வியாழன், மார்ச் 29, 2012

ராஜபாட்டை

ஸாப், காஃபி!’
அப்பாஸ் பாய் காஃபிக்கோப்பையை மேஜையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்.

கோப்பையில் ஆவி பறக்கக் காத்திருந்த காஃபி என்னைப் பார்த்துச் சிரித்தது.

பதினாறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் காஃபி அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கு முன்பு வளைகுடா நாடுகளில் மட்டும் காஃபி பயிரிடப்பட்டு வந்தது. பாபா புடன் என்கிற இறைநேசர் தான் ஏழு காஃபி கொட்டைகளைக் கொண்டு வந்து முதன்முதலாக மைசூரில் பயிரிட்டார்.

கஃபே லேட், கஃபே மோச்சா, காபுஸினோ, ஐரிஷ் காஃபி, மச்சியாடோ, சோலார் எக்ளிப்ஸ், அஸ்டெக், பிளாக் காஃபி, எக்ஸ்பிரஸ்ஸோ, எத்தியோப்பியன்

-சென்னையில் காஃபி டே கடையில் கிடைக்கின்ற சூடான காஃபிகளின் பெயர்கள்தாம் இவை.

சில்லோ காஃபி, காபி நிர்வாணா, மோச்சா சில்லோ, கஃபே ஃபிராப்பே, டெவில்ஸ் ஓன், ஆல்டே ரிஃப்ரஃப்ரஷ்,டிராபிகல் ஐஸ்பெர் - சில்லென்று உறைக்கின்ற ஆறிப்போன காஃபிகளின் பெயர்கள் இவை.

எதற்காக இந்தக் காஃபி புராணம் என்கிறீர்களா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அலுவலுக்கிடையில் சற்றே இளைப்பாறும் போது அருந்தப்படுகின்ற பானம்தான் காஃபி. ஐந்து நிமிட உற்சாகப் பானத்திற்குத்தான் எத்தனை எத்தனை உழைப்புகள், முயற்சிகள்...! அதன் சுவையையும் மணத்தையும் திடத்தையும் கூட்டுவதற்காகத்தான் எத்தனை எத்தனை திட்டங்கள்..! சர்ச்சைகள்..!

காஃபி உற்பத்தியில் நம் நாடு ஆறாவது இடத்தை வகிக்கின்றது.

காஃபி மட்டுமல்ல, இன்று உணவு, உடை, வீடு, வாகனம், தொழில், தகவல்தொடர்பு, போக்குவரத்து, வணிகம் என அனைத்திலும் புரட்சிகரமான மாற்றங்களும் வளர்ச்சிகளும் முகிழ்த்துள்ளன.

வகைவகையான உணவுகள், உடைகள், வீட்டுக்கட்டுமானங்கள், வாகனங்கள், தொழில்கள் என அனைத்திலும் வகைகளும் அதிகமாகி விட்டன; வாய்ப்புகளும் பெருகிவிட்டன.

அவற்றையெல்லாம் தொகுப்பதற்கும் விவரிப்பதற்கும் இங்கு நேரம் இல்லை.

அதனால்தான் அந்தச் சாதனைகளிலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டாக முதலில் காஃபி குறித்து மட்டும் சற்றே விரிவாகச் சுட்டிக்காட்டிவிட்டேன்.


இங்கு ஒரு கேள்வி எழுகின்றது.

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம், வாகனம், தொழில், காஃபி இவை மட்டும் போதுமா? மனிதனின் அடிப்படைத் தேவைகள் இவை மட்டும்தானா?

மனிதனின் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் அவன் எத்தகையப் படைப்பு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு நீங்கள் அல்ஃபாரபியைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

அல்ஃபாரபி. யார் தெரியுமா?

இஸ்லாமிய அரலாற்றில் நீங்காப் புகழ்பெற்ற விஞ்ஞானிதான் அல்ஃபாரபி. கணிதம், அறிவியல், மருத்துவம், லாஜிக், சமூகவியல், உளவியல் எனப் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்.

இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற படைப்புகள் அனைத்தையும் நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார், அல்ஃபாரபி.

