சனி, ஜனவரி 14, 2012

அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

நாம இன்னிக்கு பயன்படுத்துற தொழில்நுட்பங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி, விளையாட்டு சாதனங்கள் இப்படி எல்லாமே அடங்கும்!


ஆனா இந்த வகை தொழில்நுட்பங்கள் எல்லாத்துக்குமே மின்சாரம் அப்படீங்கிற இரண்டாம் பொருள் தேவை கண்டிப்பாக அவசியம். ஏன்னா, இத்தொழில்நுட்பங்கள் எல்லாமே மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் செயலிகளைக் கொண்டது! ஆக, தொழில்நுட்பங்களின் உச்சகட்டமான மொபைல்/நடமாடும் மின்சாதனங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு அதே வகையான நடமாடும் மின்சாரத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

இத்தேவையின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் பேட்டரி (இதுக்கு தமிழ்ல என்னங்க பேரு?). ஆரம்பத்துல ஒரு முறை பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட பேட்டரிக்கள், பணவிரயத்தை குறைக்க மறுசக்தியூட்டப்படும் தன்மையுள்ள பேட்டரிக்களாக (ரேச்சர்கீப்ளே பட்டேரீஸ்) இற்றைப்படுத்தப்பட்டன! அப்படியான ஒரு உச்சகட்ட இற்றைப்படுத்தலின் விளைவாக, அதிநவீன மின்சார நண்பனாக நம்முன்னே நிற்கும் ஒரு பேட்டரியைப் பற்றியதுதான் இன்றைய பதிவு! அது என்னன்னு பார்க்கலாம் வாங்க…..

அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!

www.gadgetreview.com
மறுசக்தியூட்டப்படும் பேட்டரிக்களின் வரிசையில புதுசா வந்திருக்கும் நவீன பேட்டரிக்கள்தான் ‘அசைத்தாலே மறுசக்தி பெற்றுவிடும் (shake to recharge) வகை பேட்டரிக்கள்! இந்த வகை பேட்டரிக்கள் அடிப்படையில் ஒரு ஜெனெரேட்டர்தான் என்றாலும் பேட்டரி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடங்கிவிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.பேட்டரி போன்ற பெட்டிக்குள் அடங்கும் இந்த புதிய வகை மின்சாதனம், 500 mF கெப்பசிட்டன்ஸ் (capacitance) சக்தியுள்ள ஒரு ஜெனெரேட்டரும், கெப்பாசிட்டரும் (generator as well as a capacitor) சேர்ந்த ஒரு கலவை என்பது குறிப்பிடத்தக்கது!

மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தக் கலவை மின்சாதனத்தின் முன்மாதிரி/அடிப்படை மாதிரிகளை (prototypes) உருவாக்கியுள்ள ப்ரதர் நிறுவனம் (Brother Industries), ஜெனெரேட்டர் மற்றும் கெப்பாசிட்டர் ஆகிய இரு சாதனங்களும் பேட்டரி அளவுள்ள இரு பெட்டிகளில் அல்லது ஒரே பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கெப்பாசிட்டர் மட்டும் அதிகபட்ச வோல்டேஜுடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறது!
இந்த வகை பேட்டரிக்கள் AA மற்றும் AAA ஆகிய இருவகையான அளவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
இந்த புதுயுக பேட்டரிகளை மறுசக்தியூட்ட/ரீச்சார்ஜ் செய்ய, அவை பொருத்தப்பட்ட மின்சாதனத்தை அசைத்தாலே போதுமானது என்கிறது. உதாரணத்துக்கு, இப்பேட்டரிக்கள் பொருத்தப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் அல்லது டார்ச் லைட் போன்றவற்றை அசைத்தாலே போதும் உடனே அவை மறுசக்திபெற்றுவிடும் என்கிறது ப்ரதர் நிறுவனம்! அது சரி, இதுதானா நவீனம்ங்கிறது?!
அதெல்லாம் சரி, இப்போ இருக்குற மறுசக்தியூட்டப்படக்கூடிய பேட்டரிக்களுக்கும், இந்த நவீன பேட்டரிக்களுக்கும் பலனளவுல என்ன பெரிய வித்தியாசம் அப்படீன்னு கேட்டீங்கன்னா, இப்புதிய வகை பேட்டரிக்கள்……

சக்தியிழந்தபின் மாற்றும் அவசியத்தை/வேலையை கிட்டத்தட்ட நிரந்தரமாகவே (semipermanently) இல்லாமல் செய்துவிடுமாம்!
ரிமோட் கன்ட்ரோல் மாதிரியான குறைந்த சக்தி மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும் என்கிறார்கள்!
பேட்டரிக்களால் உண்டாகும் மின்சாதனக் கழிவுகளையும் குறைத்துவிடுமாம்!
என்ன, “அட…..இது நல்லாருக்கே” அப்படீன்றீங்களா? உண்மைதான், இந்த மாதிரியான நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படலைன்னா, உலக வெப்பமயமாதலின் பிடியில் சிக்குண்டு தவித்துக்கொண்டிருக்கும் இந்த உலகமும், உலக உயிர்களும் சில நூறு வருடங்களில் காணாமல் போய்விடக் கூடிய பேராபத்தை நாம எதிர்நொக்கியிருக்கிறோம் அப்படீங்கிறத யாரும் மறந்துடாதீங்க!
அதெல்லாஞ்சரி, இந்த புதுவகை பேட்டரி எப்போ சந்தைக்கு வரும்? கூடிய சீக்கிரமே! ஏன்னா, இவ்வாரக் கடைசியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் “Techno-Frontier 2010″ கண்காட்சியில், முதல் முறையாக பார்வைக்கும், மின்விளக்குகள் (LED flashlight) மற்றும் ரிமோட் கன்ட்ரோலில் பொருத்தப்பட்டு செயல்முறை விளக்கத்துடனும் அறிமுகமாக இருக்கிறது இந்த அசைத்தால் மறுசக்தியூட்டப்பட்டுவிடும் புத்துலக பேட்டரிக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...