வியாழன், ஏப்ரல் 19, 2012

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால்

மதுக்கடை என்ற நிலை இன்று.



பள்ளி இல்லாத ஊரிலும்

மதுக்கடை திறக்க வேண்டும்

என்பது "குடி"மக்களின் கோரிக்கை.


பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம்

மதுக்கடைகளால், அரசுக்கு...


உழைத்து வந்தப் பணத்தை

குடித்து வீணடிப்பது முறையா...?




சிந்திப்பீர்....!!!


குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை.

குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா..???


குடி உன்னை தவறார வழியில் இட்டு செல்லும்..

குடியினால் வாழ்விழந்தவர் பலர்....


குடி உனது குடியை மட்டும் கெடுக்காது....


குடி...

உனது விதியை கெடுக்கும்..
உனது மதியையும் கெடுக்கும்.

உனது வீரத்தை கெடுக்கும்..
உனது மானத்தை கெடுக்கும்..

உனது அந்தஸ்தை கெடுக்கும்..
உனது நிம்மதியை கெடுக்கும்.....

ஒட்டு மொத்தமாக
உனது முன்னேற்றத்தை கெடுக்கும்..



அது மட்டுமல்லாது

உலக அரங்கில் ஒட்டு மொத்த உனது சமுதாயத்தின்

அந்தஸ்தையும் குறைத்து விடும்...

(இது போல் ஆங்கங்கே குடித்து விட்டு போதையில் கீழே விழுந்து கிடந்தால்)

மு.மன்சூர் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...