பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?
இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?
இதோ பாருங்கள்;
http://www.youtube.com/watch?v=0o5CqTX70aw&feature=player_detailpage
அனுப்பியது; இறைநேசன்
அதிசயம்
(24)
அரசியல்
(21)
இஸ்லாம்
(80)
உடல் நலம்
(49)
எச்சரிக்கை
(16)
சமூக பார்வை
(84)
சொதப்பல்
(14)
பயனுள்ள-தகவல்
(12)
பெண்கள்
(49)
மருத்துவம்
(6)
வரலாறு
(9)
Comedy
(14)
Job opportunities
(13)
Technology
(8)
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், டிசம்பர் 05, 2011
திங்கள், நவம்பர் 21, 2011
பாபர் மஸ்ஜித் உன்மை வரலாறு
கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது. நன்றி;தமிமுன் அன்சாரி
post by.erainesan
; :
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது. நன்றி;தமிமுன் அன்சாரி
post by.erainesan
; :
லேபிள்கள்:
சமூக பார்வை,
வரலாறு,
Comedy
வெள்ளி, நவம்பர் 18, 2011
வரலாற்றுப் புரட்டு
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.
இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.
ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.
வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.
பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.
தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.
வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.
சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த நரசிம்ம பல்லவன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான், பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.
விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.
கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.
பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?
இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.
கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.
___________________________________________________
ஆதாரங்கள்:
சதாசிவ பண்டாரத்தார்,
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
மயிலை சீனி.வேங்கடசாமி,
குடவாயில் பாலசுப்ரமணியம்,
நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.
from>>http://www.vinavu.com
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.
இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.
ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.
வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.
பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.
தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.
வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.
சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த நரசிம்ம பல்லவன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான், பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.
விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.
கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.
பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?
இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.
கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.
___________________________________________________
ஆதாரங்கள்:
சதாசிவ பண்டாரத்தார்,
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
மயிலை சீனி.வேங்கடசாமி,
குடவாயில் பாலசுப்ரமணியம்,
நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.
from>>http://www.vinavu.com
லேபிள்கள்:
சமூக பார்வை,
வரலாறு,
Comedy
ஞாயிறு, நவம்பர் 13, 2011
ஒரு அறிய வாரலாற்றுத்தகவல்
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
கட்டுமான அமைப்பு
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).
இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.
சேரநாடு
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
நிலவை பிரிக்கும் அதிசயம்
மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.
அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.
இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றல்
தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).
அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.
இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."
இறப்பு
சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை
மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.
அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.
சில தகவல்கள்
சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
மேற்கோள்கள்
Video Referce : http://www.youtube.com/watch?v=BU2duvVicuI&feature=player_detailpage
a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
cheraman juma masjid- a secular heritage
A mosque from a hindhu king
Hindhu patron of a muslim heritage site
kalam to visit oldest mosque in sub-continant
2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem
நன்றி : http://ta.wikipedia.org/wiki/
thanks to www.nagoreflash.blogspot.com
இவன் ,
முஹம்மத் இக்பால்(Mohamed Iqbal Basheer Ahamed),
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம் (http://www.facebook.com/groups
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
கட்டுமான அமைப்பு
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).
இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.
சேரநாடு
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
நிலவை பிரிக்கும் அதிசயம்
மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.
அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.
இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றல்
தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).
அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.
இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."
இறப்பு
சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை
மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.
அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.
சில தகவல்கள்
சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
மேற்கோள்கள்
Video Referce : http://www.youtube.com/watch?v=BU2duvVicuI&feature=player_detailpage
a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
cheraman juma masjid- a secular heritage
A mosque from a hindhu king
Hindhu patron of a muslim heritage site
kalam to visit oldest mosque in sub-continant
2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem
நன்றி : http://ta.wikipedia.org/wiki/
thanks to www.nagoreflash.blogspot.com
இவன் ,
முஹம்மத் இக்பால்(Mohamed Iqbal Basheer Ahamed),
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம் (http://www.facebook.com/groups
வியாழன், அக்டோபர் 27, 2011
திப்பு சுல்தானின் வீரம் ! கட்ட பொம்மனையும் மீறும்!
மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:
" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:
ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!
நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த
மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!
அது தான் அந்த செய்தி!
அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,
அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.
மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:
"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:
திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.
தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:
" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".
மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க
http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=
- ராஜகிரி கஸ்ஸாலி அனுப்பிய மின் அஞ்சலில் இருந்து
" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:
ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!
நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த
மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!
அது தான் அந்த செய்தி!
அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,
அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.
மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:
"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:
திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.
தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:
" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".
மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க
http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=
- ராஜகிரி கஸ்ஸாலி அனுப்பிய மின் அஞ்சலில் இருந்து
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை!
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:
இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.
மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.
“விகடமிடுவோர்கள் குலகாலன் – வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் – நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:
“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).
இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ – பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்
இவன்;தமிழ் நேசன்
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:
இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.
மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.
“விகடமிடுவோர்கள் குலகாலன் – வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் – நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:
“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).
இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ – பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்
இவன்;தமிழ் நேசன்
சுடர் மளிகையில் ஒரு சொற்ப்போர
; :தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தஞ்சை மாவட்ட ஆட்சியரால் என்னை சிறைப்படுத்தப்பட்ட நாள் 9.8.1993
பழனி பாபா வயது - 43
சிறைவாசி எண் : 778 தற்காலிகமாக மத்திய சிறை, சென்னை. தாய் சிறை (Parent Prison) மத்திய சிறை திருச்சி - 20
ஆலோசனை மன்ற குழுவினர்
முன் நான் எடுத்துரைத்த வாதங்கள் நாள் 18.09.1993
குழுவின் தலைவர்: ஜஸ்டிஸ் ராமானுஜம் உறுப்பினர்கள் : ஜஸ்டிஸ்கனகராஜ் : ஜஸ்டிஸ் கிருஷ்ண சாமி
இடம்: சுடர் மாளிகை கிரீன் வேஸ் சாலை அடையாறு சென்னை - 600020
சுடர் மளிகையில் ஒரு சொற்ப்போர்
18.9.93 மத்திய சிறை சென்னை
தற்காலிகமாக
தேசிய பாதுகாப்பு சட்டம் 778
மத்திய சிறை திருச்சி. 620020
ஆலோசனை மன்றக் குழுவினரின் முன்
நீதிபதி அவர்களே.
நேற்று மாலை 2 மணிக்கு ஆயுதப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்டு 1 மணிவரை இடத்துக்கு அலைந்து பாழடைந்த? (Condemned Cell)செல் ஒன்றில் இரவு முழுவதும் கூவம் கொசுத் தொல்லையில் தூக்கமின்றி, காலை எழுந்து, தண்ணிர் தட்டுப்பாட்டில்,புதிதாக வந்த எனக்கு குளிக்கத் தண்ணீர் 2 வாளி வாங்கிக் குளித்து முடிய 12 மணி ஆனது உடனே புறப்பட்டு இந்தச் 'சுடர்' மளிகைக்குள் வந்து நிற்கிறேன்.
நேற்று 3 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி இரவு 10.45 மணிக்கு சென்னைக்கு கொண்டு வந்து என்னை அரசு நிறுத்தி உள்ளது. கேவலம் அடிமாடு வியபாரி கூட வழியில் கொண்டு செல்லும் கால்நடைகளுக்கும் தண்ணிர் காட்டுகிறார்கள்.
அதைவிட மிருகத்தனமாக ஒரு SPECIAL CLASS PRISONERஐ நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நான் உங்கள் முன் என் வாதத்தை எடுத்து வைக்க நிர்ப்பந்தபடுத்தப்பட்டுள்ளேன்.
மேலும், அரசுக்கு 200க்கும் மேற்பட்ட விளக்கங்களைக் கேட்டு நானும் எனது வழக்கறிஞர்களும் விடுத்த பல நோட்டிஸ்களுக்கும்-அதில் பலவற்றிற்க்கு, நேற்றுமாலை 2மணி வரை சுமார்-
23 Telex Messages
13 Fax Messages
16 Wire Messages
23 Telegraphic Messages
10 Speed Post
12 Special Messages Post
என கடைசி நிமிடம் வரை தந்துள்ளது. பலவற்றிற்கு பதிலே காணவில்லை. இன்றுகூட 12 பக்கம் Fax செய்தியை காலை 11.30க்கு சென்னை சிறையில் தந்துள்ளது.
இவைகளை எல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம், இம்மனுக்களில் பல மனுக்கள் நான் சிறைப்பட்ட மறு வாரத்தில் அனுப்பப்பட்டவைகள் ஒரு மாதம் தூங்கிவிட்டு இப்போது படு சுறுசுறுப்பாக ஜெட் வேகத்தில் தன்கடமை உணர்வு பொங்க அரசு இவைகளை அனுப்பி உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசி வரியில் மனுதாரர் ஆலோசனை மன்றக்குழுவிற்கு அனுப்பும் மனுவிற்கு வலுவூட்டவே (Effective Reprcsentation) சக்தி வாய்ந்த பிரதி வாதங்களுக்கு உதவியாக இச்செய்திகள் வழங்கப்படுவதாக கூறி உள்ளது.
நடுவர் அவர்களே! இது கொக்குக்கு நரி விருந்து வைத்த கதையாக உள்ளது
சகல சௌகரியமும் உள்ள அரசுக்குப் பதில் அளிக்க ஒரு மாதத்திற்கு மேல் அவகாசம் தேவையாம். ஆனால் உரிமைகள் முடக்கப்பட்டு- ஒரு பேப்பருக்குக் கூட விண்ணப்பித்து மறுநாள் தான் பெறவேண்டிய நிலை சிறைவாசியினுடைய நிலை. நான் எதோ அரசு சுகபோக மாளிகையின் அந்தப் புறத்தில் இருப்பதாக அரசு எண்ணிவிட்டது.
ஒரு மாதம் இவர்களுக்குத் தேவையாம் எனக்கு ஒரு மணி நேரம் கூட அவகாசம்மில்லை. இது என்ன நியாயம் Social Justice- சமுக நியாயம் தர்மம் இல்லையா? இருதரப்புக்கும் சம வாய்ப்பளிப்பது தான் சட்டநிதி (legal Justice)- சிறையில் எழுத ஒரு பேப்பர் வேண்டுமானால் ஹெட்வார்டர் ( H.W) மூலம் சொன்னால் அவர் சிப்-வார்டரிடமும் (Chief Warder)பின் Chief Head ward-Asst Jailor-Deputy- Additional Suptd, பின் Superintendent என தொடர்ந்து பின் R.Tக்கு ஆர்டர் கிட்டி கையெழுத்தாகி அதே மாதிரி மேலிருந்து கிழாக ஒரு சுற்று சுற்றி இன்ஷியாலிட்டு என்னிடம் வர ஒருநாள், சில நேரம் 2 நாட்கள் கூட ஆகிவிடும். இந்த தலைமை செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் சிறை Manual லின் அட்டையை கூடப் பார்த்திருக்கமாட்டர்கள்.
