செவ்வாய், செப்டம்பர் 04, 2012

பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ்




சென்னை : பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ் போலீசில் அளித் துள்ள பரபரப்பு வாக்கு மூலம்: எனது பெயர் ஷானு என்ற சஹானாஸ். கேரள மாநிலம் பத்தனம் திட்டா எனது சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்து உள்ளேன். தந்தை சிறு வயதில் இறந்து விட்டார். தாயும் என்னை பிரிந்து சென்று விட்டார். உள்ளூரில் துணிக்கடையில் வேலை பார்த்தேன். வருமா னம் போதுமானதாக இல்லை. இதனால் வறுமை யில் வாடினேன்.

அப்போது, எங்கள் ஊரை சேர்ந்த
சித்திக் என் பவர் எனக்கு பண உதவி செய்தார். முதலில் நட்பாக பழகிய எங்களுக் குள் பின் காதல் மலர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்தது. பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், எங்களுக்குள் சிறு சிறு பிரச்னை ஏற்பட் டது. நாளடைவில் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டோம். குழந்தையை சித்திக் அழைத்து சென்று விட்டார். அவர் இருக்கும் வரை பணத்துக்கு கவலை இல்லை. அவர் சென்ற பின் னர் மீண்டும் வறுமை, கவலை, பசி, பட்டினி தொடர்ந்தது.

இதனால் வேலை தேடி னேன். 2005ம் ஆண்டு இறுதியில் சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆள் தேவை என மலையாள பத்திரிகை ஒன்றில் விளம்ப ரம் வந்தது. அதைப் பார்த்து இங்கு வந்து சம் சுதீன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சில காலம் வேலை பார்த்தேன். பின்னர் தரமணியில் உள்ள கால்சென்டர் ஒன்றில் வேலை கிடைத்தது. அப் போது நிறைய ஆண்களு டன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் நட்பு ரீதியில் பழகினேன். கணவன், குழந்தையை பிரிந்து தனிமையில் இருந்த எனக்கு இளைஞர்களின் தொடர்பு பிடித்திருந்தது.

புது உலகத்தில் இருப் பது போன்று தோன்றியது. அப்படி போன் தொடர்பு மூலம் திருச்சியை சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுலின் தொடர்பு கிடைத் தது. அவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து திருச்சி வேப்பூரில் 6 மாதம் குடும்பம் நடத்தினேன். அவருடனும் பிரச்னை ஏற்பட்டது.

பின்னர், 2009ம் ஆண்டு மீண்டும் வேப்பேரியில் உள்ள சம்சுதீன் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவரிடம் வீடு வாங்க வேண்டும் என்று ஏமாற்றி ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் வாங்கி னேன். பின்னர் அவரை பிரிந்து வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினேன். எல்லோரிட மும் வக்கீல் என்று சொன் னேன். நோட்டரி பப்ளிக் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி அவர்களி டம் ரூ.25 ஆயிரம் வீதம் பணம் பறித்தேன்.

அடையாறு சரவணன் ரூ.25 ஆயிரமும், 2 பவுன் செயினும் வாங்கிக் கொடுத் தார். முகலிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் செய்தேன். 2 மாதங்கள் மட்டுமே அவரு டன் வாழ்ந்த நான் அவரை பிரிந்தேன். இதன் பிறகு யானை கவுனியை சேர்ந்த ஒருவரு டன் பழக்கம் ஏற் பட்டு அவரையும் திருமணம் செய்தேன்.

மணிகண்டனுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு அவருடன் குடும்பம் நடத்தினேன். அதன்பிறகு புளியந்தோப்பு பிரசன்னாவுடன் பழகி திருமணம் செய்தேன். இந்த 4 பேரை மட்டும்தான் திரு மணம் செய்தேன். 50 பேரை நான் திருமணம் செய்ததாக சொல்வது சரியில்லை. திருவொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா, வேப்பேரி சம்சுதீன், புளியந் தோப்பு சுரேஷ் ஆகியோ ருடன் நட்புரீதியாகத்தான் பழகினேன்.

அவர்களை திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர்களின் விருப்பப்படி நடந்து கொண்டேன். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்களு டன் உல்லாசமாக இருந் தேன். தற்போது கர்ப்பமாக உள்ளேன். அதற்கு பிர சன்னாதான் தந்தை. பண ஆசை வாழ்க்கையின் பாதையை மாற்றி விட்டது. இனி என்ன செய்ய போகி றேன் என்று எனக்கு தெரிய வில்லை.இவ்வாறு சஹா னாஸ் வாக்குமூலம் அளித் துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...