வெள்ளி, அக்டோபர் 21, 2011

சிரிச்சுக்கிட்டே இருங்க

கீழே நமது நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஜோக்ஸ். சும்மா சொல்லக்கூடாது... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கிறேன்..!!

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”
============================================================
“என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”


=================================================================
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”

*********************************************************************


“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
************************************************************************
“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
*********************************************************************
“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”
“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
“என் தம்பிக்கு”
********************************************************************

“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”
“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”
***********************************************************************
“க்யா சங்கர்ஜி, கானா பஹுத் அச்சா ஹை. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்ன்னு தடபுடலா விருந்து வெச்சிட்டீங்கோ. நாளைக்கும் ஏதாவது விசேஷம் உண்டா?”
“நாளைக்கு மாட்டுப் பொங்கல்”
“சங்கர்ஜி, நீங்கள்ளாம் வெஜிடேரியன்தானே?”
“படுத்தாதய்யா, மாட்டுப் பொங்கல்ன்னா மாட்டை அரைச்சி பொங்கல் பண்றதில்லை, அது ஒரு பண்டிகைய்யா”
***********************************************************************
பிரபல நடிகையைக் கல்யாணம் செய்துகொண்ட அவன், மனைவி மற்றும் நாயுடன் காரில் ஜாலியாக ஒரு ரைட் போகப் புறப்பட்டான்.
டிரெஸ்ஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்திருந்த மனைவியை அவன் அவசரப் படுத்தினான்.
“ம்ம்ம்ஹூம்…. நேரமில்லை, போய்ட்டு வந்ததும் எனக்கு ஒரு அவசர பிஸிநஸ் மீட்டிங் இருக்கு…. உடனே புறப்படு”
நடிகை போட்டது போட்டபடி அப்படியே புறப்பட்டாள்.
கார் ஓட்டிப் போகும்போது யாராவது தவளையைப் பார்த்து பிரேக் போடுவார்களா?
அவன் போட்டான்.
போட்டது மட்டுமில்லை, இறங்கி அதைத் தூக்கி சாலையின் ஓரத்தில் விட்டான். அது ஒரு அபூர்வ சக்தி படைத்த தவளை என்பது அவனுக்கு அதுவரை தெரியாது. தவளை அவனை நன்றியுடன் பார்த்தது.
“இதற்கு நன்றியாக நீ கேட்கும் ஒரே ஒரு ஆசையை என்னால் பூர்த்தி செய்ய முடியும், கேள்” என்றது.
ஆனந்த அதிர்ச்சி அடைந்த அவன்,
“அடுத்தவாரம் ஒரு டாக் ஷோ இருக்கு. அதில என் நாய் ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு நாயை, நான் பார்க்கணும்” என்றது தவளை பர்ஸனல் மேனேஜர் மாதிரி.
நாய் வந்தது.
“சான்ஸே இல்லை. சொறிநாய் மாதிரி இருக்கு, இதையா வளர்க்கறே?”
ஏமாற்றமடைந்த அவன்,
“சரி…. அதே வாரம் ஒரு அழகிப் போட்டி இருக்கு. அதில என் மனைவி ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு அவளை”
வந்தாள்.
தவளை யோசித்தது.
“என்ன யோசிக்கறே?”
“நாயை சரியாப் பாக்கல்லை, மறுபடி கூப்பிடு”

***********************************************************************

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”
===============================================================

ஒரு ஆள் வீட்டை ஒழிக்கும் போது பதினைந்து வருஷத்துக்கு முந்தைய தையற்கடை ரசீது ஒன்று கிடைத்ததாம். நாளைக்கு ஆய்டும், நாளான்னிக்கு ஆய்டும் என்று இழுத்தடித்ததில், சட்டையை வாங்காமலே மறந்து போனது ஞாபகம் வந்தது அவருக்கு.
தையற்காரரை கிண்டல் அடிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு தையற்கடைக்குப் போயிருக்கிறார்.
“என்னப்பா, இப்பவாவது ரெடியாச்சா?” என்று ரசீதைக் கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிப் பார்த்த தையற்காரர் சொன்னது அவருக்குத் தலை சுற்றியதாம்,
“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்”

=================================================================
“முன்ன எல்லாம் கண்ணாடி போடல்லைன்னா வாட்சில டேட் தெரியாது. இப்ப டைமே தெரியலை”
“எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை”

_____________________________________________________________
“உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க”
“போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
==========================================================

“ஹலோ, நான் ராஜேந்திரன் பேசறேன்.. யாரு?”
“கரெக்ட். நீங்க ராஜேந்திரன்தான்”
______________________________________________
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது போன்”
______________________________________________
“ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
“ஐய்யா குளிக்கறாரு”
“சாரிங்க, ராங் நம்பர்”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே பேச முடியுமா?”
“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
=====================================================================

“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
============================================================
“என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
“நம்ம வீட்லதாங்க”
“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
“நம்ம மாடா?”
“ஆமாங்க”
“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
“ஐயய்யோ… எப்பிடிடா?”
“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
“யார்ரா செத்தது?”
“உங்க அம்மா”
“எப்படி செத்தாங்க”
“தூக்கு போட்டுக்கிட்டு”
“ஏன்?”
“அவமானத்திலதான்”
“என்னடா அவமானம்?”
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”
============================================================

எப்பூடி..? கொஞ்சம் கமெண்ட்ஸ் ல உங்க எண்ணங்களை பதிவு செஞ்சுட்டுத்தான் போங்களேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...