திங்கள், டிசம்பர் 03, 2012

குட்டிக்கதை


ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..

அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..

''பிராமாதம்..'' என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..

கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...