வியாழன், ஜூலை 25, 2013

மதத்தை பிரிந்து வந்துவிட்டோம் மனிதத்தை பிரிக்கவில்லை.


ஆடிடர் கொலை வழக்கு இன்னும் குற்றவாளிகள் யாருன்னே தெரியாம ஒரு யூகம் ல இவர்கள்தான் என்று போலீசார் கை காட்டிடாங்க . அதுக்குள்ள இங்க இந்தியா இந்து களுக்கே துலக்கன வெட்டனும் குத்தனும் ஒரு கோஸ்டி கிளம்பிட்டு . அப்படியே ஊருக்குள்ள கலவரம் வந்தாலும் ரம்ஜான் க்கு என் வீட்ல பிரியாணி தின்னவந்தான் என்ன வெட்டனும் இல்லை தீபாவளிக்கு அவன் வீடு சாப்பாடு தின்ன நான்தான் வெட்டனும் அது எங்க ரெண்டு பேருக்கும் மன சாட்சி இடம் தராது .

தமிழ் நாடு சகோதரத்துவம் சாதாரணம் இல்ல . உரிமையா மாமா ,மாப்ள ,சின்னையா தாத்தா ன்னு அழைப்பதும் இப்படி ரத்த பந்தம் இல்லனாலும் உறவோட உரிமை கொண்டாடியாச்சி . இந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது . உதாரணம் என் அப்பா உடைய நண்பர் ஒருவர் ஹிந்து மதத்தை சார்ந்தவர் அவர் பையன் திருமணத்துக்கு கல்யாண பத்திரிக்கை ல உறவினர்கள் பெயரில் " பெரியப்பா " என்று என் அப்பா பெயர் போட்டு கவுரவ படுத்தியது மட்டுமல்லாமல் கல்யாணத்துக்கு வந்த அனைவரிடமும் அறிமுக படுத்தியும் வைத்தார் . எங்க அப்பா தாடியும் வச்சி தொப்பியும் போட்டு கிட்டு கல்யாண நேரம் ல பொண்ணு மாப்ள பக்கத்துல நின்னு பெரியப்பா ஸ்தானம் ல இருந்து கல்யாணத்தை முடித்து கொடுத்தார் .இதெல்லாம் சாதரணமான விஷயம் இல்லை .

ரம்ஜான் க்கு தவறாம பிரியாணி போறதும் அவங்க தீபாவளிக்கு பாய் வீடுக்கு அனுப்புறது பாய் கடைல போய் கறி வாங்குப்பா சொல்றதும் .இதெல்லாம் மதம் கடந்த அழகான புரிதல் கூட சொல்லலாம். இன்றும் கூட எங்கள் வீட்ல பலசர சாமான் செட்டியார் கடைல இருபது வருசமா வாங்குறோம் பக்கத்துல ஒரு முஸ்லிம் கடை இருக்கு அங்க வாங்கினதும் இல்ல . எங்க அப்பா கிட்ட சொன்னா அதுக்கு அவர் சொன்னார் ஒரு நேரத்துல நமக்கு அவசரத்துக்கு செட்டியார் எவளோ கேட்டாலும் சாமான் கொடுத்தவர் இன்று வசதி வந்துட்டுன்னு பக்கத்து கடைல வாங்க கூடாது பழச மறக்க கூடாது சொல்வார் .

ரம்ஜான் மாசம் ல போர் செய்வதை கூட இஸ்லாம் தடுத்துள்ளது அப்படி பட்ட மாதத்தில் ஒரு உயிரை ஒருத்தன் எடுத்து இருக்கான்னா அவன் கண்டிப்பா முஸ்லிம் என்ன மனுசனே இல்ல . மோடி புராணம் பாடுறேன் எங்களை வசை பாடாதிங்க எந்த சொறி நாய்க்கும் நாங்க பயப்படனும் அவசியம் இல்லை .நபிகள் நாயகம் காலத்தில் "332" பேரை கொண்டு ஆயிரகனகானவர்களை "பதர்" என்னும் போரில் சந்தித்தவர்கள் அதில் வெற்றியும் பெற்றவர்கள் .சமாதானம் சகிப்புத்தன்மை உண்டு சண்டைக்கும் நாங்கள் தயாராய் உண்டு .

ஆனால் இன்றைய சூழல் சகோதரர்களா பழகி கிட்டு இருந்த மாற்று மத நண்பர்கள் கூட தோல் ல கை போட்டு சிரிச்சி பேசிட்டு பின்னாடி இந்த துலுகனுங்கல அடக்க மோடி மாதிரி ஆள்தான் வேணும் சொல்றாங்க . அந்த அளவுக்கு மனசுல விஷத்தை விதைத்து விட்டார்கள் இனி வர கூடிய காலங்கள் எப்படி இருக்கும் தெரில .

ஒரு காலத்துல நாங்களும் தேவரா , முதலியாரா , செட்டியாரா இருந்தவர்கள் தான் . கொள்கை வேறுபாடுகளால் மதத்தை பிரிந்து வந்துவிட்டோம் மனிதத்தை பிரிக்கவில்லை.

*****************************************

ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு., அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்....!

அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!

நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி ' (நூல்: புகாரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...