வெள்ளி, மார்ச் 23, 2012

அறுவை சிகிச்சை இன்றி மகாதமனியை சீர்படுத்தலாம்

வயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும்,

அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி வால்வை, ரத்தமின்றி, அறுவைச் சிகிச்சையின்றி மாற்றி பொருத்து வதற்கு, டி.ஏ.வி.ஐ., என்று பெயர். ஆங்கிலத்தில், “டிரான்ஸ்பெமோரல் அயோட்டிக் வால்வு இம்ப்ளான்ட்’( transfemoral aortic valve implant) என்றழைக்கப்படுகிறது. தொடையிலுள்ள ரத்தக் குழாய் வழியாக, ஸ்டென்ட் பொருத்தப்படுவதே, இச்சிகிச்சை முறை. அயோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் என்ற வால்வு சுருக்க நோய், 60 முதல், 70 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ஏற்படும். 50 சதவீத முதியோருக்கு, வயது முதிர்வு தன்மையால், வால்வின் மேல், சுண்ணாம்பு, நார் சத்து படர்ந்து, வால்வு சுருங்கி விடுகிறது.

இதனால் ரத்தம், இடது கீழறையிலிருந்து, மகா தமனிக்கு செல்வதில் தடை ஏற்பட்டு, பல சிக்கல்களும், கோளாறுகளும் உண்டாகின்றன. பெரும்பாலும், அயோட்டிக் வால்வு சுருக்கத்தை, கண்டுபிடிப்பது கடினம். 50 சதவீதத்தினர் கண்டுபிடிக்காமல், இந்த வியாதியினால் திடீரென்று இறந்து விடுகின்றனர். நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை, கணக்கிட வேண்டும். இதய அறுவை சிகிச்சை வேண்டாம்

இதை சரியாக கண்டுபிடிக்கா விட்டால், அறுவை சிகிச்சை மூலம், வால்வு மாற்று சிகிச்சை செய்ய முடியாத இறுதி நிலையில், நோயாளிகள் இருப்பர். அந்த நேரத்தில், இந்த டி.ஏ.வி.ஐ., தான் தீர்வு. ரத்தமின்றி, கத்தியின்றி நெஞ்சை பிளக்காமல், வலது தொடையில் இருக்கும் பெமோரல் ரத்த நாளத்தில் துளை போட்டு, அதன் மூலம் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அது, அயோட்டிக் வால்வை கடந்து, இடது கீழறை வரை சென்றடையும். இதனுள் ஒரு மெல்லிய கம்பியை செலுத்தி, அறையில் நிறுத்தி, அதன் வழியாக, ஸ்டென்ட்டை உள்ளடக் கிய பலூனை செலுத்தி, பழுதடைந்த அயோடிக் வால்வு பகுதியில் வைத்து, வெளியில் பம்பு மூலம், பலூனை விரிவடைய வைக்க வேண்டும். அப்போது, சுருங்கிய வால்வு விரிவடையும். பலூனின் ஸ்டென்ட் தாங்கியுள்ள பகுதியை, வால்வின் பழுதடைந்த பகுதியில் வைத்து விட்டால், வால்வில், ரத்த ஓட்டம் சீராகிவிடும்.

இந்த நோயை, உடனடியாக கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்கள்:

இந்த பாதிப்பை கொண்டவர்கள், எந்தவித குறைகளுமின்றி இருப்பர். காரணம், பெரும்பாலான முதியோர், அதிகமான செயல்பாடுகள், வேலைகளில் ஈடுபடுவதில்லை.

'எக்கோ கார்டியோ கிராம், டிரெட் மில் டெஸ்ட்’ பரிசோதனைகள் செய்து கொள்வதில்லை.

பெரும்பாலான குடும்ப டாக்டர்கள், இந்த நோயை கவனத்தில் கொள்ளா மல் கூடுதல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தமென்று இருந்து விடுகின்றனர்.

முதியோருக்கு மூச்சு திணறலோ, வேலை செய்யும் திறன் குறைந் தாலோ, நடை பயிற்சியின் வேகம், தானாக குறைந்தாலோ, வயதான குறையென்று சும்மா இருக்கக் கூடாது.

உடனடியாக, இதய வல்லுனரின் ஆலோசனை தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...