அவர் தம்முடைய ‘மராதிப் அல்மவ்ஜுதாத் ஃபில் ஸியாஸத் அல் மதீனா’ என்கிற நூலில் இதனைப் பதிவு செய்திருக்கின்றார்.
அவற்றின் விவரம் வருமாறு:

1. முதலாவதாக ‘அறிவும் ஞானமும்’ வழங்கப் பெற்றவை; ஆனால் ஆசை, கோபம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகாதவை. இறைவனின் புகழ் பாடுவதையும் அவனைத் துதிப்பதையும் அவனுடைய பெருமையைப் பறைசாற்றுவதையும் மட்டுமே அறிந்த படைப்புகள் இவை. குழப்பம் செய்கின்ற, கலகம் விளைவிக்கின்ற, இரத்தம் சிந்துகின்ற ஆற்றலோ, திறனோ, வல்லமையோ இம்மியளவு கூட இல்லாதவை.

இந்த முதல் வகை படைப்புகளில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்கள் வானவர்களே!

2. இரண்டாஅது வகை படைப்புகளுக்கு ‘அறிவும் ஞானமும்’ வழங்கப்பட்டிருக்கவில்லை. அதே சமயம் இந்தப் படைப்புகளுக்கு ஆசையும் கோபமும் அதிக அளவில் அருளப்பட்டிருக்கின்றன.

நன்மை, தீமை பற்றிய அறிவோ, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிகின்ற ஆற்றலோ இவற்றுக்கு அறவே இல்லை. ஆனால் வேட்கையும் வெறியும் இவற்றின் அடையாளங்கள் எனலாம். இந்த வகை படைப்புகளாக மிருகங்களைச் சொல்லலாம்.

3. மூன்றாவது வகை படைப்புகளுக்கோ ‘அறிவு, ஞானம்’ போன்றவையும் அருளப்பட்டிருக்கவில்லை. ‘ஆசை, வேட்கை, கோபம்’ போன்றவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எது நன்மை, எது தீமை எனச் சோதித்துப்பார்க்கின்ற கட்டாயமோ, ஆற்றலோ இவற்றுக்கு இல்லை. மோதல், போட்டி, கலகம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட படைப்புகள் இவை.

இந்த வகை படைப்புகளாகத் தணிஅரங்களைச் சொல்லலாம். உயிரற்ற பொருட்களையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

4. நான்காவது படைப்போ மேற்படி மூன்று வகை படைப்புகளை விடவும் மாறுபட்டது. தனிச்சிறப்பு மிக்கது. அதுதான் மனிதப் படைப்பு.

மனிதனுக்கு ‘அறிவும் ஞானமும்’ குறைவில்லாத வகையில் கொட்டித் தரப்பட்டிருக்கின்றன. மேன்மைமிக்க, தூய செயல்களில் ஈடுபடுகின்ற ஆற்றலும் தகுதியும் அவனுக்குப் போதுமான அளவுக்குத் தரப்பட்டுள்ளன. அதே வேளையில் இழிவான, கேவலமான செயல்களில் சறுக்கி விழுவதற்கான வாய்ப்பும் அவனுக்கு முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஆக, மனிதப் படைப்பின் உண்மைநிலையை அல்ஃபாரபி மிக அழகாகத் தெளிவுபடுத்திவிட்டார். என்றாலும் மனிதனின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு இந்தத் தெளிவு மட்டும் போதாதே என்கிறீர்களா? மேலே படியுங்கள்.

மனிதப் படைப்பின் சிறப்பையும் தனித்தன்மையையும் உணர்ந்துகொள்வதற்கும் அவனுடைய தேவைகளை அறிந்துகொள்வதற்கும் எத்தகைய மூலப்பொருட்களைக்கொண்டு அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதைக்கருத்தில் கொள்வது அவசியமாகும்.

