - 527



மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.



கி. மு. 560



பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.



கி. மு. 551-478



கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.



கி. மு. 500



கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.



கி. மு. 478



இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.



கி. மு. 450



ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.



கி. மு. 428 - 348



சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.



கி. மு. 400



கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.



கி. மு. 350 - 328



உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)



கி. மு. 328 - 270



மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)



கி. மு. 326



அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.



கி. மு. 305



சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.



கி. மு. 302



சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.



கி. மு. 300



சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.



கி. மு. 300



கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.



கி.மு. 273-232



மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.



கி.மு. 270-245



சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.



கி.மு. 251



புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்



கி.மு. 245-220



சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.



கி.மு. 221



புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.



கி.மு. 220 - 200



கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.



கி.மு. 220-180



குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.



கி.மு. 200



முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.



கி.மு. 200



தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.



கி.மு. 125-87



ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.



கி.மு. 87-62



செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி



கி.மு. 62-42



யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)



கி.மு. 42-25



பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.



கி.மு. 25-9



இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.



கி.மு. 9-1



கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
muzhakkam.com

பீ.ஜே அன்றும் இன்றும்

பீ.ஜே அன்றும் இன்றும் 01 நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!
بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள், திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;

''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம் தான் இதை கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.

பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில், ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;

இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.

முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!

விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?

ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.



நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.

அல்லாஹ்வை இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாது என்பதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சான்றுகள் நிறைந்துள்ளன.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)

இவ்வசனத்தில் அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில்தான் பேசுவான் என்று தெளிவாக கூறுகிறான். இவை அல்லாத வேறு வழிகள் இல்லை என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகிறான்.

இறைவன் மனிதர்களிடம் பேசும் முறைகள் மூன்று. அவை. 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம். ஏனெனில் நமது கண்களுக்கு அவனைப் பார்க்கும் அளவிற்கு சக்தி கிடையாது.


அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)
இக்கருத்தை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான். உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகல் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகல் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம் 293, அஹ்மத் 18765,18806

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது அல்லாஹ் கூறிய வார்த்தையிருந்தும் அந்தச் சம்பவத்திருந்தும் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை அறியலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உன்னை நான் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது “என்னை நீர் பார்க்கவே முடியாது” என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
இச்சம்பவம் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகத்தில் நேரடியாக அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகிறது.



யாரும் இறந்து மறு உலகை அடையாமல் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
உங்களில் எவரும் தன் இறைவனை அவர் இறக்காத வரை பார்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்ம் 5215)

மேலும் நபி (ஸல்) அவர்களே மிகத் தெளிவாக நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறிய செய்தி ஹதீஸ் நூற்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


source: www.tntj.net

புதன், மார்ச் 28, 2012

பள்ளிவாசல் கட்ட பூஜை????

ஏகஇறைவனின் திருப்பெயரால்... காரைக்காலில் நடந்த கொடுமைபள்ளிவாசல் கட்ட பூஜை ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.


இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

காரைக்காலில் ''ஹில்ரு பள்ளிவாசல்'' கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தானே?

அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்

''இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது.

அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா?

அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.'' திருக்குர்ஆன் 9:17,18,19'தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!

அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா?

அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.'' (திருக்குர் ஆன் 9:107,108,109)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்

இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர்.

இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.

முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.

ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
— with Labbai Karaikal and Yoosuf SP.

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்



தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலபரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரிசா முதல் தமிழகம் வரை தென்பகுதியை 17ம் நூற்றாண்டின் போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முகமது அலிகான் வாலாஜா நவாப். இவர், பிரம்மாண்டமான அழகிய அரண்மனை ஒன்றை கட்ட விரும்பினார். அப்போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெரும்பகுதியை கட்டியவர் பால் பென்பீல்ட். அந்த காலத்தில் இவர் கட்டும் கட்டிடம், மிகவும் தரமானதாக கருதப்பட்டு வந்ததே இதற்கு காரணம். அரண்மனையை கட்ட செலவாகும் தொகையை, கட்டி முடித்த பிறகு வாலாஜா நவாப் கொடுத்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரண்மனை கட்டிடப் பணிகள் 1760ல் தொடங்கப்பட்டு 1768ல் முடிக்கப்பட்டது.

சுமார் 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், சென்னை பல்கலைக்கழகம், செனட் பில்டிங், சென்னை மாநிலக் கல்லூரி, எழிலகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் ஆகியவை அடங்கும். அரண்மனையின் அன்றைய சமையல் கூடமாக இருந்ததுதான், இன்றைய திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்.

