திங்கள், ஜனவரி 09, 2012

Syedaleem Syedbram கவிதை...

Syedaleem Syedbram
தனிமைச் சிறைகளை,
வாழ்வின் ரணங்களை,
நினைவின் சுமையினை,
பிரிந்த உறவினை,
உள்ளிருக்கும் ஏக்கத்தினை,
... ஏமாந்த கதைதனை,
ஆனந்த நிகழ்வினை,
அழவைக்கும் நிஜத்தினை,
அன்பான காதலை,
உள்ளிருக்கும் அன்பினை,
வருங்கால ஒருத்தியை
வளம் சேர்க்கும் பொழுதினை,
உயிர் கொடுத்த நட்பினை,
என ஏதேனும் ஒற்றை
நிகழ்வில் நிதர்சனத்தை
புரியவைக்க,
நிகழ்கால வலியின்
சுவடை நிஜத்திற்கு
தெரியவைக்க,
புரியாமல் முடிந்து போன
வாழ்வியல் வலியில் இருந்து
என்னை மீட்டெடுக்க
எனக்கும் தேவைபடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...