படைப்பின் இரகசியம்:

மனிதன் முதன்முதலாகப் படைக்கப்பட்ட போது இறைவன் வானவர்களிடம் கூறினான்:

‘நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப் போகின்றேன்; நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால் அவருக்கு முன்னால் ஸுஜூது செய்யுங்கள்’ (38 : 71, 72)

இதிலிருந்து முற்றிலும் நேர் முரணாண பண்புகளைக் கொண்ட இரண்டு மூலப்பொருட்களைக் கொண்டு மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்துகொள்ளலாம்.

முதலாவதாக மண்: பொதுவாக மிகவும் கேவலமான பொருளாகப் பார்க்கப்படுவதுதான் மண். இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற அனைத்தையும் விட மிக அதிகமாக மிதிக்கப்படுகின்ற பொருளும் மண்தான். இந்தப் பூமியின் ஒரு பகுதிதான் மண். இதனால் மனிதனுக்குள் மண்ணின் விழைவுகள் பதியப்பட்டிருக்கின்றன. மண் அவனை தன் பக்கம் (வீழ்ச்சியின் பக்கம்) கவர்ந்து இழுக்கின்றது.

இரண்டாவதாக உயிர் : உயிர், ஆன்மா என்று சொன்னாலே உயர்வின் பக்கம் நம்முடைய கவனம் போகின்றது. தூய்மையான, மேன்மைமிக்க பொருள் பற்றிய சித்திரம் நம்முடைய மனக்கண்ணில் மின்னுகின்றது.

ஆன்மா எப்படி இருக்கும் என யோசிக்கின்ற போது வானத்தில் சஞ்சரிக்கின்ற பொருளாகத்தான் அது தோன்று கின்றது. இதனால் மனிதன் வானளாவிய வெற்றிகளை ஈட்டுவதில் பேரார்வம் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆக மனிதன் இரண்டு வகையான மூலப்பொருள்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் அவன் இரண்டு வகையான தேவைகள் கொண்டவனாக இருக்கின்றான்.

முதலாவதாக உலகியல் தேவைகள் (மூலப்பொருளாக மண் இருப்பதால்).

இரண்ட õவதாக ஆன்மிக தேவைகள். (மூலப்பொருளாக ஆன்மா இருப்பதால்)

இவ்விரண்டும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவன் நிறைவடைய முடியும். முழுமையடைய இயலும். இல்லாவிட்டால் அவன் அரைகுறை மனிதன்தான்.

உலகியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற ஆற்றலும் அறிவும் திறனும் வல்லமையும் மனிதனுக்கு நிறையவே தரப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டு மனிதன் சாதனைக்கு மேல் சாதனையாக சாதித்துக் கொண்டே வந்துள்ளான்.

‘பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்’ (62 : 10) என்றே இறைவன் கட்டளையிடுகின்றான்.

மனிதனும் இந்தப் பூமியிலிருந்து அருள்வளங்களைத் தேடியவாறு இருக்கின்றான்.

இந்தத் துறையில் அவன் ஈட்டியுள்ள சாதனைகளை இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

ஆனால் மனிதனின் ஆன்மிகத் தேவைகள் என்னென்ன? ஆன்மாவுக்கு நிம்மதி அளிப்பவை எவை? வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொண்டால் அது ஆன்மாவுக்கு இதம் தருவதாக அமையும் போன்ற கேள்விகளுக்கு மனிதன் விடை கண்டாக வேண்டும்.

ஏன் வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதும் அவசியம்.

God is dead என்று பிதற்றி தனி மனிதர்களின் சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து இருப்பியல் வாதம் (Existentilaism) பேசிய ஃபிரெட்ரிக் நீட்ஷே குழப்பத்திற்கும் மன நிறைவின்மைக்குமே வித்திட்டார்.