I A S முடித்ததும் அப்படியே டிரையினிங் செல்லும் இவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது சிறைத்துறையிலும்.சிறையினுள்ளும் ஒரு சிறைவாசியாக இருந்தால் தான் இவர்களுக்கு அதன் கஷ்ட நஷ்டங்கள் புரியும்.
தற்போது என் நிலை வழக்காட சாதகமாக உள்ளது. எனக்கு போதுமான அவகாசம் தரப்படவில்லை என்று ஒரே வரியில் ஒரேநாளில் மனுமூலம் விடுதலை பெற இயலும் என்பதை பலவருடம் உயர்நீதி மன்றத்தில் இருந்த உங்களுக்குப் புரியாத ஒன்றல்ல, ஆனாலும் அப்படி சட்டத்தின் ஒட்டைகளைப் பயன் படுத்தி நான் விடுமுறை பெற எண்ணுவது, என் மாதிரி சமுக அந்தஸ்த்தும் பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையான நடத்தையும் கொண்ட என் போன்றவர்க்கு அது ஒரு மோசமான முன் உதாரணமாகிவிடும். புறம் தாக்குதலுக்குச் சமம். அது ஒரு Hyprocrate நயவஞ்சக வழியாகிவிடும். அது என் நேரிய குணத்திற்கு இழுக்காகிவிடும். எனவே பிரச்சனைகளை நேரில் சந்திக்க- டெக்னிக்கல் கிரவுண்ட்ஸில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். எனக்குப் போதுமான அவகாசம் தர வேண்டுகிறேன்.
நீதிபதி கனகராஜும், நீதிபதி ராமானுஜமும் ஒத்துக்கொண்டனர். ஆனால் கிருஷ்ணசாமி என்ற R.S.S. அனுதாபி அவகாசம் அளிக்க இயலாது நீங்கள் 15.08.93 அன்றே குற்றச்சாட்டுக்களைப் பெற்றுக் கொண்டிர்கள் அப்போது முதல் படிக்காமல் என்ன செய்தீர்கள்? என்றார்.
நல்ல கேள்வி நீதிபதி அவர்களே 15.08.93 அன்று தந்த 300 பக்கக் குற்றச்சாட்டுகள் ஒரு முழுநாவல் அல்ல ஒரே முச்சில் படிக்க சிறையில் பரபரப்பு பகலில், இரவில் நிசப்தம் ஆனால் இரவில் என் 'செல்' லில் விளக்கு இல்லை. அதனால் தனியாக ரிட் போட்டு உள்ளேன் அது பெண்டிங்கில் உள்ளது. இதோ அதன் நகல்
அடுத்து அதை நான் படிக்க எனக்கு நேரத்தை ஒதுக்கி நன்கு படித்த பின்னர் அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அரசுக்கு பல மனுக்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டும் படிக்கும் போதும் ஏற்படும் நியாயமான குறைபாடு மற்றும் சந்தேகங்களை கேட்டு மனு அனுப்பினேன்.
உதாரணமாக 09.08.93 அன்று திருவையாற்றில் இரு சாராரும் தட்டிகளை வைத்தனராம்
முஸ்லிம்கள் இந்துக்களை வெட்டுவோம் என்றும், இந்துக்கள் முஸ்லிம்களை வெட்டுவோம் என்றும் தட்டி வைத்தனராம்.
முஸ்லிம்களின் தட்டிக்கு என்னைக் கைது செய்த நீதிபதி (கலெக்டர்) மாவட்ட நீதிபதி, இந்துக்கள் வைத்த தட்டிக்கு யாரைக் கைது செய்தார்?
இது நியாயமான கேள்வி. அதை எழுதி அனுப்பினால் இன்று காலை தான் தகவல் தருகிறார் யாரையும் கைது செய்யவில்லை என்று நான் எப்படி எழுத்து மூலமான பதிலைத் தயாரிப்பது?
மெளனமாகினர்
பின்னர் கேட்டார், 'இப்போதைக்கு உங்கள் வாதம் என்ன?'
கனம் நடுவர் மன்ற நீதிபதி அவைகளே! 70 ஆண்டுகள் திருவையாற்றில் தொழுத மசூதியை இடித்தது அரசு, அதைத் தட்டிக் கேட்டது தவறு என்றால் நான் குற்றவாளியாவதில் தவறில்லை மசூதி இல்லாது முஸ்லிம்களின் வாழ்வு உரிமை இல்லை. இதை வலியுறுத்தியது குற்றமானால் நான் குற்றவளியே!
சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் தந்தது ஒரு பெரிய குற்றமென்றால்...... அக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வேன்.
என் வழிபாட்டு உரிமை முடக்கப்படும் போது நான் வாதிட்டதும் பயனின்றி வாளேடுக்க வேன்டியது தான் வழி என்றால், அதனால் என்மீது வழக்கென்றால், மீண்டும் மீண்டும் வாளெடுப்பேன்.
அதற்கு தூக்கு தான் தண்டனை என்றால் என் வாழ்வுரிமையை விட, என் வாழ்வு எனக்குப் பெரிய ஒன்றல்ல.
I PLEAD GUILTY
மகாமகத்தன்று 100 பேர் செத்ததற்கு ஏ.ஜி. தான் காரணம் என்று முதலமைச்சர் சொல்ல,
இல்லை ஜெயலலிதா குளிப்பதைக் காணத்தான் வந்ததால் கூட்ட நெரிசல் என்று மாற்றி மாற்றிப் பழி போடப்பட்டது. பலியானவர் 100க்கும் மேல். காயமுற்றதோ ஆயிரக்கணக்கில்- பொது அமைதி கெட்டது. சட்டம் ஒழுங்கு (Law & Order) கெட்டது.
அப்போது இதே கலெக்டர்- இதற்கு காரணமானவர்களை- 100 பேர்களின் சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்ய அக்கறை காட்டவில்லை. இந்தியத் தேசீயத்தின் மீது இவருக்குப் பாசம் பொங்கி எழவில்லை. ஒரு தவறும் நடை பெறாதபோது என்னை மட்டும் தேசீய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன் படுத்தி கைது செய்யத் துடியாய்த் துடிக்கும் இம்மாதிரி ஜாதிவெறி பிடித்த கலெக்டர்களுக்கு எதிராக போராடுவது இந்த நாட்டில் மரணதண்டனைக்குரிய குற்றமென்றால், மானம் இழந்து வாழும் வாழ்வை விட மரணம் மேலானது-அக்குற்றத்தை பலமுறை செய்வேன் செய்தேன்!
'எங்கள் மார்க்க உரிமைகளுக்கு மரணம் தான் தண்டனை என்றால் எங்கள் மார்க்கத்தை விட வாழ்வு உயர்வான பொருட்டல்ல.'
அச்சுறுத்தலால் எங்கள் ஜீவாதார உரிமைகளை அடக்கி விடலாம் என அரசு அதிகாரிகள் கருதுவார்களேயானால் அச்சுறுத்தலை அவமதிப்பது என் உரிமையாகிவிடும்.
அடக்குமுறையினால் என்னுடைய நியாயமான உரிமைகளை முடக்க நினைத்தால் நான் அதை எதிர்த்து வாழ்வு பூராவும் போராடக் கூட தயங்க மாட்டேன். அதற்கான ஆயுத்தங்களை செய்து வைக்க நான் முனைவது குற்றம் என்றால்-
'I PLEAD GUILTY'
மதச்சார்பற்ற நாட்டை 'இந்து நாடு' ஆக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதை அடித்து நொறுக்கி நாட்டின் பழம் பெருமையை காப்பேன்...... அது குற்றமென சொல்லப்பட்டால்-
' I PLEAD GUILTY OF THAT' SO CALLED CRIME FOR SEVERAL TIME AND SEVERAL MORE TIME'
ரதயாத்திரையின் பெயரால் ரத்த ஆறு ஒட விட்டவனுக்கே பாதுகாப்பு. ஏனையேர் அடங்கிப் போக வேண்டும் என்றால் ரத்த நிறத்தை மாற்றி ஒட்ட எண்ணுவது தவறில்லை. என் மக்கள் சிந்திய ரத்தத்திற்கு யாரிடம் நான் நியாயப் பழி தீர்ப்பது என்பதை இந்த ஆலோசனை மன்றக்குழு எனக்கு ஆலோசனை சொல்ல முடியுமா?
அல்லது அரசுக்கு அப்பழி செய்தவனை ARREST செய்ய பறிந்துரைக்குமா?
அதைச் செய்ய எந்த அமைப்பு உள்ளது?
கடந்த 45 ஆண்டுகளில் இமயம் முதல் குமரி வரை முஸ்லிம் பெருமக்களில் தாலி இழந்தவர், உற்றம் இழந்தவர்,உறவுகளை இழந்து ரத்த சேற்றிலெ மிதந்தவர் 4.5 லட்சமெனப் பாராளுமன்றப் புள்ளி விவரம் தரப்படுகிறதே!
அதற்கு காரணமான RSS வகையறாக்களை கைது செய்ய வக்கற்ற சட்டமும், அரசும் என்னைப் பொறுத்தமட்டில்..........
மன்னிக்க வேண்டும் நீதிபதிகளே!
உங்கள் நடுவர் மன்றம் உட்பட செருப்புக்குப் சமமானவர்களே......!
இது பாதிக்கப்பட்டவனின் மனப் புண்ணிலிருந்து கசியும் இரத்தம் வடியும் ரணக் காயங்களின் பிரதிபலிப்புகள்
மீண்டும் நாகரீகம் கருதி 4.5 லட்சம் அப்பாவி மக்களைப் பறிக்கொடுத்த இனத்தில் ஒரு சதை துண்டு துடித்ததால் என் இதயம் கக்கிய தவறான வாசகம்.
அதற்கு மாற்று இல்லாததால் அதைச் சொன்னேன் - வருத்தத்துடன் தான். அதனைவிட எளிய பதம் எனக்கே கிட்டவில்லை. என் பாதிப்பின் ஆழம் காட்ட, என் காயத்தின் வேதனைக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியவில்லை வருந்திதான் சொன்னேன்.
'மன்னிப்புக்கு இங்கு இடமில்லை'
'பாபர்மசூதி இடிபட்டதும் நான் தான் விலங்கிடப்பட்டேன்!
RSS ஆபிஸ் இடிபட்டதும் நான் தான் கடுங்காவலில் வைக்கப்பட்டேன்
இனி சீன நெடுஞ் சுவர் இடிக்கப்பட்டாலும் இந்த அரசு என்னைத்தான் கைது செய்யும்.
இதன் நச்சு எண்ணத்தை முறியடிக்க மக்களைத் திரட்டி நியாயம் சொல்லி நியாயமான பாரபட்சமற்ற ஒரு அரசை நிர்மாணிக்க என்ணியது தேசீய குற்றமென்றால், அந்த குற்றத்தை நீங்கள் விடுவித்த மறு நாளே மீண்டும் செய்யத்தான் செய்வேன்.
மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவும், மனித நேய அமைப்புகளுக்குச் சிறை வாசமும் தான் அரசின் அன்றாட அணுகு முறையாக உள்ளது வரை என் மாதிரி அமைப்புகளை தீவிரப்படுத்தும் கட்டாயத்தில் தான் நான் மீண்டும் மீண்டும் உள்ளாக்கப்படுவேன்.
25 கோடி இஸ்லாமிய மக்களுக்கு அரசுப் பதவிகளில் 1 சதவிகிதமே இடஒதுக்கிடு உள்ளது. மீதி 24 சதம் கிடைக்கும் வரை ஒரு இயக்கம் நடத்தி போராடுவது இயல்பு, மரபு.
ஒதுக்கப்பட்டு, ஒரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு எம் மக்கள் பிழைப்புரிமை தேடி பிற நாட்டில் வாழ பெற்றத்தாய், உடன்பிறந்த சகோதரர்கள் உள் நாட்டில் வாட நிரந்தரப்பிரிவில் நித்தம் எங்களது வீடுகளில் கண்ணிர் சுமை.
இதனிடையே காவலில்லா வீடுகளில் கடி நாய்கள் போல் சூறையாடும் கூட்டத்திற்கு போலிஸ் துணை நிற்பதை கண்டு பதைபதைத்த உள்ளத்துடன் என்னரும் பெண்டிரை, இளம் சிறாரை நான் காக்க எண்ணியே ஒரு இயக்கம் ஆரம்பித்தேன். அதைக் குற்றம் என்று இந்த அரசு சொன்னால், அத்தகைய குற்றவாளியாக நானிக்கப் பெருமைப்படுகிறேன்.
இந்து மத இழிவிலிருந்து விடுபட்டு சமத்துவ, சாந்தி, சகோதரத்துவம் தேடி இஸ்லாமை இறக்குமதி செய்து எங்களளவில் ஒதுங்கி எங்களுக்குள் ஒன்றுபட்டு யாருக்கும் தீங்கற்று, தீண்டாமை குணமற்று ஒரே குலமாய், ஒரு தாய் மக்களாய், வாழும் சீரிய மனித நேய மார்க்கத்தினை பேணி ஒழுகும் எங்களை, பிளவு பிரிவுகளையே மதக் கோட்பாடாக, பிறப்பு, நிற வேற்றுமை காட்டும் அடிப்படை கொண்ட, பண்டைய திராவிடத்தை பிளந்து கூறு போட்டு பாகுபடுத்தி, பாழ்படுத்தி, பிளவுபடுத்தி, இழிவுபடுத்திய அதே சனாதன பாம்புகளுக்கு நாங்கள் பணிந்து போக, சில அரசு அதிகாரிகள் எங்களை சட்டம் என்ற இரும்பு கரத்தால் ஒடுக்க நினைத்தாலும், அடக்க எண்ணினாலும் அதை எதிர்த்துப் போராடி எங்கள் மனதுக்கேற்ற மார்க்கத்துடன், மானத்துடன், மாண்புகளுடன், மரியாதைகளுடன், மனித நேயத்துடன் வாழ நினைக்கும் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முறியடிப்பது, தடுத்து நிறுத்துவது, தட்டிக் கேட்பது தவறு என்றும் தண்டணைக்குரிய பாவம் என்றும் கருதினால் அந்தப் பாவியாக நான் இருப்பதில் தவறில்லை.
' நான் மட்டுமே வாழவேண்டும் என்று கேட்கவில்லை. நாங்களும் வாழ வேண்டுமென்று இயங்கியது தவறு என்றால், தண்டணை எதுவானாலும் அதற்கு அஞ்சிடப் போவதில்லை.'
எங்களை ஒரு தேசிய இனமாக கருதாத எந்த ஒரு அரசையும், எந்த ஒரு சட்டத்தையும், எந்தக் கோர்ட்டையும், எந்த ராணுவத்தையும் எதிர் கொள்வது எமது உயிருக்கு ஆபத்து என்றாலும் கூட எதிர்கொள்வோம்.
' கள்ளிச் செடியில் மலராய் இருப்பதைவிட ரோஜாச்செடியில் முள்ளாய் இருப்பது மேலானது.'
' கோழையின் தலைக்கிரீடமாய் இருப்பதைவிட வீரனின் கால் செருப்பாய் இருப்பது மேலனது.'
"A DEAD LION IS BETTER THAN LIVING DOG"
ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கங்கள் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமே குவிந்துள்ளதால் மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் மாடுகளை விடக் கேவலமாய் நடத்தப்படுவதைக் கண்டு மனம் குமுறி மாற்று வழி கானாது, மன்றாடிப் போராடாது நான் மாண்டு விட்டால் நாளைய என் வாரிசுகள் என்னை மன்னிக்கமாட்டார்கள்.
உங்கள் மன்னிப்பை விட உருவாகப் போகும் வீர சமுகத்தின் மன்னிப்பே எனக்குப் பெரிய ஒன்று. இந்த நீதி மன்றம் என்னைத் தண்டிக்கலாம்.
ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும்!
வருங்காலம் வஞ்சம் எடுக்கும் என் சார்பாக!
இன்றைய சிறை வாசங்கள் நாளைய தலைமுறையின் சிம்மாசனங்கள்.....
சுதந்திர இந்தியாவிலுள்ள ஜாதிக் கலவரங்களுக்கு காரணம் இஸ்லாமா? இந்து மதத்தின் வர்ணா சக்திகளா?
மதக்கலவரங்கள் மட்டுமே 70 ஆயிரம். 40 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் இது நடைப்பெற காரணம் RSS அமைப்பு என்பது அரசின் புள்ளி விவரக் கணக்கு.
விழுப்புரம்,மண்டைக்காடு,ஆம்பூர்,தம்மம்பட்டி,ஆத்தூர்,சேலம்,வாணியம்பாடி,கோவை,தக்கணிக்கோட்டை, களத்தூர்,திண்டுக்கல், தேங்காய்ப்பட்டிணம், குளச்சல், காயல்பட்டினம், கடைய நல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, அருப்புக்கோட்டை, செஞ்சி, உளுந்துர்பேட்டை, நாகூர் என்று தொடர் கலவரங்களுக்கு காரணம் RSS
ஒரு RSS காரனையாவது, என்றாவது இம்மாதிரி தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனரா? மாறாக அடிபட்ட முஸ்லிம்களையே கைது செய்து அபலைப் பெண்களாக என் மக்களை அச்சுறுத்துவது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வாடிக்கையாய் போனது.
கடலங்குடி, ஐயம்பேட்டை, திருவையாறு போன்ற இடங்களில் மசூதி கட்டத் தடை. அதே நேரம் கேவலம் குரங்கு இன அனுமனுக்கு கூட கோவில் கட்ட அனுமதியின்றியே அரசு பாதுகாப்பு இதை ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.
அதை எதிர்த்தால் தேசத்திற்கே ஆபத்து வங்துவிடுமாம். என்ன கேலிக்கூத்து இது? இதற்கு ஒரு 'குடிமகன்' கட்டுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அக்கட்டுப்பாடுகளை கடுங்காவல் சிறைகளை கறுப்பு சட்டங்களை அடக்கு முறைகளை, ஒடுக்குமுறைகளை ஒரவஞ்சனைப் போக்குகளை பாரபட்சமான நடவடிக்கைகளை, எதிர்த்துப் போராடாது இருப்பது மானம் கெட்டவர்கள், சுரணையற்றவர்கள் என்ற அவப் பெயரை எங்கள் வாரிசுகள் எங்களுக்குச் சுட்டி விடுமுன் அவைகளை எதிர்த்துப் போராடுவது என் ஜீவாதார உரிமைகளுக்கு என் உயிரினும் மேலான மார்க்கத்திற்கு நான் செலுத்தும் உயிர்க் காணிக்கை.
'வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது என் இனமாக இருக்கட்டும்.'
என சத்திய சபதமேற்று சன்மார்க்க வழி தவறாது வாழும் ஒருவன் நான் எனவே இதுபோல் பல நீதி மன்றங்களின் முன் நிறுத்தப்பட்டவன் - நின்றிருப்பவன் - இனியும் நிறுத்தப்பட போபவன்... எனவே எள் முனை அளவு கூட நான் விட்டுக் கொடுப்பதற்கு இல்லை.
இது ஒரு வழக்கு என்ற கோணத்தில் இதைக்கானாது, ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமையாக இருக்கிறது எனக்கருதி எனக்கு மீண்டும் வாய்பினைத்தந்து என் வாதங்களைக் காரணங்களுடன் Grounds of detention உடன் ஒன்றிப்போன மறுப்புகளுக்கு மறுவாய்ப்புத் தரவேண்டும்.
(இடையே குறுக்கிட்ட கிருஷ்ணசாமி நீதிபதி)
' நீங்கள் Grounds of detention க்குள் பேசாது வேறு ஏதோ தேவையில்லாதவை பேசுகிறீர்கள்' என்றார்
உடனே இடைமறித்த நான் -
உங்கள் வழக்கிற்குத் தேவையற்றதாக இருக்கலாம், ஆனால் வரலாற்றிற்கு என் இன மக்களின் வருங்கால வாரிசுகளுக்கு இவை தேவையான ஒன்று, எப்படிப்பட்ட சூழ் நிலையில் எப்படிப்பட்ட பாரபட்சமான அதிகார துஷ்பிரயோகத்தில் நான் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் குழந்தைகள் வளரும் போது கண்டு கொள்ள வேண்டும்.
' கொள்ளையடித்தேனா-
கொலைசெய்தேனா-
கற்பழித்தேனா-
களவாடினேனா-
எதற்காக 125வது முறையாக நான் சிறைப்படுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் விளக்கங்களுடன் நீங்கள் கேட்டே ஆக வேண்டும் அவற்றைப் பதிவு செய்தாக வேண்டும். என் முழு உரை கேட்கத்தான் நீங்களே ஒளிய முட்டுக்கட்டை போடுவத்ற்கு அல்ல. அப்படி முட்டுக்கட்டை போடுவேன் என்று இந்த நடுவர் மன்றம் கூறுமானால் நான் வெளி நடப்பு செய்ய வேண்டி வரும்'
தலைவர் நீதிபதி ராமானுஜம் உடனே-
NO..NO.. PROCEED
என் சொல்ல மீண்டும் தொடர்கிறேன்.
' எனக்கு தரப்பட்ட அவகாசம் குறைவு அதுமட்டுமல்ல, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இரவுப் பயணம் களைப்பு இவற்றினூடே முழுமையாக என்னால் எதையும் எடுத்து வைக்க இயலவில்லை. எனவே ஒன்று மறு தேதிக்கு ஒத்திப் போடுங்கள் அதுவரை சென்னைத் தலை நகர் சிறையிலிருக்க அனுமதி தாருங்கள்.
அத்துடன் 2 Interview என் மகளுக்கு அனுமதி தாருங்கள் அவள் மூலம் எனது வழக்கறிஞரிடம் உள்ள பல ஆதாரங்களை அரசு தபால்களை பெற வேண்டும், அவற்றை படிக்க Cell யில் விளக்கு வசதி, எழுத பேப்பர், அதற்குரிய சாதனங்கள்.....