அரண்மனையை கட்டி முடிக்க செலாவான தொகையைக் காட்டிலும், பல மடங்கு அதிக தொகையை வாலாஜா நவாப்பிடம் பால் பென்பீல்ட் தெரிவித்தார். அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன வாலாஜா நவாப், இவ்வளவு தொகையை தன்னால் கட்ட இயலாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தீட்டிய திட்டத்தின்படி, வாலாஜா நவாபிடம் இருந்த நிலப்பரப்பை அபகரிக்க, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரண்மனைக்கு செலவான தொகைக்கு ஈடாக, வாலாஜா நவாபின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், பால் பென்பீல்ட் ஊழல் செய்து விட்டதாக, அவர் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, 225 மில்லியன் டாலர் தொகைக்கு கட்டப்பட்ட அரண்மனை கட்டிடங்களை 400 மில்லியன் டாலர் என்று கூறியதாக, பால் பென்பீல்ட் மீது குற்றச்சாட்டை வைத்து, ஒரு நாடகத்தை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றினர். இதன் பிறகு வாலாஜா நவாப் உயிர் வாழும் வரை அந்த அரண்மனையை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர், அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டதுதான் அமீர் மஹால்.

அரண்மனை கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஊழலின் தொடக்கம் தான், இந்தியாவில் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியம் காலூன்ற காரணமாகி விட்டது. இதற்கு துணைபோன ஊழல் பேர்வழி பால் பென்பீல்ட், தனது இறுதிக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து வாழ்ந்து செத்துப் போனார் என்பது வரலாறு.
By: Nagoorkani Kader Mohideen Basha

யார் முட்டாள் ?

ஒரு கடைக்காரர் தன வாடிக்கையாளரிடம் கூறினார்,

''இதோ நிற்கும் பையன் சரியான முட்டாள்.நான் அதை உங்களிடம் நிரூபிக்கிறேன்.வேடிக்கை பாருங்கள்,''என்றார்.

பின்னர் அந்தப் பையனைக் கூப்பிட்டு,ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயத்தையும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு,''இதில் எது உனக்கு வேண்டு தம்பி,''என்று கேட்க அவன் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டான்.கடைக்காரர் வெற்றிப் புன்னகையுடன் வாடிக்கையாளரைப் பார்த்தார்.

வாடிக்கையாளர் கடையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பையன் எதிரில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.அவனிடம் அவர் கேட்டார்,''ஏன் தம்பி ஐந்து ரூபாயை எடுத்தக் கொள்ளாமல் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?'

'பையன் சொன்னான்,'எனக்கு எல்லாம் தெரியும்.ஏற்கனவே நான் பல முறை இதே போல இரண்டு ரூபாய் வாங்கியிருக்கிறேன்.நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால் இன்னொரு முறை இது போல செய்ய மாட்டார்.அப்போது எனக்கு நஷ்டம் தானே?

-படித்தது
By: பேகம் பானு

திங்கள், மார்ச் 26, 2012

14. முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?

கேள்வி 1 : இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விடையளிப்பது? சாஜிதா ஹுஸைன், சென்னை.

கேள்வி 2: முஸ்லிம்களிடத்திலும் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக என் இந்து நண்பர் கூறினார். மற்ற பிரிவுகளுக்கு விளக்கம் சொல்லும் என்னால் ஷியா-சன்னி பிரிவுக்கு விளக்கம் தர முடியவில்லை? கௌதியா ஹாஜா, அதிரை.

கேள்வி 3 : முஸ்லிம்களிடையே சாதிப் பிரிவுகள் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால், திருமண விளம்பரங்கள் வெளியிடும் போது மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்ற பிரிவுகளின் பெயரிலே வெளியிடுகின்றனரே எதனால்? அமல்ராசன், எழுவை-628 617.

பதில்: இஸ்லாமிய மாக்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும்.


இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.


ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை. முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை. தலித் சமுதாயத்தில் பிறந்தவர் ஒருக்காலும் அவர் என்ன தான் முயன்றாலும் ஐயராக முடியாது; முதலியாராக முடியாது; செட்டியாராக முடியாது.


ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக் கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லா விட்டால் எந்த நிமிடமும் ஷியாப் பிரிவில் சேர முடியும்.


ஆன்மீகத் தலைவரிடம் பைஅத் (தீட்சை) பெறுதல் சமாதிகளை வழிபடுதல்
நபிகள் நாயகத்தின் வாரிசுகள் மட்டுமே ஆள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என நம்புதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ தான் நபிகள் நாயகத்துக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என நம்புதல் இவை ஷியாக் கொள்கையில் சில.


இக்கொள்கைகளை ஏற்றவர்கள் ஷியா எனவும், ஏற்காதவர்கள் சன்னி எனவும் அழைக்கப்பட்டனர். இன்றைக்கும் கூட, ஷியாப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தனது கொள்கை தவறானது என உணர்ந்து சன்னிப் பிரிவில் சேரலாம். யாரும் தடுக்க முடியாது.

இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.

இது வர்ணாசிரமத்துக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு.

மேலும் வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையை நிலை நாட்டுவதற்காகவும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.

சன்னிகள் ஷியாக்களைத் தீண்டாக்தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அது போல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை.

அடுத்து முஸ்லிம்கள் ஏன் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற கேள்விக்கு வருவோம். பொதுவாக மனிதர்களிடையே எப்படியெல்லாம் சண்டைகள் நடக்கின்றன என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு சரியான விடை காணலாம்.

ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன.
ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.

ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.

இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான்.

மரைக்காயர் என்பது மரக்காயர் என்ற சொல்லின் திரிபாகும். மரக்கலாயர் என்றால் மரக்கலம் (படகு) சார்ந்த தொழில் செய்பவர் என்று பொருள்.

