வியாழன், ஜனவரி 12, 2012

நான் உயிரோடு இருக்கிறேன்..

நான் உயிரோடு இருக்கிறேன்..
உலகம் அழிந்தால்
எனக்கென்ன வந்தது..
இது சோம்பேறி சொன்னது..

உரசாதவரை நான் ஊமை
உரசிவிட்டால் நான் நெருப்பு
இது
சின்னத் தீக்குச்சி
சொன்னது...

முன்னே நாம் எட்டுவைத்தால்
பின்வாங்கும்
யானைப் படையும்.

அட நண்பா!
முள் கீறியா - நம்
முதுகெலும்பு உடையும்?

குனிந்தவனுக்கு மூட்டை சுமப்பது கூட
குறுக்கு வலி..
துணிந்தவனுக்கு சீன பெருஞ்சுவர் கூட
குறுக்கு வழி.

கதவுகள் திறக்கும் வரை தட்டு..
கை இல்லாதவனா.. தலையால் முட்டு...

வேர்க்க வேர்க்க உழைத்து வா..
தோற்கத் தோற்க எழுந்து வா..


மனிதன் என்ற பேரொடு
மரணம் வரை போராடு...

---தன்னம்பிக்கையோடு---
Syedaleem Syedbram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...