ஞாயிறு, மார்ச் 04, 2012

சில்வர் ஃபாயில் மாட்டின் குடல்களில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது



"சுத்த சைவம்"இது உயர்வகுப்பினர் பிற மக்களை ஏமாற்ற உபயோகிக்கும் ஒரு வார்த்தை.மக்களை சைவம்,அசைவம் என ஏமாற்றும்,இவர்கள் 'பொய்' எதனை நாட்களுக்கு செல்லுபடியாகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.இன்று நம் மக்கள் இனிப்பு வகைகள் என்றவுடன், இந்த "பவனிலோ"அல்லது அந்த "ச்வீட்சிலோ" வாங்குங்கள்,அவர்கள் சைவ வகுப்பினர், அசைவம் கலக்கமாட்டார்கள் என்ற கணிப்பும் தவறே!!!அவர்கள் நன்றாக தெரிந்தே இனிப்புகளில் மாட்டு கொழுப்பையும் குடலையும் சேர்க்கிறார்கள்.(அவர்களின் கொள்கை வாழ்க்கைக்கு ஒத்துவராது எனபது அவர்களுக்கே நன்றாக தெரியும்)அதைமாட்டு கொழுப்பு பொருளை ஆர்டர் செய்து வாங்குவது இஸ்லாமியர்களிடம்தான். (http://www.youtube.com/watch?v=f_gSNSwhTd4&feature=related)இனிப்பு வகைகள் நம் வாழ்வில் அடிக்கடி சாப்பிடவில்லை என்றாலும் எப்படியாவது மாதத்தில் ஒன்று அல்ல்து பல முறை சாப்பிடும் கட்டாயத்திற்க்கு தள்ளபடுகிறோம்.அது போல் ஸ்வீட் பீடா, கடையில், ஹோட்டலில் கொடுக்கும் வெத்திலை மடிப்புகள், சில சோம்பு வகைகள் பல முறை நாம் பார்த்திருக்கிறோம் வெள்ளி போர்த்தி வைத்த மாதிரி மினுமினு என்றிருக்கும்.ஆரம்பத்தில் இது வட நாட்டு ஸ்வீட் வகைகள் மட்டுமே இதை தாங்கி வரும். ஆனால் இப்பொழுது அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் வரை இந்த ஸ்வீட்கள் மேல் சில்வர் ஃபாயல். அது மட்டுமல்ல ஒரு காலத்தில் மில்க், கேஸுவ், பாதாம் பர்ப்பிகள் மீது தான் இந்த ஃபாயல் இருக்கும். ஆனால் இப்பொழுது குலோப்ஜாமூன், லட்டு, மைஸூர்பாக்கு போன்ற ஸ்வீட்கள் மேல் கூட இந்த ஃபாயல் இருக்கிறது.சரி இந்த ஃபாயல் எதிலிருந்து செய்யபடுகிரது தெரியுமா. இது வெஜிட்டேரியன்ஸ் மட்டுமல்ல ஹிந்துக்கள் பல பேரும் பீஃப் கறியை சாப்பிடாத காரணம் பசுவை கோமாதாவாக வணங்குவதால் தான். இந்த சில்வர் ஃபாயில் மாட்டின் குடல்களில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது. நான் வெஜ் சாப்பிடும் மனிதர்கள் கூட இந்த மாட்டின் குடலை சாப்பிடுவதில்லை.அடிமாட்டுக்கு விட்டவுடன் மாடை வெட்டி இந்த குடலை உடனே விற்றுவிடுவார்கள் காரணம் இந்த குடல் ஒரு நாளில் ரஃப்ஃபாக ஆகிவிடும் அப்புரம் அதில் உபயோகம் இல்லை. இந்த குடல்களில் இருக்கும் ரத்தம் மற்றும் சானி வெளியே எடுத்து சுத்தம் செய்த பிறகு சுத்தியலால் தட்டி ஷீட்களாக ஆக்கபட்டு பிறகு புத்தகம் போல அடிக்கி வைக்கபடுகிறது. பின்பு ஒரு சில்வர் அல்லது தங்க ஷீட்டை வைத்து ஆயிரக்கனக்கில் ஃபாயில் உருவாக்கிவிடுவார்கள். 160 ஷீட் கொண்ட ஒரு ஃபாயில் பன்ச் ரூபாய் 100 தான். அதாவது ஒரு ரூபாய்க்கும் குறைவுதான். அதுபோக ஒரு தட்டு ஸ்வீட்டுக்கு இரண்டு ஃபாயில் போதும். இந்த சில்வர் ஃபாயிலுக்கு பெயர் "வராக்" என்பதாகும். இது பிடாக்களின் மேலும் இதை உபயோகிக்கின்றனர். இதெல்லாம் இல்லை இது ஒரிஜினல் சில்வர் ஃபாயில் என வாதிட்டால் வெள்ளி விக்கிற விலைக்கு கிலோ 150 - 200 ஸ்வீட்ஸ்களில் ஃபாயில் ஒட்ட முடியுமானு கடைக்காரர்கள் கிட்ட கேளுங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்க்கலாம். வெள்ளிஃபாயிலாவது பரவாயில்லை தங்க ஃபாயில் ஸ்வீட்ஸும் அதே விலைதான். உண்மையை தெரிஞ்சுக்குங்க.அது "நான் வெஜ்" கடைசி டிப்ஸ் - பீடா கடைகளில் தடவும் ஸ்பெஸல் சுன்னாம்பு ஒரு வகை கடல் பூச்சிகள் தான் என்று ஜெயின் சமூகம் கூறுகிறது, இது கடலில் கிடைக்கும் ஒரு வகை பூச்சிகளை அந்த ஓட்டை பிரித்து வெயிலில் காயவைத்து பிறகு சுன்னாம்பில கலந்தால் ரோஸ் அல்லது காவி கலரில் வருமாம் இந்த சூனா என்ற வாசனை சுன்னாம்பு.இதுவும் நான் வெஜ்தான்.
— with Mohamed Shaik Dawood.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...