ஒரு காலத்தில் கடல் வழியாக வாணிபம் செய்வதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தனர். மரக்கலம் வழி யாக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்ததால் அவர்கள் மரக்கலாயர் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இது மரைக்காயர் என்று ஆகிவிட்டது.

மரக்கலம் சார்ந்த தொழில் செய்தவர்கள் மரக்காயர் என்று தம்மைக் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக் கொள்வோம். அந்தத் தொழில் செய்யாதவர்களும் தம்மை மரைக்காயர் என்று குறிப்பிட்டுக் கொள்வதால் இது சாதியைப் போல் தோற்றமளிக்கிறது.

யானையைப் பயிற்றுவிப்பவர் மாவுத்தர் என்று குறிப்பிடப்படுவது போல குதிரையைப் பயிற்றுவிப்பவர் ராவுத்தர் என்று குறிப்பிடப்படுவார்.

அன்றைய முஸ்லிம்களில் பலர் அரபு நாட்டுக் குதிரைகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயிற்றுவித்து பாண்டிய மன்னர்களிடம் விற்று வந்தனர். இதனால் அவர்கள் ராவுத்தர் எனப்பட்டனர்.

ஆனால் குதிரையுடன் எந்தத் தொடர்புமில்லாதவர்கள் தம்மை ராவுத்தர் எனக் குறிப்பிடுவதால் இதுவும் ஒரு சாதியைப் போல் தோற்றம் ஏற்பட்டு விட்டது.

தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இம்மண்ணில் பிறந்தவர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

ஆயினும் மிகக் குறைந்த அளவில் சிலர் அரபு நாடுகளி லிருந்து வந்து நமது நாட்டைத் தங்கள் தாயமாகக் கொண்டு இங்கேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை மற்றவர் அழைக்கும்போது லப்பைக் (வந்துவிட்டேன்) என்று அரபு மொழியில் குறிப்பிட்டு வந்தனர். இதனால் அவர்களின் பெயரே லப்பை என்று ஆகிவிட்டது.

பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று லப்பைகள் எனப்படுவோர் அரபு மொழியில் பேசுவதில்லை. அவர்களுக்கு அம்மொழி தெரியாது. இப்போதும் அவர்கள் லப்பை என்று கூறிக் கொள்வதால் இதுவும் சாதியைப் போல் தோற்றமளிக்கிறது.

எனவே முஸ்லிம்கள் இதை ஒரு பட்டம் போல் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதே சமயத்தில் முஸ்லிம்கள் மரைக்காயர், இராவுத்தர், என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொள்வதை சாதிப் பிரிவுடன் ஒப்பிடக்கூடாது.

ஏனெனில், அனைவரும் ஒரே வழிபாட்டுத் தலத்தில் ஒரே வரிசையில் நின்று தொழுவார்கள்.

ஒரே தட்டில் மரைக்காயரும், இராவுத்தரும் சாப்பிடுவார்கள். திருமண சம்பந்தமும் செய்து கொள்வார்கள்.

ஒரே அடக்கத்தலத்தில் தான் அனைவரும் அடக்கம் செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கிடையே தீண்டாமையோ, பாரபட்சமோ பிறப்பால் உயர்வு, தாழ்வோ கிடையாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயினும், இஸ்லாத்தில் சாதிகள் உள்ளன என்று பலரும் கருதுவதற்கு இது இடமளிப்பதால் இதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரை கூறியும் வருகிறோம்.

முஸ்லிம்கள் பழைமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது? சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமை வாதத்திலிருந்தும் முஸ்லிம்கள் முற்றிலும் விடுபட்டுள்ளனர்.

மாயம், மந்திரம், புரோகிதம் போன்ற பித்தலாட்டங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவது கண்கூடாகத் தெரிந்த பின்பும் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கம் தான்.

தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிம்கள் பகைவர்களாகக் கருதுகிறார்கள் என்பதும் தவறாகும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையே முஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களைப் பகைவர்களாகக் கருத மாட்டார்கள்.

ஆயினும் சிலரது சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது. இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமை தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகைய எண்ணத்தை நீக்கப் பாடுபட வேண்டும்.

16. ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?
கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை. அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி(ஸல்) அவர்கள் 72 பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போதோ 100க்கும் மேற்பட்ட பிரிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அனைவரும் தேர்வு செய்து இருப்பது ஒரே குர்ஆன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் விளக்கம் என்ன? மேலும் indian muslims என்கிற தலைப்பில் இந்தியா வில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள் இப் போது 53 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அங்கு அகதிகளாகவே உள்ளனர் எனக் கூறியுள்ளார் உண்மை தானா? ஏன்? இதே கேள்வி ஒன்றைத் தான் எனது இந்து நண்பர் கேட்டார். நீங்கள் முஸ்லிம் என்று சொல்லி பாகிஸ்தான் சென் றால் உங்களைச் சேர்க்க மாட்டார்கள். பின்பு ஏன் சகோதரத் துவம் என்ற முறையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக முஸ்லிம் கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஏன் அனு மதிக்கப்படுவது இல்லை. இதைப் பற்றிய விளக்கம் தேவை.

பதில்: இதெல்லாம் அறிவீனர்களின் வாதமாகும். ஒரு நாட்டுக்கு ஒரே ஒரு அரசியல் மற்றும் குற்றவியல் சட்டம் தான் உள்ளது.

