ஞாயிறு, மே 06, 2012

தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்.


23: 99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26 தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள். ஷேக்பாபு, அல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர். 42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம். படிப்பினை பெற வேண்டாமா ? தொலைகாட்சிகளைத் திறந்தால், செய்தித் தாள்களைப் புரட்டினால் மேற்காணும் செய்திகள் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு ஃப்ளாஷ் நியூசாக வந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் பிடியில் சிக்கிய சங்கராச்சாரியாவிலிருந்து நித்யானந்தா வரை உள்ள சாமியார்கள் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை கொள்ளைகளை கடவுளின் பெயரால் நடத்தினர், மந்திரவாதிகள் இறந்தவர்களின் ஆவியின் பெயரால் நடத்துகின்றனர். வீட்டுக்கு வீடு டிவி வந்து விட்டாலும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் அவ்வளவாக காண்பதில்லை, காண முடியாத அளவுக்கு சினிமாவும், சீரியல்களும், காமெடி காட்சிகளும் நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டு விட்டதால் இன்னும் கிராமப் புற மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதில் கிராமப் புறத்து மக்கள் மட்டும் விதிவிலக்கல்ல பட்டணத்து ஆபீஸர்களும் கூட இதில் அடங்குவர். ஜெயராமனை கொலை செய்த கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறிய (ஸ்காட்லான்ட் போலீசுக்கு நிகரான தமிழ்நாட்டு) போலீஸ் ஆவி(?)யின் உதவியுடன் தேடி கண்டு பிடிக்கப் போவதாக சமீபத்தில் அடித்த காமெடியைப் படித்து சிரிக்காதவர்களே தமிழ் நாட்டில் இல்லை எனலாம். துடி துடிக்க கொலை செய்யப்பட்டு அகால மரணத்தை அடைந்த ஜெயராமன் ஆவியாக வந்து அவர்கள் குடும்பத்தாரிடம் அல்லது இதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் படையிடம் இன்னார் தான் என்னை கொலை செய்தார்கள் என்றுக் கூறி இருக்கலாம். ஆவி இருப்பது உண்மை என்றால் தேவை இல்லாமல் இந்த போலீஸ் காரர்கள் ஜெயராமன் ஆவியை விட்டு விட்டு வேறொரு ஆவியைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது ? ஆவி என்பது சுத்த ஹம்பக் என்பதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். சமூகவிரோத செயல்களுக்காக. சில பாழடைந்த கட்டடங்களில் ஆவி உலாவுவதாக கூறி அந்த கட்டடத்தை யாரும் விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு, யாரும் குடி இருக்க முடியாத அளவுக்கு, அவ்வழியே நடமாட முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கோயபல்ஸ் ஸ்டைலில் பரப்பி விடுவார்கள் அதனால் அக்கட்டடம் சிதிலமடைந்து கிடக்கும். ஆனால் இரவானதும் அதற்குள் அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் தாராளமாக நடக்கும். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை மட்டும் ஆவி விட்டு வைப்பதெப்படி ? என்பதை பொது மக்கள் சிந்திக்க மறுப்பது ஏன் ? பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ ஒரு பிரசவத்தில் இறந்ததும் முதலில் புர்ஹாம்பூரிள் உள்ள புலாரா மஹாலில் தான் அடக்கம் செய்யப்பட்டார். பிரசவத்தில் இறந்தது தெரிய வந்ததும் புலாரா மஹாலில் மும்தாஜின் அலறும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டனர் அதன் பின்னர் மும்தாஜின் குடும்பத்தார்களே புலாரா மஹாலுக்கு செல்வதை நிருத்திக் கொண்டனர். மும்தாஜின் உடல் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டப் பின்னரும் கூட உடல் தான் அங்கு சென்றது ஆவி இன்னும் இங்கு தான் அலைகிறது என்றுக் கூறி சமூக விரோதிகள் பாதுகாப்பான புலாரா மஹாலை தங்களுடைய சமூக விரோத செயல்களுக்கு பாதுகாப்பான கட்டடமாக ஆக்கிக் கொண்ட செய்தியைப் படித்திருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் ஏராளம் ! ஏராளம் !. சொந்த பிரச்சனைகளுக்காக, தனக்கு கீழ்படியாதவர்களை கீழ்படிய வைப்பதற்காகவும், தனது தேவையை நிரைவேற்றிக் கொள்வதற்காகவும் ஆவி தன்னிடம் வந்து பேசுவதாகக் கூறி