சிக்மண்டு ஃபிராடு, மாச்சியாவெலி, ஹெர்பர்ட்ஸ்பென்சர், ஜான் ரஸ்கிண், நீல்ஸ் போர், ஆல்பர்ட் காமஸ், ராபர்ட் பாயில், பெர்னார்ட் ரஸ்ஸல், லியோ டால்ஸ்டாய் எனத் தோற்றுப்போன தத்துவ ஞானிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

டார்வினிஸம், மெட்டிரியலிஸம், செக்குலரிஸம், ஸ்டாய்க்கிஸம், ஹிடோனிஸம், பாஸிடிவிஸம், ரிலேடிவிஸம், யுடிலிடாரியனிஸம், நிஹிலிஸம், எபிக்யூரியானிஸம், ஆல்ட்ரூயிஸம், ஹியூமானிஸம், கம்யூனிஸம், கேபிடலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், அப்ஸர்டிஸம், ஸப்ஜெக்டிவிஸம், அக்னாஸ்டிஸிஸம், டிடர்மினிஸம், ஃபாடாலிஸம், அனார்க்கிஸம் என இவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்களின் பட்டியல் அனாகொண்டா பாம்பைப் போன்று நீண்டுகொண்டே போகின்றது.

மனிதனால் மனிதனுக்கான வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக்கொள்ள முடியாது என்பதை மெய்ப்பிக்ணுன்ற பட்டியல் இது.

இந்த இஸங்கள் கூறுகின்ற செய்திகளையும் இவை முன்வைக்கின்ற கோட்பாடுகளையும் படிக்கும் போதும் அவற்றைப் புரிந்துகொள்ள முயலும்போதும் தலை சுற்றும். இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்த மனிதன் எப்படியெல்லாம் திக்குத் தெரியாமல், பாதை புரியாமல் தட்டுத்தடுமாறி தத்தளிக்கின்றான் என மனம் வலிக்கும்.

இதனைத்தான் இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

‘மேலும் கவிஞர்களையோ - வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும் தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?’ (26 : 224 - 226)

இந்தச் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

ஒருவர் மனிதனை வெறும் வயிறாகப் பார்த்தார் எனில், இன்னொருவர் அவனை வெறும் மூளையாகப் பார்த்தார்.

வேறொருவர் அவனைப் பிற உறுப்புகளாகப் பார்த்தார். இதனால் இவர்கள் வகுத்த வாழ்க்கைத் திட்டங்களும் வயிற்றை மையப்படுத்துகின்றவையாகவோ, பாலியல் உறவுகளை முன்னிறுத்துகின்றவையாகவோ பகுத்தறிவைத் தூக்கிப்பிடிக்கின்றவையாகவோ அமைந்து விட்டன.

ஒருவர் வாழ்வே மாயம் என்று உதறித்தள்ளினார் எனில், இன்னொருவர் வாழ்வதோ ஒருமுறை வாழுங்கள் இன்பமுடன் என்று தூக்கிக் கொண்டாடினார்.

ஒருவர் மனிதர்களை வர்க்கங்களாகப் பார்த்தார் எனில், இன்னொருவர் மனிதர்களைப் பாவிகளாகப் பார்த்தார்.

இதன் விளைவாக உருவாக்கப்பட்ட வாழ்க்கைத் திட்டங்களும் அந்த பார்வைக் கோளாறுகளின் பதிவுகளாயின.

இறைவனைப் பற்றிய இவர்களின் தீர்மானங்களும் வெவ்வேறானவை. சிலர் இறைவனே இல்லை என்றார்கள். சிலர் இறைவன் இருக்கின்றான்; ஆனால் அவனுக்கு மனைவி மக்கள், மாமன், மச்சான் என ஒரு பட்டாளமே இருக்கின்றது; அவர்கள் அனைவரும் இறைமைப் பண்புகளைத் தமக்குள் பங்கிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்கள். சிலர் இறைவனுக்கு ஒரு மகன் இருக்கின்றான் அந்த மகனுக்கு ஒரு தாயும் இருக்கின்றாள் என்றும் மூவருக்கும் இறைமையில் பங்கு என்றும் சொல்லி மூன்றில் ஒன்று என்கிற தியரியை முன்வைத்தார்கள். சிலர்

இறைவனுடன் அவனுடைய பங்காளிகளாக இரண்டு பேர் இருக்கின்றார்கள். ஒருவர் படைப்பார்; இன்னொருவர் அழிப்பார்; வேறொருவர் காப்பார் என்றார்கள்.