அந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை மாவட்ட நீதி மன்றம் தள்ளுபடி செய்கிறது.

மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியில்லை என்று மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் பெஞ்சுகள் தள்ளுபடி செய்கின்றன. உச்ச நீதி மன்றம் அதையும் தள்ளுபடி செய்கின்றது. உச்சநீதிமன்ற பெஞ்ச் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கின்றது.

இப்படி உலகின் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற முரண் பட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

அனைவருமே ஒரே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்பளிக்கின்றனர்.

இதை அந்த மேதாவி எழுத்தாளர் குழப்பம் என்பாரா? விமர்சனம் செய்வாரா? நிச்சயம் செய்ய மாட்டார். சட்டம் ஒன்றாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வதில் தவறிழைக்கலாம். முக்கியமான பாயின்டுகளை ஒருவர் கவனிக்க மறுக்கலாம்.

இது போல் குர்ஆன் ஒன்று என்றாலும் அதைப் புரிந்து கொள்வதில் வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை யானது தான். இந்த எழுத்தாளரின் கட்டுரையையே பலரும் பல விதமாகப் புரிந்து கொள்வார்கள்.

ஆயினும் இஸ்லாமிய சமுதாயத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒன்றிரண்டு பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கிடையே அடிப்படையான விஷயங்களில் எந்த வேறுபாடும் கிடையாது.

#அல்லாஹ் ஒருவன். வேறு கடவுள் இல்லை.
#முஹம்மது நபி இறைத்தூதரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.
# வானவர்கள் உள்ளனர்.
# ஷைத்தான்கள் உள்ளனர்.
# உலகம் அழிக்கப்படும்.
# அழிக்கப்பட்டவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
# விசாரணை நடக்கும்.
#சொர்க்கம் நரகம் உண்டு.
# மது, சூது, லாட்டரி, விபச்சாரம், மோசடி, கலப்படம், திருட்டு

போன்றவை குற்றச் செயல்கள் என 95 சதவிகிதம் விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு ஏதுமில்லை. வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் முறைகளில் ஓரிரண்டு விஷயங்களில் மாறுதல் உள்ளன. இது போன்று வேறு சில சட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் உள்ளன.

அடிப்படையிலேயே மாறுபட்ட கருத்துகள் மற்ற மதங்களில் உள்ளன. எனவே அவரது விமர்சனம் அறியாமையின் வெளிப்பாடு. அவருடைய நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு.

அடுத்து பாகிஸ்தான் பற்றி அவர் கூறுவதும் அவரது அறியாமையை எடுத்துக் காட்டுகிறது.

பாகிஸ்தானை இங்குள்ள முஸ்லிம்கள் ஆதரிப்பதாகக் கூறுவது திட்டமிட்ட அவதூறாகும். இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.

நாட்டின் இரகசியங்களைக் காட்டிக் கொடுத்தவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிமல்லாதவர்கள் தான்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாகிஸ் தானைச் சேர்ந்தவர்கள் தான். இந்திய முஸ்லிம்கள் அல்லர்.

மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த பல போர்களில் முஸ்லிம்கள் மற்றவர்களை மிஞ்சும் வகையில் நாட்டுக்காகப் போராடியுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் இன்னொரு முக்கியமான விஷயத்தை அனை வரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக் களில் முஸ்லிம்கள் மட்டுமே தமக்கு வைக்கப்பட்ட பரீட்சையில் தேறி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். வேறு எந்தச் சமுதாயத்துக்கும் இது வரை பரீட்சை ஏதும் வைக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்காக ஒரு நாடு உருவாகி யார் வேண்டு மானாலும் வரலாம் என்று அழைப்பு விடப்பட்ட போதும், ஆசை வார்த்தை காட்டப்பட்ட போதும் இங்கேயே தங்கியவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

தமக்கென ஒரு நாடு உருவாகும் போது எந்தச் சமுதாயத்தினரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் தங்கிய முஸ்லிம்கள் மட்டும் தான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு இங்கேயே தங்கி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டினார்கள்

எனவே நாட்டைப் பிரித்துக் கொண்டு சென்றவர்களின் செயலுக்காக, இங்கே தங்கி தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்தவர்கள் மீது பழிபோடுவதை விட மிகப் பெரிய அநீதி ஏதும் இருக்க முடியாது.

அடுத்து பாகிஸ்தானில் முஹாஜிர்கள்' மரியாதையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்

முஹாஜிர்கள் என்றால் யார் என்பதைப் புரிந்து கொள்ள பாகிஸ்தான் பூகோள அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் இரண்டு மாநிலங்களை இரண்டிரண்டாகப் பிரித்தே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி மேற்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. இன்னொரு பாதி பஞ்சாப் மாநிலமாக இந்தியாவில் உள்ளது.
அது போல் வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி கிழக்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. மறு பாதி மேற்கு வங்க மாநிலமாக இந்தியாவில் உள்ளது.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வாங்காளம் இன்று பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆகிவிட்டது.

மேற்கு பாகிஸ்தானாக இருந்த பாதி பஞ்சாப் மட்டுமே தற்போது பாகிஸ்தானாக உள்ளது.

