செவ்வாய், அக்டோபர் 25, 2011

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170)

இறைவன், அனைத்து மனிதர்களையும், தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின் தூதர் என்பவர், இஸ்லாமிய பார்வையில், நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபி என்பவர் இறைவனின் உதவியுடன், எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார். தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட, இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார்.

வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள். ஆனால் அனைத்து நபிமார்களும், தூதர்களாக ஆக மாட்டார்கள். ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அனைவர்களும் தூதராவார்கள்.

ஏன் ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர். அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை. அவர்களின் மார்க்க போதனைகளும், நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன், மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ, அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார். மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார். யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் (அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால்) இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை. மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது. அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான்.

கட்டுரையின் ஆங்கில மூலம் : www.islamreligion.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...