திங்கள், நவம்பர் 07, 2011

Mohamed Mujahid கவிதைகள்(facebook)

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்

Abool Barakath(பதில்)
தம்பி ராசா அங்க தான் நீங்க தப்பு பன்றிங்கள் நீங்க கொஞ்சம் கிளேவேற இருந்தால் அந்தப்பெண்ணையும் தாய மாத்தலாம் ஹஹா ஹஹா ஹஹாஹ் ஹஹாஹ் ஹஹாஹ்

Rafi Sharifdeen(பதில்)
அந்த மனைவியும் ஒரு மகனை மனிதனாக்க பார்க்கும் ஒத்திகை இது!!! சகோதரா

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்;;;
Mohamed Mujahid

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
வாழ்க்கையும் அப்படி தான்....
முடியும் வரை தெரிவதில்லை....
வாழ்வது எப்படி என்று...

என்னை மறந்த இந்த இயந்திர வாழ்க்கையில்
என்னையும் நேசிக்கும் இதயங்களை தேடிய எனது
பயணத்தில் இன்றும் தனிமையாக தான் தொடருகிறது எனது பயணங்கள்......

தன்னை அறிந்தவன் ”ஆசை" படமாட்டான் உலகை அறிந்தவன் ”கோப" படமாட்டான் இது இரண்டையும் உணர்ந்தவன் ”கஷ்டப்" படமாட்டான்!

நீ ஏற்படுத்திய காயம் என் மனதில் வேண்டும்... ஏனெனில்
மீண்டும் காயப்படாமல் இருப்பதற்கு! ....
நீ ஏற்படுத்திய கண்ணீர் என்றும் என் நினைவில் வேண்டும்.. ஏனெனில் .. மீண்டும் கானல் நீரை கண்ணீர் என கண்டு ஏமாறாமல் இருப்பதற்ககு
நீ ஏற்படுத்திய புயல் என்றும் என் உணர்வில் வேண்டும் ..
ஏனெனில் .. மீண்டும் புயலை தென்றல் என உணர்ந்து ஏமாறாமல் இருபதற்ககு ! ..

சந்தோஷம் என் வாழ்வில் பிறக்குமா அதை எதிர் பார்த்தும் பயனில்லை ..மீளா துயரிலும் உன் நினைவுகளை அசைபோடுகிறேன் என்னை மறந்து சலனமில்லா என் காதல் கண் கலங்குகிறது உன்னால்

காரணமில்லாமல் என்னை சோதனைக்குள் தள்ளிவிட்டாய்
என் உணர்வுகளையும் ,ஏக்கங்களையும் கொன்று விட்டாய்
உன்னை நினைத்தே தேய்ந்து விட்டேன் என் வாழ்வில் இனி வளர் பிறை ஏது...?

நாட்கள் நம்மை கடந்துசென்றாலும்
நினைவுகள் நம்மைவிட்டு பிரிந்து செல்வதில்லை

பிரிவை எந்த அளவுக்கு வெருக்கிறோம் என்பதை
பிரிந்திருக்கும் போது அல்ல
மீண்டும் சந்திக்கும் போதுதான் உணரமுடியும்

விட்டுக் கொடுத்தேன்
எனது
விருப்பங்கள் நிறைவேற அல்ல....
என்னை
விரும்பியவளின் விருப்பங்கள் நிறைவேற..

எல்லா இடத்திலும்
நீ
இருக்கிறாய் என்கிறார்கள்.
ஆனால்,
நான் தேடிய இடத்தில்
நீ இல்லை!

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...