நாடு பிரிக்கப்பட்ட போது பஞ்சாபில் இருந்த மக்கள் தங்கள் மண்ணோடு தான் பிரிந்து கொண்டார்கள்.

வங்காள மக்களும் அப்படியே பிரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களை யும் பாகிஸ்தான் வருமாறு அன்று அழைப்பு விடப்பட்டது. இந்த அழைப்பை 99 சதவிகித முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர். ஒரு சதவிகிதம் முஸ்லிம்கள் தான் உருவாகவுள்ள பாகிஸ்தானுக்குப் போனார்கள். இவர்கள் தான் முஹாஜிர்கள்.

பஞ்சாப், வங்காள மாநிலத்திலிருந்து நிலப்பரப்போடு பிரிந்தவர் களுக்கு வீடு வாசல், சொத்து சுகமெல்லாம் இருந்தன. வேறு மாநிலங்களிலிருந்து சென்றவர்களுக்கு அங்கே ஏதும் இல்லை.

எனவே தான் வீடு வாசல் அற்ற அகதிகளாக முஹாஜிர்கள் இருக்கின்றனர்.

இது மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நிலை அல்ல. உள்ளூர் வாசிகள், வந்தேறிகள் பிரச்சினையாகும்.

இன்னும் சொல்வதென்றால் பாகிஸ்தான் இஸ்லாத்திற்காகப் பிரிக்கப்படவில்லை. இன்றைய பாகிஸ்தான் மக்களிடமும், தலைவர்களிடமும் உள்ள மார்க்கப்பற்றில் கால்வாசி கூட அன்றைய மக்களுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவில்லை. இஸ்லாமிய அடைப்படையில்லாமல் பிரிந்ததால் தான் வந்தேறிகள் ஒரு விதமாகவும், உள்ளூர் வாசிகள் வேறு விதமாகவும் நடத்தப்படுகின்றனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்துக்கு என்ன காரணமோ அதே காரணத்துக்காகத் தான் பாகிஸ்தானில் இந்த நிலை.

எனவே பாகிஸ்தானை மேற்கோள் காட்டி இஸ்லாத்தை விமர்சிப்பதை ஏற்க இயலாது.

சனி, மார்ச் 24, 2012

ஷேய்க் அஹமது யாசீன் ஷஹீத் (ரஹ்)



அல்ஜேரா என்னும் பாலஸ்தீன கிராமத்தில் 1939 இல் பிறந்தவர் ஷேய்க் அஹமது யாசீன்.மூன்று வயதில் தந்தையை இழந்தார். 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு மற்ற பாலஸ்தீனியர்களைப்போல இவரும் அனாதையாக அலைந்தார்.ஆனால் கல்வியை ஆர்வத்தோடு கற்று உடற்பயிற்சியிலும் சிறந்து விளங்கினார்.அவற்றை வெற்றியின் இரு தோள்கள் என நினைத்தார்.கடுமையான போர் பயிற்சிகளை மேற்கொண்ட ஒருநாளில் மலையின் மீதிருந்து விழுந்து முதுகெலும்பு பழுதுபட்டு நடக்கமுடியாமல் ஆனார். உடல் ஊனமானாலும் உள்ளம் வீரத்தால் நிரம்பி வழிந்தது. கற்ற கல்வி இவருக்கு ஆசிரியர் வேலையை பெற்றுத் தந்தது. 1987 இல் "ஹமாஸ்" என்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இவர் ஆரம்பித்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணிவகுத்தனர். யாசீன் அவர்களின் வழிகாட்டுதலில் விடுதலைப்போர் தீவிரமாக நடந்தது. இவரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அஞ்சிய யூத பாசிச அரசு இவரை கைதுசெய்து சிறையிலடைத்தது. நடமாட முடியாமல் கண்பார்வையும் சரியாகத் தெரியாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த யாசீன் அவர்கள் எட்டு ஆண்டுகள் இஸ்ரேலியர்களின் சிறைக்கொட்டடியில் வன் கொடுமைகளை அனுபவித்தார். 1997 இல் விடுதலையானார். ஆனாலும் அவரின் அறிவும் வீரமும் குன்றி விடவில்லை."ஹமாஸ்"எப்போதும்போல் போராடியது."அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் நாம் தலை வணங்க மாட்டோம்;பாலஸ்தீனையும் அல்குத்ஸையும் விடுதலைப் பெறச் செய்வதில் வெற்றி பெறுவோம்" என வீர முழக்கமிட்டு போர்செய்தார்.

இவரது ஆண்மைமிக்க அறைகூவலை எதிர்கொள்ள திறனற்ற பேடி வஞ்சகன் ஏரியல் ஷேரோன் 2004 மார்ச் 22 ஆம் நாள் இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணைகளை வீசி ஷேய்க் அஹமது யாசீன் avarkalai படுகொலை செய்து விட்டான். வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீன விடுதலைக்காக போராடி அண்ணல் நபிகள்(ஸல்) அவர்களின் வழியில் பேணுதலாக வாழ்ந்து காட்டிய அந்த புனிதப் போராளியின் உடல் அவர் வாழ்ந்த மண்ணுக்குள் அடக்கம் ஆகிவிட்டது. அல்லாஹ் தனது பொருத்தத்தை அவர்களுக்கு வழங்கி, அவனுடைய சுகதாக்கள் கூட்டத்தில் அஹமது யாசீன் அவர்களையும் சேர்த்து வைப்பானாக. ஆமீன்.