அதற்கு அதிகபட்ச நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் என்னை சிறைப்படுத்திய 50 நாட்களுக்குள் அரசுக்கு உங்கள் தீர்ப்பை தரவேண்டும். எனவே குறைந்த பட்சத்தில் தந்தால் சுருக்கமாகவாவது என் பதிலை தயாரிக்க எனக்கு முடியும்'.
' சரி.. 22.09.93ந் தேதிக்கு சரிப்படுமா?- என்றனர்.
கனம் நீதிபதி அவர்களே
5 நாள் இருப்பது போல் தோற்றமே தவிர வேறில்லை. இன்று சனிக்கிழமை மாலை 6 மணி ஆகிவிட்டது.
இனி சிறைக்குச் சென்று Admission லாக்கப் என 9 மணி ஆகிவிடும். இருக்கும் களைப்பில் உறக்கம் தான் வரும்.
நாளை ஞாயிறு சிறை விடுமுறை நேர்காணல் கிடையாது.
20ந் தேதி நீங்கள் என் மகளை வரவழைக்கத் தந்தி அனுப்பி வந்தபின் மாலை சொல்லியனுப்பினால், மறு நாள் 21.09.93 மாலைதான் அவள் கொண்டு வருவனவற்றை வைத்து இரவு முழுக்க எழுதி 22.09.93 காலை உங்களிடம் சமர்பிக்க முடியும்- எனக்கு படிக்க 8 மணி நேரம் எழுத 4 மணி நேரம் தூங்க 12 மணி நேரங்களே ஒதுக்கி உள்ளீர்கள் ஆனால் மேலோட்டமாக 5 நாள் கணக்கில் வரும். அது சிறைவாசிக்கு சிலமணித்துளிகளே!.
' அதற்கு மேல் தர இயலாது பாபா' - என்றனர்.
' சரி என்னால் முடிந்த அளவுக்கு நான் முழுமையான பதிலை எழுதி வருகிறேன்'.
கைகுலுக்கும் போது கனகராஜ் கண்கள் கலங்க
நீதிபதி ராமானுஜம் கனிவுடன் நோக்க
கிருஷ்ணசாமி கடுப்புடன் செல்ல..............
7 மணிக்கு விடை பெற்று சிறைக்கு வந்து - அதன்பின் மறு நாள்தான் பைல்களைப்படித்து பதிலை தயாரித்துக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் கொண்ட எழுத்து மூலமான பதிலை- 22.09.93 அன்று தயாரிதேன்.
அதன் நகலை எடுத்து அனுப்பி உள்ளேம். 23.09.93 அன்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன்.
From
Erainesan
பழனி பாபா வயது - 43
சிறைவாசி எண் : 778 தற்காலிகமாக மத்திய சிறை, சென்னை. தாய் சிறை (Parent Prison) மத்திய சிறை திருச்சி - 20
ஆலோசனை மன்ற குழுவினர்
முன் நான் எடுத்துரைத்த வாதங்கள் நாள் 18.09.1993
குழுவின் தலைவர்: ஜஸ்டிஸ் ராமானுஜம் உறுப்பினர்கள் : ஜஸ்டிஸ்கனகராஜ் : ஜஸ்டிஸ் கிருஷ்ண சாமி
இடம்: சுடர் மாளிகை கிரீன் வேஸ் சாலை அடையாறு சென்னை - 600020
சுடர் மளிகையில் ஒரு சொற்ப்போர்
18.9.93 மத்திய சிறை சென்னை
தற்காலிகமாக
தேசிய பாதுகாப்பு சட்டம் 778
மத்திய சிறை திருச்சி. 620020
ஆலோசனை மன்றக் குழுவினரின் முன்
நீதிபதி அவர்களே.
நேற்று மாலை 2 மணிக்கு ஆயுதப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்டு 1 மணிவரை இடத்துக்கு அலைந்து பாழடைந்த? (Condemned Cell)செல் ஒன்றில் இரவு முழுவதும் கூவம் கொசுத் தொல்லையில் தூக்கமின்றி, காலை எழுந்து, தண்ணிர் தட்டுப்பாட்டில்,புதிதாக வந்த எனக்கு குளிக்கத் தண்ணீர் 2 வாளி வாங்கிக் குளித்து முடிய 12 மணி ஆனது உடனே புறப்பட்டு இந்தச் 'சுடர்' மளிகைக்குள் வந்து நிற்கிறேன்.
நேற்று 3 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி இரவு 10.45 மணிக்கு சென்னைக்கு கொண்டு வந்து என்னை அரசு நிறுத்தி உள்ளது. கேவலம் அடிமாடு வியபாரி கூட வழியில் கொண்டு செல்லும் கால்நடைகளுக்கும் தண்ணிர் காட்டுகிறார்கள்.
அதைவிட மிருகத்தனமாக ஒரு SPECIAL CLASS PRISONERஐ நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நான் உங்கள் முன் என் வாதத்தை எடுத்து வைக்க நிர்ப்பந்தபடுத்தப்பட்டுள்ளேன்.
மேலும், அரசுக்கு 200க்கும் மேற்பட்ட விளக்கங்களைக் கேட்டு நானும் எனது வழக்கறிஞர்களும் விடுத்த பல நோட்டிஸ்களுக்கும்-அதில் பலவற்றிற்க்கு, நேற்றுமாலை 2மணி வரை சுமார்-
23 Telex Messages
13 Fax Messages
16 Wire Messages
23 Telegraphic Messages
10 Speed Post
12 Special Messages Post
என கடைசி நிமிடம் வரை தந்துள்ளது. பலவற்றிற்கு பதிலே காணவில்லை. இன்றுகூட 12 பக்கம் Fax செய்தியை காலை 11.30க்கு சென்னை சிறையில் தந்துள்ளது.
இவைகளை எல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம், இம்மனுக்களில் பல மனுக்கள் நான் சிறைப்பட்ட மறு வாரத்தில் அனுப்பப்பட்டவைகள் ஒரு மாதம் தூங்கிவிட்டு இப்போது படு சுறுசுறுப்பாக ஜெட் வேகத்தில் தன்கடமை உணர்வு பொங்க அரசு இவைகளை அனுப்பி உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசி வரியில் மனுதாரர் ஆலோசனை மன்றக்குழுவிற்கு அனுப்பும் மனுவிற்கு வலுவூட்டவே (Effective Reprcsentation) சக்தி வாய்ந்த பிரதி வாதங்களுக்கு உதவியாக இச்செய்திகள் வழங்கப்படுவதாக கூறி உள்ளது.
நடுவர் அவர்களே! இது கொக்குக்கு நரி விருந்து வைத்த கதையாக உள்ளது
சகல சௌகரியமும் உள்ள அரசுக்குப் பதில் அளிக்க ஒரு மாதத்திற்கு மேல் அவகாசம் தேவையாம். ஆனால் உரிமைகள் முடக்கப்பட்டு- ஒரு பேப்பருக்குக் கூட விண்ணப்பித்து மறுநாள் தான் பெறவேண்டிய நிலை சிறைவாசியினுடைய நிலை. நான் எதோ அரசு சுகபோக மாளிகையின் அந்தப் புறத்தில் இருப்பதாக அரசு எண்ணிவிட்டது.
ஒரு மாதம் இவர்களுக்குத் தேவையாம் எனக்கு ஒரு மணி நேரம் கூட அவகாசம்மில்லை. இது என்ன நியாயம் Social Justice- சமுக நியாயம் தர்மம் இல்லையா? இருதரப்புக்கும் சம வாய்ப்பளிப்பது தான் சட்டநிதி (legal Justice)- சிறையில் எழுத ஒரு பேப்பர் வேண்டுமானால் ஹெட்வார்டர் ( H.W) மூலம் சொன்னால் அவர் சிப்-வார்டரிடமும் (Chief Warder)பின் Chief Head ward-Asst Jailor-Deputy- Additional Suptd, பின் Superintendent என தொடர்ந்து பின் R.Tக்கு ஆர்டர் கிட்டி கையெழுத்தாகி அதே மாதிரி மேலிருந்து கிழாக ஒரு சுற்று சுற்றி இன்ஷியாலிட்டு என்னிடம் வர ஒருநாள், சில நேரம் 2 நாட்கள் கூட ஆகிவிடும். இந்த தலைமை செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் சிறை Manual லின் அட்டையை கூடப் பார்த்திருக்கமாட்டர்கள்.
I A S முடித்ததும் அப்படியே டிரையினிங் செல்லும் இவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது சிறைத்துறையிலும்.சிறையினுள்ளும் ஒரு சிறைவாசியாக இருந்தால் தான் இவர்களுக்கு அதன் கஷ்ட நஷ்டங்கள் புரியும்.
தற்போது என் நிலை வழக்காட சாதகமாக உள்ளது. எனக்கு போதுமான அவகாசம் தரப்படவில்லை என்று ஒரே வரியில் ஒரேநாளில் மனுமூலம் விடுதலை பெற இயலும் என்பதை பலவருடம் உயர்நீதி மன்றத்தில் இருந்த உங்களுக்குப் புரியாத ஒன்றல்ல, ஆனாலும் அப்படி சட்டத்தின் ஒட்டைகளைப் பயன் படுத்தி நான் விடுமுறை பெற எண்ணுவது, என் மாதிரி சமுக அந்தஸ்த்தும் பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையான நடத்தையும் கொண்ட என் போன்றவர்க்கு அது ஒரு மோசமான முன் உதாரணமாகிவிடும். புறம் தாக்குதலுக்குச் சமம். அது ஒரு Hyprocrate நயவஞ்சக வழியாகிவிடும். அது என் நேரிய குணத்திற்கு இழுக்காகிவிடும். எனவே பிரச்சனைகளை நேரில் சந்திக்க- டெக்னிக்கல் கிரவுண்ட்ஸில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். எனக்குப் போதுமான அவகாசம் தர வேண்டுகிறேன்.
நீதிபதி கனகராஜும், நீதிபதி ராமானுஜமும் ஒத்துக்கொண்டனர். ஆனால் கிருஷ்ணசாமி என்ற R.S.S. அனுதாபி அவகாசம் அளிக்க இயலாது நீங்கள் 15.08.93 அன்றே குற்றச்சாட்டுக்களைப் பெற்றுக் கொண்டிர்கள் அப்போது முதல் படிக்காமல் என்ன செய்தீர்கள்? என்றார்.
நல்ல கேள்வி நீதிபதி அவர்களே 15.08.93 அன்று தந்த 300 பக்கக் குற்றச்சாட்டுகள் ஒரு முழுநாவல் அல்ல ஒரே முச்சில் படிக்க சிறையில் பரபரப்பு பகலில், இரவில் நிசப்தம் ஆனால் இரவில் என் 'செல்' லில் விளக்கு இல்லை. அதனால் தனியாக ரிட் போட்டு உள்ளேன் அது பெண்டிங்கில் உள்ளது. இதோ அதன் நகல்
அடுத்து அதை நான் படிக்க எனக்கு நேரத்தை ஒதுக்கி நன்கு படித்த பின்னர் அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அரசுக்கு பல மனுக்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டும் படிக்கும் போதும் ஏற்படும் நியாயமான குறைபாடு மற்றும் சந்தேகங்களை கேட்டு மனு அனுப்பினேன்.
