புதன், மார்ச் 28, 2012

யார் முட்டாள் ?

ஒரு கடைக்காரர் தன வாடிக்கையாளரிடம் கூறினார்,

''இதோ நிற்கும் பையன் சரியான முட்டாள்.நான் அதை உங்களிடம் நிரூபிக்கிறேன்.வேடிக்கை பாருங்கள்,''என்றார்.

பின்னர் அந்தப் பையனைக் கூப்பிட்டு,ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயத்தையும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு,''இதில் எது உனக்கு வேண்டு தம்பி,''என்று கேட்க அவன் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டான்.கடைக்காரர் வெற்றிப் புன்னகையுடன் வாடிக்கையாளரைப் பார்த்தார்.

வாடிக்கையாளர் கடையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பையன் எதிரில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.அவனிடம் அவர் கேட்டார்,''ஏன் தம்பி ஐந்து ரூபாயை எடுத்தக் கொள்ளாமல் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?'

'பையன் சொன்னான்,'எனக்கு எல்லாம் தெரியும்.ஏற்கனவே நான் பல முறை இதே போல இரண்டு ரூபாய் வாங்கியிருக்கிறேன்.நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால் இன்னொரு முறை இது போல செய்ய மாட்டார்.அப்போது எனக்கு நஷ்டம் தானே?

-படித்தது
By: பேகம் பானு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...