*******************************

## கூட்டம் குடும்பத்தை, மனைவி மக்களை, சுற்றம் நட்பை யூதனின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பறிகொடுத்துவிட்டு, பசியிலும் பஞ்சத்திலும் பரிதவித்து,தவித்த வாய்க்கு தண்ணீருக்கும் வழியின்றி, வடிப்பதற்கு கண்ணீருமின்றி, பச்சிளம் பாலகர்களின் கைகளில் கற்களைக் கொடுத்து,"மகனே! இந்தக் கல்லைக் கொண்டாவது நமது இஸ்லாத்தின் எதிரிகளை விரட்டியடி" என்று அன்பு முத்தம் கொடுத்து வழியனுப்பி,யூதனின் ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கு அந்த பாலகன் பலியாகி, அவனின் உயிரற்ற உடலைத் தூக்கிவந்து,"தாயே உன் மகன் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டு விட்டான் " என்று அந்த பாலஸ்தீன மக்கள் சொல்லும்போது, "இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன்" என்று, கூறி தான் பாலூட்டிய மார்போடு அணைத்து,"என் அன்பு மகனே! அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தைத் தந்தருளட்டும்" என்று வாழ்த்தி மண்ணறைக்கு வழியனுப்பி வைக்கின்றாளே பாலஸ்தீனத்து முஸ்லிம் தாய்.....அந்தத் தாயின் வேதனையில் ஒரு துளியாவது ருசித்திருக்கிறோமா நாம்?

வாழ்கையை இழந்த நிலையிலும்கூட இதயத்தில் ஈமானையும் வீரத்தையும் சுமந்து வரலாறும் தெரியாது; வள்ளல் நபிகளாரின் வாழ்வும் தெரியாது.

வாயில் மட்டும் ஈமானை வழியவிடும் இவர்கள் யஹூதிகளைவிடக் கேவலமானவர்கள்.

இவர்களின் வழிகேட்டிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்!

இரக்கம் காட்டிய முஸ்லிம்களை கழுத்தறுத்த கிறித்தவர்கள்

மூன்றாவது சிலுவைப்போர் என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கொடும்யுத்தம், சிரியாவின் ‘ஏக்ர்’ என்னும் கோட்டை முற்றுகையில் ஆரம்பமானது.

கி.பி. 1190-ம் ஆண்டு ஜூலை மாதம் யுத்தம் ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலத்துக்கு எந்தத் தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் நீடித்துக்கொண்டே போன யுத்தம் அது. சலிப்புற்றாவது போரை நிறுத்துவார்களா என்று உலகம் பார்த்துக்கொண்டிருந்தபோது சலாவுதீனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆகவே, வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாமல் ஓர் இடைக்கால ஏற்பாடு போல போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போர் நிறுத்தக் காலத்தை சிலுவைப்போர் வீரர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்த ஆள்பலம் மற்றும் பொருள்பலத்தைச் சரியாகப் பங்கிட்டு முற்றுகை நடந்துகொண்டிருந்த கோட்டைகளுக்கு அனுப்பிவைத்தார்கள். கப்பலில் வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மன்னர்கள். இந்த இருவருமே வந்து சேர்ந்த கணத்திலிருந்தே காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன், ஐயோ பாவம், மன்னர்களுக்குக் காய்ச்சல் வந்தால் வீரர்கள் சோர்வடைந்துவிடுவார்களே என்று பிரசித்தி பெற்ற லெபனான் நாட்டு மருந்துகளையும் சுரவேகத்தைத் தணிக்கக் கூடிய மூலிகை வேர்களிலிருந்து பிழியப்பட்ட சாறுகளையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தாராம்!

அந்த இரு மன்னர்களும் உடல்நலம் தேறியபிறகு மீண்டும் முற்றுகை யுத்தம் ஆரம்பமானது. ஆனால் முஸ்லிம் வீரர்கள் இம்முறை மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்கள். சலாவுதீன் யோசித்தார். தமது வீரர்கள் எவரும் வீணாக உயிரிழப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரையும் கொல்லமாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் ஏக்ர் கோட்டையை விட்டுத்தந்துவிடுவதாகச் சொன்னார்.

சிலுவைப்போர் வீரர்கள் சம்மதித்தார்கள். கோட்டை கிறிஸ்துவர்களின் வசமானது. அதன்பிறகு நடந்ததுதான் துரதிருஷ்டவசமானது. மன்னர் சலாவுதீன் எத்தனை மனிதாபிமானமுடன் கிறிஸ்துவர்களை நடத்தினார் என்பதைச் சற்றும் நினைவுகூர்ந்து பாராமல், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கோட்டை கைவசமானதுமே அத்தனை முஸ்லிம் வீரர்களையும் கிறிஸ்துவர்கள் நிற்கவைத்துத் தலையைச் சீவினார்கள்! (வெண்ணிறமானதொரு பெரிய மைதானம் முழுவதும் ரத்தம் படிந்து செம்மண் நிலம் போலானது என்று இதனை எழுதுகிறார் சரித்திர ஆசிரியர் மிஷாட்.)