உதாரணமாக 09.08.93 அன்று திருவையாற்றில் இரு சாராரும் தட்டிகளை வைத்தனராம்
முஸ்லிம்கள் இந்துக்களை வெட்டுவோம் என்றும், இந்துக்கள் முஸ்லிம்களை வெட்டுவோம் என்றும் தட்டி வைத்தனராம்.
முஸ்லிம்களின் தட்டிக்கு என்னைக் கைது செய்த நீதிபதி (கலெக்டர்) மாவட்ட நீதிபதி, இந்துக்கள் வைத்த தட்டிக்கு யாரைக் கைது செய்தார்?
இது நியாயமான கேள்வி. அதை எழுதி அனுப்பினால் இன்று காலை தான் தகவல் தருகிறார் யாரையும் கைது செய்யவில்லை என்று நான் எப்படி எழுத்து மூலமான பதிலைத் தயாரிப்பது?
மெளனமாகினர்
பின்னர் கேட்டார், 'இப்போதைக்கு உங்கள் வாதம் என்ன?'
கனம் நடுவர் மன்ற நீதிபதி அவைகளே! 70 ஆண்டுகள் திருவையாற்றில் தொழுத மசூதியை இடித்தது அரசு, அதைத் தட்டிக் கேட்டது தவறு என்றால் நான் குற்றவாளியாவதில் தவறில்லை மசூதி இல்லாது முஸ்லிம்களின் வாழ்வு உரிமை இல்லை. இதை வலியுறுத்தியது குற்றமானால் நான் குற்றவளியே!
சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் தந்தது ஒரு பெரிய குற்றமென்றால்...... அக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வேன்.
என் வழிபாட்டு உரிமை முடக்கப்படும் போது நான் வாதிட்டதும் பயனின்றி வாளேடுக்க வேன்டியது தான் வழி என்றால், அதனால் என்மீது வழக்கென்றால், மீண்டும் மீண்டும் வாளெடுப்பேன்.
அதற்கு தூக்கு தான் தண்டனை என்றால் என் வாழ்வுரிமையை விட, என் வாழ்வு எனக்குப் பெரிய ஒன்றல்ல.
I PLEAD GUILTY
மகாமகத்தன்று 100 பேர் செத்ததற்கு ஏ.ஜி. தான் காரணம் என்று முதலமைச்சர் சொல்ல,
இல்லை ஜெயலலிதா குளிப்பதைக் காணத்தான் வந்ததால் கூட்ட நெரிசல் என்று மாற்றி மாற்றிப் பழி போடப்பட்டது. பலியானவர் 100க்கும் மேல். காயமுற்றதோ ஆயிரக்கணக்கில்- பொது அமைதி கெட்டது. சட்டம் ஒழுங்கு (Law & Order) கெட்டது.
அப்போது இதே கலெக்டர்- இதற்கு காரணமானவர்களை- 100 பேர்களின் சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்ய அக்கறை காட்டவில்லை. இந்தியத் தேசீயத்தின் மீது இவருக்குப் பாசம் பொங்கி எழவில்லை. ஒரு தவறும் நடை பெறாதபோது என்னை மட்டும் தேசீய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன் படுத்தி கைது செய்யத் துடியாய்த் துடிக்கும் இம்மாதிரி ஜாதிவெறி பிடித்த கலெக்டர்களுக்கு எதிராக போராடுவது இந்த நாட்டில் மரணதண்டனைக்குரிய குற்றமென்றால், மானம் இழந்து வாழும் வாழ்வை விட மரணம் மேலானது-அக்குற்றத்தை பலமுறை செய்வேன் செய்தேன்!
'எங்கள் மார்க்க உரிமைகளுக்கு மரணம் தான் தண்டனை என்றால் எங்கள் மார்க்கத்தை விட வாழ்வு உயர்வான பொருட்டல்ல.'
அச்சுறுத்தலால் எங்கள் ஜீவாதார உரிமைகளை அடக்கி விடலாம் என அரசு அதிகாரிகள் கருதுவார்களேயானால் அச்சுறுத்தலை அவமதிப்பது என் உரிமையாகிவிடும்.
அடக்குமுறையினால் என்னுடைய நியாயமான உரிமைகளை முடக்க நினைத்தால் நான் அதை எதிர்த்து வாழ்வு பூராவும் போராடக் கூட தயங்க மாட்டேன். அதற்கான ஆயுத்தங்களை செய்து வைக்க நான் முனைவது குற்றம் என்றால்-
'I PLEAD GUILTY'
மதச்சார்பற்ற நாட்டை 'இந்து நாடு' ஆக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதை அடித்து நொறுக்கி நாட்டின் பழம் பெருமையை காப்பேன்...... அது குற்றமென சொல்லப்பட்டால்-
' I PLEAD GUILTY OF THAT' SO CALLED CRIME FOR SEVERAL TIME AND SEVERAL MORE TIME'
ரதயாத்திரையின் பெயரால் ரத்த ஆறு ஒட விட்டவனுக்கே பாதுகாப்பு. ஏனையேர் அடங்கிப் போக வேண்டும் என்றால் ரத்த நிறத்தை மாற்றி ஒட்ட எண்ணுவது தவறில்லை. என் மக்கள் சிந்திய ரத்தத்திற்கு யாரிடம் நான் நியாயப் பழி தீர்ப்பது என்பதை இந்த ஆலோசனை மன்றக்குழு எனக்கு ஆலோசனை சொல்ல முடியுமா?
அல்லது அரசுக்கு அப்பழி செய்தவனை ARREST செய்ய பறிந்துரைக்குமா?
அதைச் செய்ய எந்த அமைப்பு உள்ளது?
கடந்த 45 ஆண்டுகளில் இமயம் முதல் குமரி வரை முஸ்லிம் பெருமக்களில் தாலி இழந்தவர், உற்றம் இழந்தவர்,உறவுகளை இழந்து ரத்த சேற்றிலெ மிதந்தவர் 4.5 லட்சமெனப் பாராளுமன்றப் புள்ளி விவரம் தரப்படுகிறதே!
அதற்கு காரணமான RSS வகையறாக்களை கைது செய்ய வக்கற்ற சட்டமும், அரசும் என்னைப் பொறுத்தமட்டில்..........
மன்னிக்க வேண்டும் நீதிபதிகளே!
உங்கள் நடுவர் மன்றம் உட்பட செருப்புக்குப் சமமானவர்களே......!
இது பாதிக்கப்பட்டவனின் மனப் புண்ணிலிருந்து கசியும் இரத்தம் வடியும் ரணக் காயங்களின் பிரதிபலிப்புகள்
மீண்டும் நாகரீகம் கருதி 4.5 லட்சம் அப்பாவி மக்களைப் பறிக்கொடுத்த இனத்தில் ஒரு சதை துண்டு துடித்ததால் என் இதயம் கக்கிய தவறான வாசகம்.
அதற்கு மாற்று இல்லாததால் அதைச் சொன்னேன் - வருத்தத்துடன் தான். அதனைவிட எளிய பதம் எனக்கே கிட்டவில்லை. என் பாதிப்பின் ஆழம் காட்ட, என் காயத்தின் வேதனைக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியவில்லை வருந்திதான் சொன்னேன்.
'மன்னிப்புக்கு இங்கு இடமில்லை'
'பாபர்மசூதி இடிபட்டதும் நான் தான் விலங்கிடப்பட்டேன்!
RSS ஆபிஸ் இடிபட்டதும் நான் தான் கடுங்காவலில் வைக்கப்பட்டேன்
இனி சீன நெடுஞ் சுவர் இடிக்கப்பட்டாலும் இந்த அரசு என்னைத்தான் கைது செய்யும்.
இதன் நச்சு எண்ணத்தை முறியடிக்க மக்களைத் திரட்டி நியாயம் சொல்லி நியாயமான பாரபட்சமற்ற ஒரு அரசை நிர்மாணிக்க என்ணியது தேசீய குற்றமென்றால், அந்த குற்றத்தை நீங்கள் விடுவித்த மறு நாளே மீண்டும் செய்யத்தான் செய்வேன்.
மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவும், மனித நேய அமைப்புகளுக்குச் சிறை வாசமும் தான் அரசின் அன்றாட அணுகு முறையாக உள்ளது வரை என் மாதிரி அமைப்புகளை தீவிரப்படுத்தும் கட்டாயத்தில் தான் நான் மீண்டும் மீண்டும் உள்ளாக்கப்படுவேன்.
25 கோடி இஸ்லாமிய மக்களுக்கு அரசுப் பதவிகளில் 1 சதவிகிதமே இடஒதுக்கிடு உள்ளது. மீதி 24 சதம் கிடைக்கும் வரை ஒரு இயக்கம் நடத்தி போராடுவது இயல்பு, மரபு.
ஒதுக்கப்பட்டு, ஒரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு எம் மக்கள் பிழைப்புரிமை தேடி பிற நாட்டில் வாழ பெற்றத்தாய், உடன்பிறந்த சகோதரர்கள் உள் நாட்டில் வாட நிரந்தரப்பிரிவில் நித்தம் எங்களது வீடுகளில் கண்ணிர் சுமை.
இதனிடையே காவலில்லா வீடுகளில் கடி நாய்கள் போல் சூறையாடும் கூட்டத்திற்கு போலிஸ் துணை நிற்பதை கண்டு பதைபதைத்த உள்ளத்துடன் என்னரும் பெண்டிரை, இளம் சிறாரை நான் காக்க எண்ணியே ஒரு இயக்கம் ஆரம்பித்தேன். அதைக் குற்றம் என்று இந்த அரசு சொன்னால், அத்தகைய குற்றவாளியாக நானிக்கப் பெருமைப்படுகிறேன்.
இந்து மத இழிவிலிருந்து விடுபட்டு சமத்துவ, சாந்தி, சகோதரத்துவம் தேடி இஸ்லாமை இறக்குமதி செய்து எங்களளவில் ஒதுங்கி எங்களுக்குள் ஒன்றுபட்டு யாருக்கும் தீங்கற்று, தீண்டாமை குணமற்று ஒரே குலமாய், ஒரு தாய் மக்களாய், வாழும் சீரிய மனித நேய மார்க்கத்தினை பேணி ஒழுகும் எங்களை, பிளவு பிரிவுகளையே மதக் கோட்பாடாக, பிறப்பு, நிற வேற்றுமை காட்டும் அடிப்படை கொண்ட, பண்டைய திராவிடத்தை பிளந்து கூறு போட்டு பாகுபடுத்தி, பாழ்படுத்தி, பிளவுபடுத்தி, இழிவுபடுத்திய அதே சனாதன பாம்புகளுக்கு நாங்கள் பணிந்து போக, சில அரசு அதிகாரிகள் எங்களை சட்டம் என்ற இரும்பு கரத்தால் ஒடுக்க நினைத்தாலும், அடக்க எண்ணினாலும் அதை எதிர்த்துப் போராடி எங்கள் மனதுக்கேற்ற மார்க்கத்துடன், மானத்துடன், மாண்புகளுடன், மரியாதைகளுடன், மனித நேயத்துடன் வாழ நினைக்கும் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முறியடிப்பது, தடுத்து நிறுத்துவது, தட்டிக் கேட்பது தவறு என்றும் தண்டணைக்குரிய பாவம் என்றும் கருதினால் அந்தப் பாவியாக நான் இருப்பதில் தவறில்லை.