ஆவி மூலமாக தனது தேவையை கூறி நிரைவேற்றிக் கொள்பவர்களும் இதில் அடங்குவர். ஆவி இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை. இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம் மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்டதாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள். பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார். இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம். ஆதாரம்:http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF&action=edit§ion=3 ஆவி உண்டென்றுப் புளுகிய பைபிள் ? ஆவி என்ற புருடா கண்டிப்பாக மேலை நாட்டு இறக்குமதி தான், இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்வதை போல் வேலை வெட்டி இல்லாத ஹாலிவுட் சினிமா காரர்கள் சினிமாவில் புகுத்தி மக்களை நம்ப வைத்தனர். சினிமா தான் இப்படி என்றால் சினிமாவை விட மோசமாக உருவாக்கப்பட்ட பைபிளில் இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்யும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அப்பாவி மக்களை நம்ப வைத்தனர். அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். மத்தேயு 10:1 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லியது. லூக்கா 11:24 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின. மாற்கு 5:13 அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர் களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 13:2 என்று ஆவி உண்டு எனும் அறிவுக்கு ஒவ்வாத விஷயத்தை பைபிளில் எழுதி வைத்தனர். பைபிள் இறைவேதம் இல்லை என்பதை பைபிளிலிருந்தே இன்னும் வேறு பல சட்டங்கள் தொடர்பாகவும் நூற்றுக் கணக்கான வசனங்களை எடுத்து தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் நிருபித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அதனால் பைபிளே ஒரு சுத்த ஹம்பக் என்பதால் அதில் ஆவி தொடர்பாக கூறப்பட்ட தகவல்களும் சுத்த ஹம்பக் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆவி இல்லை என்று உரைத்தது இஸ்லாம் மட்டுமே !! எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணித்தப் பின்னர் அவரது உடலிலிருந்து உயிர் முற்றாகப் பிரிந்து படைப்பாளன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் மீண்டும் திரும்பவே திரும்பாது இதில் யாரும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. மனிதர்கள் கண்டு பிடித்த உபகரணங்களில் அவர்கள் வரும்பியவாறு மாற்றி அமைக்கலாம் 110 மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 220 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் 220 மினசாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 110 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் இது போன்ற மாற்றங்களை மனிதன் செய்ய முடியும். உயிர் விஷயத்தில் இறைவனைத் தவிற வேறு எவராலும் எந்த மாற்றத்தையும் செய்ய இயலவே இயலாது உடலை விட்டுப் பிரிந்த உயிர் இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன்; 39:42. ஒன்றுமே இல்லாமல் இருந்தவருக்கு உடல் கொடுத்து உயிர் கொடுத்த இறைவன் அது மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போனப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவும் ஆற்றலுடையவன் என்பதை உறதியாக நம்பும் மக்கள் இறந்தவரின் ஆவி உயிருள்ள யாருடய உடலிலாவது புகுந்து அட்டகாசம் செய்யும் என்றும், இறந்தவரின் ஆவியை அவரது மண்டை ஓட்டுக்குள் புகுத்தி மாந்திரீகம் செய்து எதிராளியின் உயிரை பறிக்க முடியும், கை,கால்களை முடக்க முடியும் என்றெல்லாம் கூறுவதை நம்பி ஏமாறக் கூடாது. மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் மிகப்பெரியத் தடுப்பை ஏற்படுத்தி விட்டதாக ஆற்றல் மிகும் அல்லாஹ் அருள் மறைக் குர்ஆனில் கூறி விட்டான். முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26. திருக்குர்ஆன்; 23: 99, 100. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...