மூலம்: பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்

மறுபிறவி இருப்பது உண்மையா?

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.
அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.

ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது.
மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.
இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

வெள்ளி, மார்ச் 23, 2012

அறுவை சிகிச்சை இன்றி மகாதமனியை சீர்படுத்தலாம்

வயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும்,

அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி வால்வை, ரத்தமின்றி, அறுவைச் சிகிச்சையின்றி மாற்றி பொருத்து வதற்கு, டி.ஏ.வி.ஐ., என்று பெயர். ஆங்கிலத்தில், “டிரான்ஸ்பெமோரல் அயோட்டிக் வால்வு இம்ப்ளான்ட்’( transfemoral aortic valve implant) என்றழைக்கப்படுகிறது. தொடையிலுள்ள ரத்தக் குழாய் வழியாக, ஸ்டென்ட் பொருத்தப்படுவதே, இச்சிகிச்சை முறை. அயோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் என்ற வால்வு சுருக்க நோய், 60 முதல், 70 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ஏற்படும். 50 சதவீத முதியோருக்கு, வயது முதிர்வு தன்மையால், வால்வின் மேல், சுண்ணாம்பு, நார் சத்து படர்ந்து, வால்வு சுருங்கி விடுகிறது.

இதனால் ரத்தம், இடது கீழறையிலிருந்து, மகா தமனிக்கு செல்வதில் தடை ஏற்பட்டு, பல சிக்கல்களும், கோளாறுகளும் உண்டாகின்றன. பெரும்பாலும், அயோட்டிக் வால்வு சுருக்கத்தை, கண்டுபிடிப்பது கடினம். 50 சதவீதத்தினர் கண்டுபிடிக்காமல், இந்த வியாதியினால் திடீரென்று இறந்து விடுகின்றனர். நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை, கணக்கிட வேண்டும். இதய அறுவை சிகிச்சை வேண்டாம்

இதை சரியாக கண்டுபிடிக்கா விட்டால், அறுவை சிகிச்சை மூலம், வால்வு மாற்று சிகிச்சை செய்ய முடியாத இறுதி நிலையில், நோயாளிகள் இருப்பர். அந்த நேரத்தில், இந்த டி.ஏ.வி.ஐ., தான் தீர்வு. ரத்தமின்றி, கத்தியின்றி நெஞ்சை பிளக்காமல், வலது தொடையில் இருக்கும் பெமோரல் ரத்த நாளத்தில் துளை போட்டு, அதன் மூலம் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அது, அயோட்டிக் வால்வை கடந்து, இடது கீழறை வரை சென்றடையும். இதனுள் ஒரு மெல்லிய கம்பியை செலுத்தி, அறையில் நிறுத்தி, அதன் வழியாக, ஸ்டென்ட்டை உள்ளடக் கிய பலூனை செலுத்தி, பழுதடைந்த அயோடிக் வால்வு பகுதியில் வைத்து, வெளியில் பம்பு மூலம், பலூனை விரிவடைய வைக்க வேண்டும். அப்போது, சுருங்கிய வால்வு விரிவடையும். பலூனின் ஸ்டென்ட் தாங்கியுள்ள பகுதியை, வால்வின் பழுதடைந்த பகுதியில் வைத்து விட்டால், வால்வில், ரத்த ஓட்டம் சீராகிவிடும்.

இந்த நோயை, உடனடியாக கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்கள்:

இந்த பாதிப்பை கொண்டவர்கள், எந்தவித குறைகளுமின்றி இருப்பர். காரணம், பெரும்பாலான முதியோர், அதிகமான செயல்பாடுகள், வேலைகளில் ஈடுபடுவதில்லை.

'எக்கோ கார்டியோ கிராம், டிரெட் மில் டெஸ்ட்’ பரிசோதனைகள் செய்து கொள்வதில்லை.

பெரும்பாலான குடும்ப டாக்டர்கள், இந்த நோயை கவனத்தில் கொள்ளா மல் கூடுதல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தமென்று இருந்து விடுகின்றனர்.

முதியோருக்கு மூச்சு திணறலோ, வேலை செய்யும் திறன் குறைந் தாலோ, நடை பயிற்சியின் வேகம், தானாக குறைந்தாலோ, வயதான குறையென்று சும்மா இருக்கக் கூடாது.

உடனடியாக, இதய வல்லுனரின் ஆலோசனை தேவை.

வியாழன், மார்ச் 22, 2012

ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

**********
பிரஞ்சு வார்த்தைகளின் உச்சரிப்புகள் கவனமுடன் கையாளப்பட்டுள்ளன. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
**********

ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும்.

நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர்.

இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.

சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?

இதற்கு விடைக்காண ஆரம்பித்து தான் அதிசயத்து போய் நின்றது கர்தோ (Cartault) என்ற ஆய்வாளரின் குழு. இந்த நோய் ஏற்பட எந்த மரபணுக்கள் காரணம் என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் இந்த குழுவினர். சுமார் ஒன்பது குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தினர். நோயால் பாதிக்கப்பட்ட பதினைந்து குழந்தைகளும், பாதிக்கப்படாத பதினேழு குழந்தைகளும் இதில் அடங்குவர்.

மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.

ஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.

இயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது.

குப்பை மரபணுக்கள் (Junk DNA):

அது 1940-களில் ஒரு கட்டம்.

மரபியல் வல்லுனரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பார்பரா ஒரு வியப்பூட்டும் ஆய்வை நிகழ்த்தினார். உயிரினங்களின் மரபணுக்களில் 'transposons' எனப்படும் மரபணுக்களை கண்டுபிடித்தார் அவர். இந்த மரபணுக்களின் பயன்பாடு தெரியாவிடினும், இவை மற்ற மரபணுக்களை ஒழுங்குப்படுத்தும் செயலை செய்யலாம் என்று எண்ணினார் பார்பரா.

அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர்.

அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?

ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் சில அதிகாரங்கள் (chapter) பயனுள்ளவை என்றும், மற்ற அதிகாரங்கள் பயனற்றவை என்றும் கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை தான் இதுவும். உயிரினங்களின் DNA-க்களில் சில பகுதிகள் பயனுள்ள மரபணுக்கள் (coding DNA) என்றும், மிஞ்சியவை பயனில்லாதவை (Non-coding DNA or 'Junk' DNA) என்றும் எண்ணினர் ஆய்வாளர்கள்.
பயனுள்ள மரபணுக்கள் என்பவை, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை (Instructions) தன்னகத்தே கொண்டவை. ஆயிரக்கணக்கான புரதங்கள் ஒருங்கிணைந்து நம் உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன.

பயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது.

பார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - இத்தகைய கேள்விகள் எளிதாக எழ ஆரம்பித்தன.

நாத்திகர்களின் அறிவியல் சார்ந்த இறைமறுப்பு புரிதல்கள் நீடித்ததில்லை என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. குப்பை மரபணுக்கள் விசயத்திலும் அது தான் நடக்க ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களாக, இவற்றில் நடக்கும் ஆய்வுகள் இந்த மரபணுக்கள் குறித்த மிக வியப்பான செய்திகளை தந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குப்பை மரபணுக்கள் என்பவை சுமார் 540 மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களில் மாற்றமடையாமல் காணப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தது.

என்ன? 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளில் குப்பை மரபணுக்கள் இருந்திருக்கின்றனவா? இவை பயனற்றவை, குப்பை என்பதாக இருந்திருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகள் மாற்றமடையாமல் வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? - இம்மாதிரியான கேள்விகள் ஆய்வாளர்களை அசரடிக்க, நாம் அறியாத ஏதோ ஒரு முக்கிய பணியை இந்த மரபணுக்கள் நம் செல்களில் செய்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.

ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வை போலவே வேறு பல ஆய்வுகளும் மேற்கண்ட முடிவுக்கே வந்தன. முக்கிய பணியை செய்கின்றன என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், அது எந்தமாதிரியான பணி என்பதை தங்கள் ஆய்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை கூறினர்.

மொத்தத்தில், குப்பை மரபணுக்கள் குறித்த தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன.

பைனல் பஞ்ச்:

ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2 (Intron), LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா?

இவை என்ன தெரியுமா? இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Ooppss.....

இது அறிவியல் உலகை பிரம்மிக்க வைக்கும் ஒரு செய்தியே. காரணம், இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்?

ஆக, குப்பை மரபணுக்கள் குறித்த ஆய்வாளர்களின் முந்தைய புரிதல்கள் தவறு என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

'ஓகே. குப்பை மரபணுக்களில் சில பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் இன்னும் பல மரபணுக்கள் பயனற்றவையாக இருக்கின்றவே' என்று சிலர் கூறலாம். நேற்றுவரை இவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத மரபணு தொகுப்பு, இன்றோ இவற்றில் சில மிகவும் பயனுள்ளவை, அப்போ நாளை?

எப்போது குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவைகளில் சில, மிகவும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டு விட்டதோ, அப்போதே மற்ற (குப்பை) மரபணுக்கள் குறித்த எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யும் வழிமுறைகளை அவை திறந்து விட்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை நோக்கி அறிவியல் பயணிக்காது. அப்படி பயணித்தால் அது அறிவியலாக இருக்கவும் முடியாது.

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Sister Shameena (for helping out with French pronunciations)
2. Brother Mohamed Ashik and Sister Amina Mohammed (for content checking)

References:
1. Research team finds key to childhood brain disease lies in genetic junk - Medical Xpress. March 13, 2012. link
2. Under three layers of junk, the secret to a fatal brain disease - Discover magazine blog. March 12th, 2012. link
3. Transposons, or Jumping Genes: Not Junk DNA? - Nature Education. link
4. Barbara McClintock and the Discovery of Jumping Genes (Transposons) - Nature Education. link
5. 'Junk' DNA gets credit for making us who we are - New Scientist. 19 March 2010. link
6. 'Junk' throws up precious secret - BBC. 12 May 2004. link
7. "Junk DNA" - PSRAST.org. link
8. Difference Between DNA and Genes - Differencebetween.net. link
9. Noncoding DNA - Wikipedia. link
10. Genetics 101 Part 1: What are genes? - youtube. link
11. Genes & Chromosomes Part 1 - youtube. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Related Posts Plugin for WordPress, Blogger...