' நான் மட்டுமே வாழவேண்டும் என்று கேட்கவில்லை. நாங்களும் வாழ வேண்டுமென்று இயங்கியது தவறு என்றால், தண்டணை எதுவானாலும் அதற்கு அஞ்சிடப் போவதில்லை.'
எங்களை ஒரு தேசிய இனமாக கருதாத எந்த ஒரு அரசையும், எந்த ஒரு சட்டத்தையும், எந்தக் கோர்ட்டையும், எந்த ராணுவத்தையும் எதிர் கொள்வது எமது உயிருக்கு ஆபத்து என்றாலும் கூட எதிர்கொள்வோம்.
' கள்ளிச் செடியில் மலராய் இருப்பதைவிட ரோஜாச்செடியில் முள்ளாய் இருப்பது மேலானது.'
' கோழையின் தலைக்கிரீடமாய் இருப்பதைவிட வீரனின் கால் செருப்பாய் இருப்பது மேலனது.'
"A DEAD LION IS BETTER THAN LIVING DOG"
ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கங்கள் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமே குவிந்துள்ளதால் மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் மாடுகளை விடக் கேவலமாய் நடத்தப்படுவதைக் கண்டு மனம் குமுறி மாற்று வழி கானாது, மன்றாடிப் போராடாது நான் மாண்டு விட்டால் நாளைய என் வாரிசுகள் என்னை மன்னிக்கமாட்டார்கள்.
உங்கள் மன்னிப்பை விட உருவாகப் போகும் வீர சமுகத்தின் மன்னிப்பே எனக்குப் பெரிய ஒன்று. இந்த நீதி மன்றம் என்னைத் தண்டிக்கலாம்.
ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும்!
வருங்காலம் வஞ்சம் எடுக்கும் என் சார்பாக!
இன்றைய சிறை வாசங்கள் நாளைய தலைமுறையின் சிம்மாசனங்கள்.....
சுதந்திர இந்தியாவிலுள்ள ஜாதிக் கலவரங்களுக்கு காரணம் இஸ்லாமா? இந்து மதத்தின் வர்ணா சக்திகளா?
மதக்கலவரங்கள் மட்டுமே 70 ஆயிரம். 40 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் இது நடைப்பெற காரணம் RSS அமைப்பு என்பது அரசின் புள்ளி விவரக் கணக்கு.
விழுப்புரம்,மண்டைக்காடு,ஆம்பூர்,தம்மம்பட்டி,ஆத்தூர்,சேலம்,வாணியம்பாடி,கோவை,தக்கணிக்கோட்டை, களத்தூர்,திண்டுக்கல், தேங்காய்ப்பட்டிணம், குளச்சல், காயல்பட்டினம், கடைய நல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, அருப்புக்கோட்டை, செஞ்சி, உளுந்துர்பேட்டை, நாகூர் என்று தொடர் கலவரங்களுக்கு காரணம் RSS
ஒரு RSS காரனையாவது, என்றாவது இம்மாதிரி தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனரா? மாறாக அடிபட்ட முஸ்லிம்களையே கைது செய்து அபலைப் பெண்களாக என் மக்களை அச்சுறுத்துவது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வாடிக்கையாய் போனது.
கடலங்குடி, ஐயம்பேட்டை, திருவையாறு போன்ற இடங்களில் மசூதி கட்டத் தடை. அதே நேரம் கேவலம் குரங்கு இன அனுமனுக்கு கூட கோவில் கட்ட அனுமதியின்றியே அரசு பாதுகாப்பு இதை ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.
அதை எதிர்த்தால் தேசத்திற்கே ஆபத்து வங்துவிடுமாம். என்ன கேலிக்கூத்து இது? இதற்கு ஒரு 'குடிமகன்' கட்டுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அக்கட்டுப்பாடுகளை கடுங்காவல் சிறைகளை கறுப்பு சட்டங்களை அடக்கு முறைகளை, ஒடுக்குமுறைகளை ஒரவஞ்சனைப் போக்குகளை பாரபட்சமான நடவடிக்கைகளை, எதிர்த்துப் போராடாது இருப்பது மானம் கெட்டவர்கள், சுரணையற்றவர்கள் என்ற அவப் பெயரை எங்கள் வாரிசுகள் எங்களுக்குச் சுட்டி விடுமுன் அவைகளை எதிர்த்துப் போராடுவது என் ஜீவாதார உரிமைகளுக்கு என் உயிரினும் மேலான மார்க்கத்திற்கு நான் செலுத்தும் உயிர்க் காணிக்கை.
'வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது என் இனமாக இருக்கட்டும்.'
என சத்திய சபதமேற்று சன்மார்க்க வழி தவறாது வாழும் ஒருவன் நான் எனவே இதுபோல் பல நீதி மன்றங்களின் முன் நிறுத்தப்பட்டவன் - நின்றிருப்பவன் - இனியும் நிறுத்தப்பட போபவன்... எனவே எள் முனை அளவு கூட நான் விட்டுக் கொடுப்பதற்கு இல்லை.
இது ஒரு வழக்கு என்ற கோணத்தில் இதைக்கானாது, ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமையாக இருக்கிறது எனக்கருதி எனக்கு மீண்டும் வாய்பினைத்தந்து என் வாதங்களைக் காரணங்களுடன் Grounds of detention உடன் ஒன்றிப்போன மறுப்புகளுக்கு மறுவாய்ப்புத் தரவேண்டும்.
(இடையே குறுக்கிட்ட கிருஷ்ணசாமி நீதிபதி)
' நீங்கள் Grounds of detention க்குள் பேசாது வேறு ஏதோ தேவையில்லாதவை பேசுகிறீர்கள்' என்றார்
உடனே இடைமறித்த நான் -
உங்கள் வழக்கிற்குத் தேவையற்றதாக இருக்கலாம், ஆனால் வரலாற்றிற்கு என் இன மக்களின் வருங்கால வாரிசுகளுக்கு இவை தேவையான ஒன்று, எப்படிப்பட்ட சூழ் நிலையில் எப்படிப்பட்ட பாரபட்சமான அதிகார துஷ்பிரயோகத்தில் நான் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் குழந்தைகள் வளரும் போது கண்டு கொள்ள வேண்டும்.
' கொள்ளையடித்தேனா-
கொலைசெய்தேனா-
கற்பழித்தேனா-
களவாடினேனா-
எதற்காக 125வது முறையாக நான் சிறைப்படுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் விளக்கங்களுடன் நீங்கள் கேட்டே ஆக வேண்டும் அவற்றைப் பதிவு செய்தாக வேண்டும். என் முழு உரை கேட்கத்தான் நீங்களே ஒளிய முட்டுக்கட்டை போடுவத்ற்கு அல்ல. அப்படி முட்டுக்கட்டை போடுவேன் என்று இந்த நடுவர் மன்றம் கூறுமானால் நான் வெளி நடப்பு செய்ய வேண்டி வரும்'
தலைவர் நீதிபதி ராமானுஜம் உடனே-
NO..NO.. PROCEED
என் சொல்ல மீண்டும் தொடர்கிறேன்.
' எனக்கு தரப்பட்ட அவகாசம் குறைவு அதுமட்டுமல்ல, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இரவுப் பயணம் களைப்பு இவற்றினூடே முழுமையாக என்னால் எதையும் எடுத்து வைக்க இயலவில்லை. எனவே ஒன்று மறு தேதிக்கு ஒத்திப் போடுங்கள் அதுவரை சென்னைத் தலை நகர் சிறையிலிருக்க அனுமதி தாருங்கள்.
அத்துடன் 2 Interview என் மகளுக்கு அனுமதி தாருங்கள் அவள் மூலம் எனது வழக்கறிஞரிடம் உள்ள பல ஆதாரங்களை அரசு தபால்களை பெற வேண்டும், அவற்றை படிக்க Cell யில் விளக்கு வசதி, எழுத பேப்பர், அதற்குரிய சாதனங்கள்.....
அதற்கு அதிகபட்ச நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் என்னை சிறைப்படுத்திய 50 நாட்களுக்குள் அரசுக்கு உங்கள் தீர்ப்பை தரவேண்டும். எனவே குறைந்த பட்சத்தில் தந்தால் சுருக்கமாகவாவது என் பதிலை தயாரிக்க எனக்கு முடியும்'.
' சரி.. 22.09.93ந் தேதிக்கு சரிப்படுமா?- என்றனர்.
கனம் நீதிபதி அவர்களே
5 நாள் இருப்பது போல் தோற்றமே தவிர வேறில்லை. இன்று சனிக்கிழமை மாலை 6 மணி ஆகிவிட்டது.
இனி சிறைக்குச் சென்று Admission லாக்கப் என 9 மணி ஆகிவிடும். இருக்கும் களைப்பில் உறக்கம் தான் வரும்.
நாளை ஞாயிறு சிறை விடுமுறை நேர்காணல் கிடையாது.
20ந் தேதி நீங்கள் என் மகளை வரவழைக்கத் தந்தி அனுப்பி வந்தபின் மாலை சொல்லியனுப்பினால், மறு நாள் 21.09.93 மாலைதான் அவள் கொண்டு வருவனவற்றை வைத்து இரவு முழுக்க எழுதி 22.09.93 காலை உங்களிடம் சமர்பிக்க முடியும்- எனக்கு படிக்க 8 மணி நேரம் எழுத 4 மணி நேரம் தூங்க 12 மணி நேரங்களே ஒதுக்கி உள்ளீர்கள் ஆனால் மேலோட்டமாக 5 நாள் கணக்கில் வரும். அது சிறைவாசிக்கு சிலமணித்துளிகளே!.
' அதற்கு மேல் தர இயலாது பாபா' - என்றனர்.
' சரி என்னால் முடிந்த அளவுக்கு நான் முழுமையான பதிலை எழுதி வருகிறேன்'.
கைகுலுக்கும் போது கனகராஜ் கண்கள் கலங்க
நீதிபதி ராமானுஜம் கனிவுடன் நோக்க
கிருஷ்ணசாமி கடுப்புடன் செல்ல..............
7 மணிக்கு விடை பெற்று சிறைக்கு வந்து - அதன்பின் மறு நாள்தான் பைல்களைப்படித்து பதிலை தயாரித்துக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் கொண்ட எழுத்து மூலமான பதிலை- 22.09.93 அன்று தயாரிதேன்.
அதன் நகலை எடுத்து அனுப்பி உள்ளேம். 23.09.93 அன்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன்.
From
Erainesan
மாயா நாகரிகம
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
========================
Please Note:
இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================
மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.
யார் இவர்கள்?
மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது.
இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம்.
பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள்.
ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல.
மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.
மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:
இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது.
இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம்.
சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது.
1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ej�rcito Zapatista de Liberaci�n Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
முஸ்லிம் மாயன்கள்:
2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.
மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,
சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது.
மாயன்கள் ஹஜ் செய்கின்றனர்.
ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது.
தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.
உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள்.
தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது.
மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?
1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார்.
இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார்.
ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia.
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.
தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.
'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது.
அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.
மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).
"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay"
இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
நன்றி : சகோ.ஆஷிக் அஹமத் அ.
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
========================
Please Note:
இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================
மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.
யார் இவர்கள்?
மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது.
இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம்.
பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள்.
ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல.
மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.
மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:
இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது.
இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம்.
சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது.
1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ej�rcito Zapatista de Liberaci�n Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
முஸ்லிம் மாயன்கள்:
2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.
மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,
சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது.
மாயன்கள் ஹஜ் செய்கின்றனர்.
ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது.
தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.
உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள்.
தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது.
மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?
1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார்.
இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார்.
ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia.
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.
தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.
'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது.
அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.
மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).
"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay"
இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
நன்றி : சகோ.ஆஷிக் அஹமத் அ.
வெள்ளி, அக்டோபர் 21, 2011
காவு கொள்ளப்பட்ட கடாபியும், கற்பனை ராச்சியங்களும் எஸ்,.எம்.எம்.பஷீர
கேணல் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீபோல் உலக ஊடகங்களில் இப்போது பரவி ஆக்கிரமித்திருக்கிறது. எங்கும் எதிலும் அது பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன விவாதிக்கப்படுகின்றன. கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய செய்திகளும் பல விதங்களில் சில நிமிடங்களுக்குள் மாறுபட்டே வரத் தொடங்கின . குறிப்பாக முதன் முதலில் மேற்குலக செய்தி ஊடகங்களுக்கு பரவிய செய்தி கடாபி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத் தொடரணி மீது நேட்டோ படையினரின் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதாகும். பரஸ்பர சண்டையில் ஒரு வீட்டில் குண்டடிபட்டு இறந்ததாகவும் செய்திகள் வந்தன. மிக இறுதியான செய்தியாக கடாபி ஒரு களிவு நீரோடும் குழாயிலிருந்து சுடப்பட்டதாகவும் வெளியாகின வீட்டில் சுடப்பட்டதான செய்தியின் போதும் கழிவு நீர் குழாயிலிருந்து சுடப்பட்ட செய்தியின் போதும் அவர் தன்னை சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் செய்திகள் செய்திகள் வந்தன.
அதிலும் குறிப்பாக இறுதியில் வந்த செய்தி என்னவென்றால் கடாபி எதிர்த்து போரிடவில்லை தற்செயலாக -விபத்தாக சுடப்பட்டார். ( ஒசாமா பி லாடனையும் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டார் என்றும் பின்னர் அவர் தங்களை தாக்க முற்படவில்லை என்றும் செய்திகள் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.) இந்த செய்திகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ; கடாபி கொல்லப்பட்டுவிட்டார். சர்வாதிகாரி ஒழிந்து விட்டான் என்பதுதான் தேவையான செய்தி என்று மேற்குலக ஊடகங்கள் சமரசம் செய்து கொண்டன. ஆனால் சில மேற்குலக செய்திகளின் நம்பக தன்மைக்கு சவால் விடும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஓரிரு செய்தி ஊடகங்கள் மெதுவாகவேனும் கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. அந்த வகையில் இறுதியாக சர்வதேச மன்னிப்பு சபையும் இடைக்கால தேசிய சபை கடாபி கொல்லப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. லிபியாவின் இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர்கள் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசத்தொடங்கி உள்ளார்கள்.
.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபை நேட்டோ நாடுகளின் குடிமக்கள் மீதான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானிலோ அல்லது லிபியாவிலோ ஆக்ரோஷமாக கண்டிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க கடாபியின் மரணம் ( ஆயுதம் வைத்திருக்காத எதிர்த்து சண்டைபுரியாத ஒரவரை விபத்தாக கொன்று விட்டோம் என்பதன் மூலம் கொலையை இடைக்கால தேசிய சபை மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் ) அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் குறிப்பட்ட லிபியாவின் வரலாற்று அத்தியாத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரினும் கதையை முடிக்கவில்லை என்றும் (The reported death of Colonel Mu’ammar al-Gaddafi would bring to a close a chapter of Libya’s history marked by repression and abuse but does not end the story,) சூசகமாக கடாபியின் கொலை சம்பந்தமாக விசாரணையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. இதுவரை நேட்டோ நாடுகளின் குண்டுத்தாக்குதல்களினாலும், லிபிய ஆயுத புரட்சியாளர்களினாலும் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட குடிமக்கள் கடாபி ஆதரவாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவண்ணமிருக்கின்றன.
மேற்குலக மனித உரிமை நிறுவனங்கள் சிலிர்த்து எழுந்து சீண்டும் திராநியர்ரவை என்பதால் நேட்டோ அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஆக மிஞ்சினால் ஒரு விபத்து நிகழ்வாக மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும். அதைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செய்து வருகிறார்கள்.
கடாபி மேற்குல எதிர்ப்பாளராக மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையாளராக மாறிய போதே அமெரிக்க, பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவர் மீது தீவிர கண்காணிப்பினை எதிர்ப்பினை கட்டமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தன. ஆனால் இந்நிலை பிரித்தானிய காவல்துறை பெண்மணியின் கொலையுடனும் லோக்கர்பீ விமான குண்டு வெடிப்புடனும் ஐரிஷ் கெரில்லாக்கள் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கான உதவிகளுடனும் (யூத எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள ) மேற்குலகின் கண்ணில் விழுந்த தூசி போல கடாபியின் இருத்தல் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் உறுத்தத் தொடங்கியது. அது தொடர்பான கடாபியினதும் அவரின் மேற்குலக எதிரிகளினதும் ராஜரீய அணுகுமுறைகள் மாற்றமடைந்தன. எதிரியான இரு பகுதியினரும் இறுக்கமாக அணைத்து ஆரத்தழுவி ஆயுதங்களை கடாபிக்கு விற்றதும் மாற்றாக எண்ணைக் குதங்களையும், எரிவாயுக்களையும் குத்தகைக்கு எடுத்ததும் நடந்தேறின. அணுவாயுத அச்சுறுத்தலை கடாபி இல்லாமல் செய்தார்.
ஆனால் கடாபியை கொல்ல வேண்டும் என்பதற்கு பிரித்தானியாவின் உளவுத்துறை முதன் முதலில் சதித திட்டம் தீட்டியது. நிச்சயமாக அது அன்றைய அரசின் அனுசரணையுடன்தான் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை அரசு மறுத்தாலும் உண்மைகளை வரலாறுகள் பதிவு செய்யத்தானே செய்யும். எம்.ஐ சிக்ஸ் எனப்படும் பிரித்தானிய உளவு ஸ்தாபனம் இதற்காக தன்னை அமர்த்தியதென அதன் உளவாளியாக செயற்பட்ட ( பின்னர் அவர் எனது அயலில் தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது) டேவிட் ஷய்லேர் (David Shayler) தான் அப்பதவியிலிருந்து விலகி தனது பாதுகாப்புக்காக பிரான்ஸ் சென்று அங்கிருந்து இலண்டன் பத்திரிகை ஒன்றிற்கு தகவல் வழங்கியிருந்தார். அத்தகவலை வழங்கியதற்காக அவரை கைது செய்து நாடு கடத்துமாறு பிரித்தானிய அரசு பிரான்சை கேட்க பிரான்ஸ் இறுதியில் அதனையே செய்தது. அவர் 1996 ம் ஆண்டு மாசி மாதம் லிபியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்றின் முகவருக்கு கடாபியை சதிக்கொலை செய்யும் பணியை தான் எம்.ஐ சிக்ஸ் உத்தரவிற்கிணங்க வழங்கியதாகவும் அம்முயற்சியில் அவர்கள் மோட்டார் பவனி வாகனத்தின் கீழ் பொருத்தி குண்டு வெடிக்கவைத்து வெடித்ததாகவும் ஆனால் அந்த குண்டு வெடிப்பில் தெருவோரம் நின்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் கடாபி பாதிக்கப்படவில்லை என்றும் பின்னரும் 1996 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் (மார்ச்) மீண்டும் ஒரு சதிக்கொலை முயற்சி செய்யப்பட்டதாகவும் அது கடாபி பிறந்த நகரான சிரத்தில் ( இப்போது அவர் கொல்லப்பட்ட நகரத்தில் ) செய்யப்பட்டதாகவும் அதிலும் பிழையான வாகனமே குண்டு வெடிப்பிற்குள்ளானதென்றும் அதிலும் கடாபி தப்பிவிட்டார் என்றும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான பிரித்தானியாவின் கேவலமான கபடத்தனமான முகமூடியை டேவிட் ஷய்லேர் கிழித்தெறிந்ததற்காக அவர் கைதியாக்கப்பட்டு அரச இரகசிய வெளிப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தண்டனையும் வழங்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக நின்றவர் அவரின் காதலியான இன்னுமொரு எம்.ஐ சிக்ஸ் உத்தியோகத்தரான அண்ணி மாச்சொன் ஆகும். இவர் இப்போது ஜெர்மனியிலே வாழ்வதுடன் பிரித்தானிய அமெரிக்க நயவஞ்சகத்தனத்தை கடாபியின் மீதான பழிவாங்கலை நேட்டோவினதும அமெரிக்காவினது அத்து மீறல்களை மனித உரிமை பாசாங்குகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ளார். மிகவும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை தனது பட்டறிவின் பின் பட்டவர்த்தனமாக இவர் பேசுகிறார்.
நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பு புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியதும் வான் தாக்குதல்கள் மேற்கொண்டதும் இறுதியில் கடாபியின் கொலையையும் செய்து முடித்திருக்கிறார்கள். ஐனாவும், மேற்குலக ஏகாதிபத்தியங்களும் தங்களின் நிகழ்சி நிரலை கடாபி எதிர்ப்பு லிபியர்கள் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவ விரும்பும் சக்திகள், தாராளவாத சக்திகள் என எல்லா தரப்பினரையும் ஒன்றிணைத்து எண்ணெய்வளமிக்க நாட்டை சுடுகாடாக்கியிருக்கிறார்கள். கடாபியின் தான் தோன்றித்தனமான, ஆட்சி அத்துமீறல்களும் ஜனநாயக மறுப்பும் பற்றிய குற்றச்சாட்டுக்கள் லிபிய மக்களின் உள்ளார்ந்த உரிமை. ஆனால் எகிப்து துனிசியா ஏன் ரோமொனியாவில் நடந்ததுபோல மக்கள் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் எதிர் ஆயுதப்புரட்சியையும் வான் வெளி தாக்குதலையும் மேற்கொண்டு கடாபியை கவிழ்த்ததன் மர்மம் என்ன .