இதனால் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இவர்களாக வகுத்துக் கொண்ட வழிமுறைகளும் கோணலாகவே அமைந்துவிட்டன. கோணல்மாணலாக இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக அலைபாய்கின்ற இந்த எண்ணற்ற பாதைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாதை நேராக, சீராக, செம்மையாக மனிதனை சுவனம் வரை கொண்டு சேர்க்கின்றது.

மௌலானா அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் இதனை கருத்துச் செறிவுமிக்க வரை படத்துடன் விளக்குகின்றார்:

‘இறைவனின் உவப்பு வரை மனிதனைக் கொண்டு சேர்க்கின்ற இந்த நேர்வழியைத்தான் குர்ஆன் ‘ஸவாவுஸ் ஸபீல்’ - இராஜபாட்டை என்று அறிவிக்கின்றது.

இந்த உலக வாழ்விலிருந்து மறுமையின் இரண்டாவது வாழ்க்கை வரை போகின்ற எண்ணற்ற கோணல் வழிகளுக்கு நடுவில் இந்த இராஜபாட்டை நேரணிகக் கடந்து செல்கின்றது. இந்த இராஜபாட்டையில் எவர் பயணித்தாலும் அவர் நேர்வழியில் நடந்து இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்றுவிடுகின்றார். எவர் இந்த இராஜபாட்டையைத் தொலைத்து விடுகின்றாரோ அவர் இந்த உலக வாழ்விலும் தவறான திசையில் நடந்து தத்தளிக்கின்றார்; மறுமையிலும் நரகத்தில் போய் விழுந்துவிடுகின்றார். ஏனெனில் உலகத்தின் கோணல் பாதைகள்

அனைத்தும் நரகத்தில் தான் போய் முடிகின்றன.”

இந்த இராஜபாட்டை புலப்படாமல் போனாலோ, இதனைப் பற்றிய செய்தி தெரியாமல் போனாலோ மனிதன் விக்கித்துப்போகின்றான்.

இன்றும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், தொழில்நுட்பமும் வாழ்க்கை வசதிகளும் பெருகி விட்ட நிலையிலும் மனிதன் நிம்மதி கிடைக்காமல் தவித்துக்கொண்டிருப்பதற்கும் போகின்ற பாதை புரியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணம்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

இறைவழிகாட்டுதல்தான் ஒரே தீர்வு. இறைவன் தன்னுடைய தூதர்கள் மூலம் அனுப்பிய வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பதுதான் ஒரே தீர்வு.

மனிதனைப் படைத்த இறைவனே அவனுக்கு வழிகாட்டுகின்ற பொறுப்பையும் எடுத்துக் கொண்டுள்ளான்.

‘திண்ணமாக வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும். மேலும், உண்மையில் மறுமை, இம்மை ஆகிய இரண்டும் நமக்கே உரியனவாகும்.’ (92 : 13, 14)

இறைவன் இந்த வாழ்க்கைமுறை பற்றிய வழிகாட்டுதலை இறைத்தூதர்கள் மூலமாக அளித்து வந்துள்ளான். இன்னும் சொல்லப்போனால் முதல் மனிதரே இறைத்தூதராகவும் இருந்தார்.

இறைத்தூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்:

‘நாமே உம்மை நற்செய்தி சொல்பஅரணிகஅம், எச்சரிக்கை செய்பஅரணிகஅம் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை.’ (அத்தியாயம் 35 ஃபாத்திர்: 24)

இவ்வாறு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்தாம் அண்ணல் நபிகளார் (ஸல்). அண்ணல் நபிகளார்(ஸல்) எடுத்துரைத்த வாழ்க்கைத்திட்டம்தான் இஸ்லாம்.

இன்றைய உலகத்தின் அனைத்து பிரச்ணிக்கஈக்கும் தீர்வாக இருப்பதும் அதுதான். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகத் தாவித் தாவி அலைக்கழிக்கப்பட்டு வருகின்ற மனிதனுக்கு நேர்வழியாக (ஸவாஅஸ்ஸபீலாக) இருப்பதும் அதுதான்.
http://nenjodu.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...