திங்கள், அக்டோபர் 24, 2011

இன்று கடாபி! நாளை நீங்கள். அதுவரை ஆடுங்கள்...!

வேலிக்கு ஓனாய்
சாட்சியாம்!


மனித நேயம்
பற்றி ஆதிக்க நாடுகள்
கவலை!


ஆதிக்க வெறியர்களின்
கரங்களால்
மனித நேயம்...
மரணமானது!



போர் குற்றத்தை பற்றி
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?


கொடுங்கோல் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி
மனித உயிர்கள்!



கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?


நேட்டோ படைகள்
சொல்கிறது...
கடாபி கதை முடிந்து
விட்டது.
போரும் முடிவுக்கு
வந்துவிட்டதாம் .


எதற்கு போர் ?
ஏன் போர் ?
தன்னை எதிர்த்தால்
இதுதான் கதி!
விடை சொல்லும்
கடாபி கதை .


நேற்றும் ,இன்றும்
கர்வமாய் தொடருகிறது.
போர்க்களத்தில்...




கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!


இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
வஜீரலியின் கவிதைகள்;
அனுப்பியது; இறைநேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...