இஸ்லாமிய தீவிரவாதிகள் என தாங்களே கருதிய ஒசாமா பின் லாடனையும் முஹாஜிதீங்களையும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு கமுனிஸ்ட் எதிர்ப்பு போர்வையில் கூட்டமைத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆயுதம் அளித்து ஆட்சி மாற்றம் பண்ணியதையும், நஜீபுல்லாவின் உடல் தெருவோரத்தில் தொங்கவிடப் பட்டதையும் ஞாபகப்படுத்தி கொண்டு இப்போது அமெரிக்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் லிபியாவில் ஆயுதம் வழங்கியது மட்டுமல்ல அவர்களை வைத்தே பல கொலைச்சதி முயற்சிகளை கடாபியின் மீது மேற்கொண்ட வரலாறும் நீண்டது.
அமெரிக்காவின் ஆண்டின் விமான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலிலும் கடாபி தப்பிப் பிழைத்து இறுதியில் சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு நேட்டோவின் குண்டு வீச்சில் காயமடைந்து கொல்லப்பட்டாரா? தமது இலக்கை ஒரு கால் நூற்றாண்டின் பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சாத்தித்து விட்டனவா? வரப்போகும் நாட்கள் கடாபியை கொன்றபோது அல்லாஹு அக்பர் சொன்ன மக்களின் ஒற்றுமையும் ஆட்சியும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவருமா?
அதிலும் குறிப்பாக இறுதியில் வந்த செய்தி என்னவென்றால் கடாபி எதிர்த்து போரிடவில்லை தற்செயலாக -விபத்தாக சுடப்பட்டார். ( ஒசாமா பி லாடனையும் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டார் என்றும் பின்னர் அவர் தங்களை தாக்க முற்படவில்லை என்றும் செய்திகள் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.) இந்த செய்திகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ; கடாபி கொல்லப்பட்டுவிட்டார். சர்வாதிகாரி ஒழிந்து விட்டான் என்பதுதான் தேவையான செய்தி என்று மேற்குலக ஊடகங்கள் சமரசம் செய்து கொண்டன. ஆனால் சில மேற்குலக செய்திகளின் நம்பக தன்மைக்கு சவால் விடும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஓரிரு செய்தி ஊடகங்கள் மெதுவாகவேனும் கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. அந்த வகையில் இறுதியாக சர்வதேச மன்னிப்பு சபையும் இடைக்கால தேசிய சபை கடாபி கொல்லப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. லிபியாவின் இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர்கள் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசத்தொடங்கி உள்ளார்கள்.
.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபை நேட்டோ நாடுகளின் குடிமக்கள் மீதான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானிலோ அல்லது லிபியாவிலோ ஆக்ரோஷமாக கண்டிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க கடாபியின் மரணம் ( ஆயுதம் வைத்திருக்காத எதிர்த்து சண்டைபுரியாத ஒரவரை விபத்தாக கொன்று விட்டோம் என்பதன் மூலம் கொலையை இடைக்கால தேசிய சபை மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் ) அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் குறிப்பட்ட லிபியாவின் வரலாற்று அத்தியாத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரினும் கதையை முடிக்கவில்லை என்றும் (The reported death of Colonel Mu’ammar al-Gaddafi would bring to a close a chapter of Libya’s history marked by repression and abuse but does not end the story,) சூசகமாக கடாபியின் கொலை சம்பந்தமாக விசாரணையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. இதுவரை நேட்டோ நாடுகளின் குண்டுத்தாக்குதல்களினாலும், லிபிய ஆயுத புரட்சியாளர்களினாலும் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட குடிமக்கள் கடாபி ஆதரவாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவண்ணமிருக்கின்றன.
மேற்குலக மனித உரிமை நிறுவனங்கள் சிலிர்த்து எழுந்து சீண்டும் திராநியர்ரவை என்பதால் நேட்டோ அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஆக மிஞ்சினால் ஒரு விபத்து நிகழ்வாக மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும். அதைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செய்து வருகிறார்கள்.
கடாபி மேற்குல எதிர்ப்பாளராக மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையாளராக மாறிய போதே அமெரிக்க, பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவர் மீது தீவிர கண்காணிப்பினை எதிர்ப்பினை கட்டமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தன. ஆனால் இந்நிலை பிரித்தானிய காவல்துறை பெண்மணியின் கொலையுடனும் லோக்கர்பீ விமான குண்டு வெடிப்புடனும் ஐரிஷ் கெரில்லாக்கள் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கான உதவிகளுடனும் (யூத எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள ) மேற்குலகின் கண்ணில் விழுந்த தூசி போல கடாபியின் இருத்தல் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் உறுத்தத் தொடங்கியது. அது தொடர்பான கடாபியினதும் அவரின் மேற்குலக எதிரிகளினதும் ராஜரீய அணுகுமுறைகள் மாற்றமடைந்தன. எதிரியான இரு பகுதியினரும் இறுக்கமாக அணைத்து ஆரத்தழுவி ஆயுதங்களை கடாபிக்கு விற்றதும் மாற்றாக எண்ணைக் குதங்களையும், எரிவாயுக்களையும் குத்தகைக்கு எடுத்ததும் நடந்தேறின. அணுவாயுத அச்சுறுத்தலை கடாபி இல்லாமல் செய்தார்.
ஆனால் கடாபியை கொல்ல வேண்டும் என்பதற்கு பிரித்தானியாவின் உளவுத்துறை முதன் முதலில் சதித திட்டம் தீட்டியது. நிச்சயமாக அது அன்றைய அரசின் அனுசரணையுடன்தான் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை அரசு மறுத்தாலும் உண்மைகளை வரலாறுகள் பதிவு செய்யத்தானே செய்யும். எம்.ஐ சிக்ஸ் எனப்படும் பிரித்தானிய உளவு ஸ்தாபனம் இதற்காக தன்னை அமர்த்தியதென அதன் உளவாளியாக செயற்பட்ட ( பின்னர் அவர் எனது அயலில் தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது) டேவிட் ஷய்லேர் (David Shayler) தான் அப்பதவியிலிருந்து விலகி தனது பாதுகாப்புக்காக பிரான்ஸ் சென்று அங்கிருந்து இலண்டன் பத்திரிகை ஒன்றிற்கு தகவல் வழங்கியிருந்தார். அத்தகவலை வழங்கியதற்காக அவரை கைது செய்து நாடு கடத்துமாறு பிரித்தானிய அரசு பிரான்சை கேட்க பிரான்ஸ் இறுதியில் அதனையே செய்தது. அவர் 1996 ம் ஆண்டு மாசி மாதம் லிபியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்றின் முகவருக்கு கடாபியை சதிக்கொலை செய்யும் பணியை தான் எம்.ஐ சிக்ஸ் உத்தரவிற்கிணங்க வழங்கியதாகவும் அம்முயற்சியில் அவர்கள் மோட்டார் பவனி வாகனத்தின் கீழ் பொருத்தி குண்டு வெடிக்கவைத்து வெடித்ததாகவும் ஆனால் அந்த குண்டு வெடிப்பில் தெருவோரம் நின்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் கடாபி பாதிக்கப்படவில்லை என்றும் பின்னரும் 1996 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் (மார்ச்) மீண்டும் ஒரு சதிக்கொலை முயற்சி செய்யப்பட்டதாகவும் அது கடாபி பிறந்த நகரான சிரத்தில் ( இப்போது அவர் கொல்லப்பட்ட நகரத்தில் ) செய்யப்பட்டதாகவும் அதிலும் பிழையான வாகனமே குண்டு வெடிப்பிற்குள்ளானதென்றும் அதிலும் கடாபி தப்பிவிட்டார் என்றும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான பிரித்தானியாவின் கேவலமான கபடத்தனமான முகமூடியை டேவிட் ஷய்லேர் கிழித்தெறிந்ததற்காக அவர் கைதியாக்கப்பட்டு அரச இரகசிய வெளிப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தண்டனையும் வழங்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக நின்றவர் அவரின் காதலியான இன்னுமொரு எம்.ஐ சிக்ஸ் உத்தியோகத்தரான அண்ணி மாச்சொன் ஆகும். இவர் இப்போது ஜெர்மனியிலே வாழ்வதுடன் பிரித்தானிய அமெரிக்க நயவஞ்சகத்தனத்தை கடாபியின் மீதான பழிவாங்கலை நேட்டோவினதும அமெரிக்காவினது அத்து மீறல்களை மனித உரிமை பாசாங்குகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ளார். மிகவும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை தனது பட்டறிவின் பின் பட்டவர்த்தனமாக இவர் பேசுகிறார்.
நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பு புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியதும் வான் தாக்குதல்கள் மேற்கொண்டதும் இறுதியில் கடாபியின் கொலையையும் செய்து முடித்திருக்கிறார்கள். ஐனாவும், மேற்குலக ஏகாதிபத்தியங்களும் தங்களின் நிகழ்சி நிரலை கடாபி எதிர்ப்பு லிபியர்கள் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவ விரும்பும் சக்திகள், தாராளவாத சக்திகள் என எல்லா தரப்பினரையும் ஒன்றிணைத்து எண்ணெய்வளமிக்க நாட்டை சுடுகாடாக்கியிருக்கிறார்கள். கடாபியின் தான் தோன்றித்தனமான, ஆட்சி அத்துமீறல்களும் ஜனநாயக மறுப்பும் பற்றிய குற்றச்சாட்டுக்கள் லிபிய மக்களின் உள்ளார்ந்த உரிமை. ஆனால் எகிப்து துனிசியா ஏன் ரோமொனியாவில் நடந்ததுபோல மக்கள் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் எதிர் ஆயுதப்புரட்சியையும் வான் வெளி தாக்குதலையும் மேற்கொண்டு கடாபியை கவிழ்த்ததன் மர்மம் என்ன .
இஸ்லாமிய தீவிரவாதிகள் என தாங்களே கருதிய ஒசாமா பின் லாடனையும் முஹாஜிதீங்களையும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு கமுனிஸ்ட் எதிர்ப்பு போர்வையில் கூட்டமைத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆயுதம் அளித்து ஆட்சி மாற்றம் பண்ணியதையும், நஜீபுல்லாவின் உடல் தெருவோரத்தில் தொங்கவிடப் பட்டதையும் ஞாபகப்படுத்தி கொண்டு இப்போது அமெரிக்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் லிபியாவில் ஆயுதம் வழங்கியது மட்டுமல்ல அவர்களை வைத்தே பல கொலைச்சதி முயற்சிகளை கடாபியின் மீது மேற்கொண்ட வரலாறும் நீண்டது.
அமெரிக்காவின் ஆண்டின் விமான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலிலும் கடாபி தப்பிப் பிழைத்து இறுதியில் சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு நேட்டோவின் குண்டு வீச்சில் காயமடைந்து கொல்லப்பட்டாரா? தமது இலக்கை ஒரு கால் நூற்றாண்டின் பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சாத்தித்து விட்டனவா? வரப்போகும் நாட்கள் கடாபியை கொன்றபோது அல்லாஹு அக்பர் சொன்ன மக்களின் ஒற்றுமையும் ஆட்சியும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவருமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



