வியாழன், ஆகஸ்ட் 09, 2012

மணித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.க மற்றும் த.மு.மு.க கட்சியினர்


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்
பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தை கேள்விபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம்;இ பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாக குழுமினர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டிட பொறியாளர் குமார்இ பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20இ00இ000ஃ- (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டிட பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும்இ பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும்இ கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது.

ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர்.

தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுகள் என்று தமுமுகவினரை விரட்டி, காரிதுப்பும் அளவிற்கு தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ரூ.6இ00இ000ஃ- (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மணிதநேய பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள் தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழில் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு தமுமுக, மமகவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது.

மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்.

இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது ...

இவர்களின் இந்த இழிவான செயல்களுக்கு இறைவன் மிக விரைவில் ஒரு முற்று புள்ளி வைப்பான் ..இன்ஷா அல்லாஹ்....
— with Jamal Mydeen, முத்துப்பேட்டை முகைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...