புதன், நவம்பர் 14, 2012

பண்டிகை கால கவனத்திற்கு


1 பகல் இரவு சில மணி நேரம் கூட வீட்டை பூட்டி விட்டு செல்ல நேர்ந்தால் தாங்கள் தகுந்த முன் ஏற்ப்பாடு செய்து விட்டு செல்ல வேண்டும் .

2 . ஓரிரு தினங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல நேர்ந்தால் சம்மந்தப்பட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ (போன் 100 ) தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

3 . வீட்டை விட்டு வெளியூர் செல்ல நேரும் போது விலை உயர்ந்த ஆபரணங்களை வங்கி லாக்கரிலோ அல்லது பாதுகாப்பாக நீங்களே எடுத்து செல்ல வேண்டும்.

4 . இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருந்தால் , அதனை பாதுகாப்புடன் பூட்டி நிறுத்திச் செல்ல வேண்டும்.

5 . காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், ஐந்தாறு பெண்கள் இணைந்து கூட்டமாகவும்,அணிந்திருக்கும் நகைகளை வெளியில் தெரியாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்புடன் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

6 . தாங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் நேரத்தில், உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்களிடமுள்ள பணப்பையை திருடிக்கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. உரிய கவனத்துடன் பாதுகாப்பாக நடந்துகொள்ளுங்கள்.

7 . நீங்கள் அணிந்து இருக்கும் ஆடையின் மீது எச்சில் போன்றவைகளை படிய வைத்து திருடர்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்களிடமுள்ள பணப்பையை திருடிக்கொண்டு செல்ல வாய்ப்புள்ளது விழிப்புணர்வுடன் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்.

8 . 10 ருபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை உங்கள் அருகில் சிதறிவிட்டு திருடர்கள் உங்கள் பணம் கீழே விழுந்துள்ளது என கவனத்தை திசை திருப்பி உங்கள் வாகனத்தில் அல்லது கையில் வைத்துள்ள பணத்தை திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. உங்கள் கவனத்தை சிதறடிக்கதிர்கள்.

9 . உங்கள் பணப்பையை திருடர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து பறித்து செல்ல வாய்ப்புள்ளது , கவனமாக இருங்கள்.

10 . நீங்கள் பணத்தை அதிகமாக கையாள நேரும் சமயத்தில் இரு சக்கரம் மற்றும் பேருந்து பயணத்தை தவிர்த்து இரண்டு நபர்கள் துணையுடன் பாதுகாப்பான நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லுங்கள்...

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...