சனி, மார்ச் 03, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் பயணத்தில் 2

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளாக முஸ்லிம் அல்லாதவர்களும் நியமனம்...
வரவேற்க்கதக்க நல்ல ஆரோக்கியமான நியமனங்கள்...

அண்மையில் மமகவின் மாநில பொதுசெயலாளராக அன்பு சகோ.அன்சாரி
அவர்கள் நியமிக்கப்பட்டார். முஸ்லிம்களின் அரசியல் முன்னேற்றப்பாதையில்
பயணிக்க அன்சாரி அவர்களின் நியமனம் ஏகுவாக இருக்கும் என்று எம்மை போன்றோர்
மகிழ்ச்சிகொண்டோம்...

இதோ மமக தான் பயணித்த குறுகிய வட்டத்தை உடைத்துள்ளது பொதுவான
அரசியல் பாதைக்கு தன்னை தயார் படுத்தியுள்ளது... ஏற்க்கனவே எஸ்.டி.பி.ஐ
தனது மாநில நிர்வாகத்தில் திறன்மிக்க மற்ற சமூக மக்களுக்கும் அங்கீகாரம்
வழங்கியுள்ளது... இன்று மமகவும் மாநில நிர்வாகத்தில் மற்ற சமூக மக்களுக்கு
பொறுப்புகளை வழங்கியுள்ளது...

சகோ.அன்சாரி சிந்தனை வளமிக்கவர்... சிறந்த பாலியபருவ போராளி வெற்றிடமாகவே
பல்லாண்டுகாலமாக இருக்கும் முஸ்லிம்களின் அரசியல் களத்தை சீரமைப்பார் என்கிற நம்பிக்கை
மாற்றுகருத்துள்ளவர்களுக்கும் உண்டு... அவர் எடுத்துள்ள முதல் நியமனமே
அவர்மீதுள்ள நம்பிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளது... மாஷாஅல்லாஹ்

அவரது தலைமையில் மமக மிக வலிமையான அரசியல் பேரியக்கமாக பரிணமிக்க
வேண்டுமென மனதார இறையவனிடம் இறைஞ்சுகிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...